FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, June 5, 2015

மரங்களில் மாற்றுத்திறனாளி போன்சாய்!

போன்சாய் மரங்கள்- இயற்கையாக வளரக் கூடிய மரங்களை குறுகிய தொட்டிக்குள் திணித்து அவற்றை வேர்களை வெட்டி கிளைகளை நாம் விரும்பு திசைகளுக்கு திருப்பி ஒரு மரம் எப்படி இருக்குமோ அதே மாதியாகவே பூ, காய் விழுதுகள் கொடுக்கக் கூடிய மரங்களின் மினியேச்சரைதான் போன்சாய் என்கிறோம்.

சில வருடங்களாக இவை வணிக ரீதியாக அழகுக்காகவும் வாஸ்து உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மக்களிடையே பரவலாக விற்பனையாகின்றன. எந்த தட்ப வெப்ப நிலையிலும் சிறிய அளவிலான தொட்டியில் கூட இந்த மரங்களை வளர்க்க முடியும் என்பதே மக்கள் இந்த வகையான மரங்களை விரும்ப காரணம். பல தலைமுறைகள் வாழக்கூடிய ஆலமரம், அரச மரம் முதலான மரங்களை கூட போன்சாய் மரங்களாக மாற்ற முடியும்.



இப்போது செய்தி இதுவல்ல.சில திருமணங்களிலும், பள்ளிகளிலும் போன்சாய் மரங்களை பரிசுப் பொருட் களாக கொடுத்து அனுப்புகிறார்கள். இயற்கைக்கு மாற்றான இந்த போன்சாய் மரங்களை குழந்தைகளிடம் கொடுத்து ஊக்கப்படுத்துவது எந்த வகையில் சரியாகும்? என்பதை சூழலியலாளர் ரமேஷ் கருப்பையாவிடம் கேட்டோம்.

‘’தாவரங்களைப் பொறுத்தவரை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தட்ப வெப்பநிலை, காற்று, மண் நீர் இவற்றை சார்ந்து வளரும். அதனை இயற்கைக்கு மாற்றாக நம்முடைய விருப்பத்திற்காக அதன் இயல்புத் தன்மையை அடக்கி ஒடுக்கி சுருக்குவதே ஒரு தவறான செயல்தான். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அது இயற்கையை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். இயற்கையின் கூறுகளை வேண்டுமானால் விஞ்ஞானத்தின் உதவியால் தெரிந்து கொள்ளலாம்.



பூகம்பம் ஏன் வருகிறது? வானிலை அறிக்கை என்ன, பாலைவனங்கள் எதனால் உருவாகின்றன என இயற் கையை அறிந்து கொள்ளவே நாம் அறிவியலை பயன்படுத்த வேண்டுமே தவிர, இயற்கைக்கு புறம்பான ஒன்றை செய்ய பயன்படுத்துவதும், அதனால் விளைந்த ஒன்றை குழந்தைகளுக்குப் பரிசளிப்பதும் அதை ஊக்கப்படுத்துவதுமே தவறான செயலாகும்.

மண்ணில் விதை விதைக்கிறோம். விதை முளைக்கிறது, பின்பு செடியாகிறது, பின்பு மரமாகிறது, பூ பூக் கிறது, காய் கனியாகிறது, பூக்களைத் தேடி வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் வருகின்றன.

இயற்கையாய் நிகழும் நிகழும் நிகழ்வுகளை குழந்தைகளுக்கு முன் உதாரணம் காட்டலாமே தவிர, இயற் கையை அடக்கி ஆளும் செய்கையை செய்யவே கூடாது. மரக் கன்றுக்களை பரிசளிப்பது எந்த அளவுக்கு நல்ல விஷயமோ அதேபோல் போன்சாய் மரங்களை தராமல் இருப்பதும் நல்லது. சுற்றுச் சூழலுக்கு நன்மை தரும் வகையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் கல்வாழை செடிகள், வெட்டிவேர் இவற்றையும் பரிசாக கொடுக்கலாமே.

வீட்டை சுற்றிலும் காற்றை சுத்திகரிக்கும் மூங்கில் செடிகள், வேப்ப மரங்கள், மூலிகைச்செடிகள் இவைகளை வைப்பதால் நல்ல காற்றை பெறுவதுடன் இயற்கையோடு சேர்ந்து நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம். அதை விடுத்து மரங்களை அணு அணுவாய் சிதைக்கும் குரூரத்தை செய்வது சரியா..? இயற்கையோடு இணைந்திருப்போமே’’ என்றார் அக்கறையுடன்.
-பொன்.விமலா

No comments:

Post a Comment