FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, November 28, 2016

நச்சுகளை சுவாசிப்பதால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு: முதன்மைச் செயலர் நசீமுதீன்

 26.11.2016
காற்றில் கலந்துள்ள நச்சுகளை கர்ப்பிணி சுவாசித்தால், கர்ப்பப் பையில் இருக்கும் சிசுவும் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் முதன்மைச் செயலர் நசீமுதீன் கூறினார்.
மதுரம் நாராயணன் சிறப்பு குழந்தைகளுக்கான மையத்தின் 5-ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் 13-ஆவது தேசிய பயிலரங்கம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் நசீமுதீன் பேசியது:

மருத்துவத் துறையில் நாம் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் உடல்நலக் குறைபாடு, மனநலக் குறைபாடு போன்ற மாற்றுத்திறனோடு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு கருவில் உள்ள குழந்தை காற்றில் கலந்துள்ள நச்சுகளை சுவாசிப்பது, வாழ்க்கை முறை மாற்றம், சிறுவயதுத் திருமணங்கள், நெருங்கிய உறவில் திருமணம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் பருவ வயதில் உள்ள சிறுமிகளில் பெரும்பாலானோர் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதும் பிறவிலேயே குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

உடல் ஊனம் உள்ளிட்ட பிரச்னைகளை கருவிலேயே கண்டறியப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும்.
மேலும் ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகள், அதற்கான காரணங்கள், கருவுற்ற பெண்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எளிய விளக்கக் கையேடு தமிழில் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களில் 60 சதவீதம் பேரால் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, எளிய தமிழில் இதுதொடர்பான கையேடு வெளியிடப்பட வேண்டும்.
தமிழகத்தில் 2010-2011-ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.112 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

"விரைவில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி'
மாற்றுத்திறனாளிகளைக் கணக்கெடுக்கும் பணி தமிழகத்தில் விரைவில் தொடங்க உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முதன்மைச் செயலர் நசீமுதீன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் திட்டப்படி, சென்னை, கோவை மாநகரங்களில் மொத்தம் 25 கட்டடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள், சாய்தளம் உள்ளிட்டவை அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளளது. ரூ.20 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டத்துக்கு முதற்கட்டமாக, ரூ.3.80 கோடி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கு ஏதுவாக, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

No comments:

Post a Comment