FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, November 28, 2016

நச்சுகளை சுவாசிப்பதால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு: முதன்மைச் செயலர் நசீமுதீன்

 26.11.2016
காற்றில் கலந்துள்ள நச்சுகளை கர்ப்பிணி சுவாசித்தால், கர்ப்பப் பையில் இருக்கும் சிசுவும் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் முதன்மைச் செயலர் நசீமுதீன் கூறினார்.
மதுரம் நாராயணன் சிறப்பு குழந்தைகளுக்கான மையத்தின் 5-ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் 13-ஆவது தேசிய பயிலரங்கம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் நசீமுதீன் பேசியது:

மருத்துவத் துறையில் நாம் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் உடல்நலக் குறைபாடு, மனநலக் குறைபாடு போன்ற மாற்றுத்திறனோடு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு கருவில் உள்ள குழந்தை காற்றில் கலந்துள்ள நச்சுகளை சுவாசிப்பது, வாழ்க்கை முறை மாற்றம், சிறுவயதுத் திருமணங்கள், நெருங்கிய உறவில் திருமணம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் பருவ வயதில் உள்ள சிறுமிகளில் பெரும்பாலானோர் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதும் பிறவிலேயே குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

உடல் ஊனம் உள்ளிட்ட பிரச்னைகளை கருவிலேயே கண்டறியப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும்.
மேலும் ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகள், அதற்கான காரணங்கள், கருவுற்ற பெண்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எளிய விளக்கக் கையேடு தமிழில் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களில் 60 சதவீதம் பேரால் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, எளிய தமிழில் இதுதொடர்பான கையேடு வெளியிடப்பட வேண்டும்.
தமிழகத்தில் 2010-2011-ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.112 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

"விரைவில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி'
மாற்றுத்திறனாளிகளைக் கணக்கெடுக்கும் பணி தமிழகத்தில் விரைவில் தொடங்க உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முதன்மைச் செயலர் நசீமுதீன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் திட்டப்படி, சென்னை, கோவை மாநகரங்களில் மொத்தம் 25 கட்டடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள், சாய்தளம் உள்ளிட்டவை அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளளது. ரூ.20 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டத்துக்கு முதற்கட்டமாக, ரூ.3.80 கோடி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கு ஏதுவாக, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

No comments:

Post a Comment