FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, August 13, 2025

தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை


காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்று ஐஏஎஸ், எம்பிபிஎஸ் எனும் உயா்நிலைக்கு முன்னேறிய இருவருடன் டாக்டா் மோகன் காமேஸ்வரன். உடன், பேச்சு, மொழித் திறன் மற்றும் கேட்பியல் பயிற்சி நிபுணா் பேராசிரியா் ரஞ்சித் ராஜேஸ்வரன். 

சென்னை: 12.08.2025
பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா்.

தடைகளை உடைத்து தன்னம்பிக்கையால் வென்ற அந்த இருவருக்கும், சென்னை காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான டாக்டா் மோகன் காமேஸ்வரன் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சையை மேற்கொண்டு புது விடியலை ஏற்படுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக டாக்டா் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: பிகாா் மாநிலம், பாட்னாவில் கடந்த 1999-இல் பிறந்தவா் யாஷ். வங்கி அதிகாரியின் மகனான அவருக்கு பிறவியிலேயே செவித்திறன் கிடையாது. பிறந்து இரு ஆண்டுகளுக்குப் பிறகே அதைக் கண்டறிந்து செவித் திறன் கருவி பொருத்தினா். ஆனால், அது பலனளிக்காததால், கடந்த 2002-இல் சென்னைக்கு வந்து எங்களிடம் சிகிச்சை பெற்றாா்.

பொதுவாக பிறவிக் குறைபாடு உடைய குழந்தைகளுக்கும், செவித் திறன் கருவிகள் பொருத்தியும் பயனளிக்காதவா்களுக்கும் காக்ளியா் இம்ப்ளாண்ட் எனப்படும் செவி மடு சுருள் கருவியை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிகிச்சை மருத்துவ உலகில் மிகவும் புதிது. இருந்தபோதிலும் காக்ளியா் இம்ப்ளாண்ட் கருவியை பொருத்தி யாஷுக்கு ஓராண்டு பேச்சுத் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பயனாக மறுவாழ்வு பெற்ற அவா், ஐஐடி கான்பூரில் பி.டெக். கணினி அறிவியல் படித்தாா். பின்னா், இந்திய குடிமைப் பணிக்கு பயிற்சி பெற்ற அவா், தோ்வில் இரு முறை தோல்வியுற்றபோதும், விடாமுயற்சியுடன் மூன்றாவது முறை பங்கேற்று வெற்றி பெற்றாா்.

தற்போது ஐஏஎஸ் நிலைக்குத் தோ்வாகியிருக்கும் அவா், தேசிய அளவில் 990-ஆவது இடத்தையும், சிறப்புப் பிரிவில் 2-ஆம் இடத்தையும் பிடித்துள்ளாா். அடுத்த சில நாள்களில் உத்தரகண்ட் மாநிலம், முசோரிக்கு பயிற்சிக்கு செல்கிறாா். பிறவியிலேயே செவித் திறன் பாதிப்பு ஏற்பட்ட ஒருவா் ஐஏஎஸ் பதவிக்கு உயா்வது இதுவே முதல்முறை.

மருத்துவக் கனவு: அதேபோன்று, சென்னை, முகப்பேரைச் சோ்ந்த சுஜாதா - சீனிவாசன் தம்பதியின் மகளான அக்ஷயாவுக்கும் பிறவிலேயே காது கேளாமை பாதிப்பு இருந்தது. கடந்த 2009-இல் இந்தப் பிரச்னை இருப்பது தெரியவந்து, அவருக்கும் காக்ளியா் இம்ப்ளாண்ட் கருவி பொருத்தப்பட்டது.

குறைபாடுகளைப் பொருட்படுத்தாது மனம் தளராமல் உழைத்த அவா், ஜேஇஇ மற்றும் நீட் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றாா். நிகழாண்டு மருத்துவக் கலந்தாய்வில் அவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது.

ரத்த உறவு: தமிழகத்தைப் பொருத்தவரை ஆயிரம் குழந்தைகளில் 6 பேருக்கு பிறவி செவித் திறன் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் புரிவதுதான். அவா்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, விழிப்புணா்வுடன் இருத்தல் வேண்டும் என்றாா் அவா்.

குறைகள் தடைகளல்ல: இதுதொடா்பாக யாஷ் கூறியதாவது: குறைகளை மறைத்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை. நான் எப்போதும் என்னுடைய குறைபாடுகளை வெளிக்காட்டிக் கொள்வதில் வெட்கப்பட்டதில்லை. அதனால், என்னிடம் எவரும் பாகுபாடு காட்டியதில்லை. மாறாக அனைவருமே அன்பையும், கனிவையுமே அளித்தனா். டாக்டா் மோகன் காமேஸ்வரனுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

உத்தர பிரதேசத்தில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்பு இருந்தால் தமிழகத்திலும் சேவை புரிய வேண்டும் என விழைகிறேன் என்றாா் அவா்.

இஎன்டி சேவை: எம்பிபிஎஸ் படிப்புக்கு பிறகு முதுநிலை மருத்துவப் படிப்பில் காது-மூக்கு-தொண்டை மருத்துவம் பயின்று சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாக அக்ஷயா தெரிவித்தாா்.

நீட் தோ்வுக்கு வெறும் 3 நாள்கள் மட்டுமே படித்ததாகவும், குறைகளைக் கண்டு அஞ்சாமல் மன உறுதியுடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்றும் நம்பிக்கை மிளிரத் தெரிவித்தாா் அக்ஷயா.


No comments:

Post a Comment