FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, June 5, 2015

மரங்களில் மாற்றுத்திறனாளி போன்சாய்!

போன்சாய் மரங்கள்- இயற்கையாக வளரக் கூடிய மரங்களை குறுகிய தொட்டிக்குள் திணித்து அவற்றை வேர்களை வெட்டி கிளைகளை நாம் விரும்பு திசைகளுக்கு திருப்பி ஒரு மரம் எப்படி இருக்குமோ அதே மாதியாகவே பூ, காய் விழுதுகள் கொடுக்கக் கூடிய மரங்களின் மினியேச்சரைதான் போன்சாய் என்கிறோம்.

சில வருடங்களாக இவை வணிக ரீதியாக அழகுக்காகவும் வாஸ்து உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மக்களிடையே பரவலாக விற்பனையாகின்றன. எந்த தட்ப வெப்ப நிலையிலும் சிறிய அளவிலான தொட்டியில் கூட இந்த மரங்களை வளர்க்க முடியும் என்பதே மக்கள் இந்த வகையான மரங்களை விரும்ப காரணம். பல தலைமுறைகள் வாழக்கூடிய ஆலமரம், அரச மரம் முதலான மரங்களை கூட போன்சாய் மரங்களாக மாற்ற முடியும்.



இப்போது செய்தி இதுவல்ல.சில திருமணங்களிலும், பள்ளிகளிலும் போன்சாய் மரங்களை பரிசுப் பொருட் களாக கொடுத்து அனுப்புகிறார்கள். இயற்கைக்கு மாற்றான இந்த போன்சாய் மரங்களை குழந்தைகளிடம் கொடுத்து ஊக்கப்படுத்துவது எந்த வகையில் சரியாகும்? என்பதை சூழலியலாளர் ரமேஷ் கருப்பையாவிடம் கேட்டோம்.

‘’தாவரங்களைப் பொறுத்தவரை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தட்ப வெப்பநிலை, காற்று, மண் நீர் இவற்றை சார்ந்து வளரும். அதனை இயற்கைக்கு மாற்றாக நம்முடைய விருப்பத்திற்காக அதன் இயல்புத் தன்மையை அடக்கி ஒடுக்கி சுருக்குவதே ஒரு தவறான செயல்தான். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அது இயற்கையை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். இயற்கையின் கூறுகளை வேண்டுமானால் விஞ்ஞானத்தின் உதவியால் தெரிந்து கொள்ளலாம்.



பூகம்பம் ஏன் வருகிறது? வானிலை அறிக்கை என்ன, பாலைவனங்கள் எதனால் உருவாகின்றன என இயற் கையை அறிந்து கொள்ளவே நாம் அறிவியலை பயன்படுத்த வேண்டுமே தவிர, இயற்கைக்கு புறம்பான ஒன்றை செய்ய பயன்படுத்துவதும், அதனால் விளைந்த ஒன்றை குழந்தைகளுக்குப் பரிசளிப்பதும் அதை ஊக்கப்படுத்துவதுமே தவறான செயலாகும்.

மண்ணில் விதை விதைக்கிறோம். விதை முளைக்கிறது, பின்பு செடியாகிறது, பின்பு மரமாகிறது, பூ பூக் கிறது, காய் கனியாகிறது, பூக்களைத் தேடி வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் வருகின்றன.

இயற்கையாய் நிகழும் நிகழும் நிகழ்வுகளை குழந்தைகளுக்கு முன் உதாரணம் காட்டலாமே தவிர, இயற் கையை அடக்கி ஆளும் செய்கையை செய்யவே கூடாது. மரக் கன்றுக்களை பரிசளிப்பது எந்த அளவுக்கு நல்ல விஷயமோ அதேபோல் போன்சாய் மரங்களை தராமல் இருப்பதும் நல்லது. சுற்றுச் சூழலுக்கு நன்மை தரும் வகையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் கல்வாழை செடிகள், வெட்டிவேர் இவற்றையும் பரிசாக கொடுக்கலாமே.

வீட்டை சுற்றிலும் காற்றை சுத்திகரிக்கும் மூங்கில் செடிகள், வேப்ப மரங்கள், மூலிகைச்செடிகள் இவைகளை வைப்பதால் நல்ல காற்றை பெறுவதுடன் இயற்கையோடு சேர்ந்து நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம். அதை விடுத்து மரங்களை அணு அணுவாய் சிதைக்கும் குரூரத்தை செய்வது சரியா..? இயற்கையோடு இணைந்திருப்போமே’’ என்றார் அக்கறையுடன்.
-பொன்.விமலா

No comments:

Post a Comment