FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, June 5, 2015

மரங்களில் மாற்றுத்திறனாளி போன்சாய்!

போன்சாய் மரங்கள்- இயற்கையாக வளரக் கூடிய மரங்களை குறுகிய தொட்டிக்குள் திணித்து அவற்றை வேர்களை வெட்டி கிளைகளை நாம் விரும்பு திசைகளுக்கு திருப்பி ஒரு மரம் எப்படி இருக்குமோ அதே மாதியாகவே பூ, காய் விழுதுகள் கொடுக்கக் கூடிய மரங்களின் மினியேச்சரைதான் போன்சாய் என்கிறோம்.

சில வருடங்களாக இவை வணிக ரீதியாக அழகுக்காகவும் வாஸ்து உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மக்களிடையே பரவலாக விற்பனையாகின்றன. எந்த தட்ப வெப்ப நிலையிலும் சிறிய அளவிலான தொட்டியில் கூட இந்த மரங்களை வளர்க்க முடியும் என்பதே மக்கள் இந்த வகையான மரங்களை விரும்ப காரணம். பல தலைமுறைகள் வாழக்கூடிய ஆலமரம், அரச மரம் முதலான மரங்களை கூட போன்சாய் மரங்களாக மாற்ற முடியும்.



இப்போது செய்தி இதுவல்ல.சில திருமணங்களிலும், பள்ளிகளிலும் போன்சாய் மரங்களை பரிசுப் பொருட் களாக கொடுத்து அனுப்புகிறார்கள். இயற்கைக்கு மாற்றான இந்த போன்சாய் மரங்களை குழந்தைகளிடம் கொடுத்து ஊக்கப்படுத்துவது எந்த வகையில் சரியாகும்? என்பதை சூழலியலாளர் ரமேஷ் கருப்பையாவிடம் கேட்டோம்.

‘’தாவரங்களைப் பொறுத்தவரை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தட்ப வெப்பநிலை, காற்று, மண் நீர் இவற்றை சார்ந்து வளரும். அதனை இயற்கைக்கு மாற்றாக நம்முடைய விருப்பத்திற்காக அதன் இயல்புத் தன்மையை அடக்கி ஒடுக்கி சுருக்குவதே ஒரு தவறான செயல்தான். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அது இயற்கையை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். இயற்கையின் கூறுகளை வேண்டுமானால் விஞ்ஞானத்தின் உதவியால் தெரிந்து கொள்ளலாம்.



பூகம்பம் ஏன் வருகிறது? வானிலை அறிக்கை என்ன, பாலைவனங்கள் எதனால் உருவாகின்றன என இயற் கையை அறிந்து கொள்ளவே நாம் அறிவியலை பயன்படுத்த வேண்டுமே தவிர, இயற்கைக்கு புறம்பான ஒன்றை செய்ய பயன்படுத்துவதும், அதனால் விளைந்த ஒன்றை குழந்தைகளுக்குப் பரிசளிப்பதும் அதை ஊக்கப்படுத்துவதுமே தவறான செயலாகும்.

மண்ணில் விதை விதைக்கிறோம். விதை முளைக்கிறது, பின்பு செடியாகிறது, பின்பு மரமாகிறது, பூ பூக் கிறது, காய் கனியாகிறது, பூக்களைத் தேடி வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் வருகின்றன.

இயற்கையாய் நிகழும் நிகழும் நிகழ்வுகளை குழந்தைகளுக்கு முன் உதாரணம் காட்டலாமே தவிர, இயற் கையை அடக்கி ஆளும் செய்கையை செய்யவே கூடாது. மரக் கன்றுக்களை பரிசளிப்பது எந்த அளவுக்கு நல்ல விஷயமோ அதேபோல் போன்சாய் மரங்களை தராமல் இருப்பதும் நல்லது. சுற்றுச் சூழலுக்கு நன்மை தரும் வகையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் கல்வாழை செடிகள், வெட்டிவேர் இவற்றையும் பரிசாக கொடுக்கலாமே.

வீட்டை சுற்றிலும் காற்றை சுத்திகரிக்கும் மூங்கில் செடிகள், வேப்ப மரங்கள், மூலிகைச்செடிகள் இவைகளை வைப்பதால் நல்ல காற்றை பெறுவதுடன் இயற்கையோடு சேர்ந்து நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம். அதை விடுத்து மரங்களை அணு அணுவாய் சிதைக்கும் குரூரத்தை செய்வது சரியா..? இயற்கையோடு இணைந்திருப்போமே’’ என்றார் அக்கறையுடன்.
-பொன்.விமலா

No comments:

Post a Comment