FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, June 5, 2015

மரங்களில் மாற்றுத்திறனாளி போன்சாய்!

போன்சாய் மரங்கள்- இயற்கையாக வளரக் கூடிய மரங்களை குறுகிய தொட்டிக்குள் திணித்து அவற்றை வேர்களை வெட்டி கிளைகளை நாம் விரும்பு திசைகளுக்கு திருப்பி ஒரு மரம் எப்படி இருக்குமோ அதே மாதியாகவே பூ, காய் விழுதுகள் கொடுக்கக் கூடிய மரங்களின் மினியேச்சரைதான் போன்சாய் என்கிறோம்.

சில வருடங்களாக இவை வணிக ரீதியாக அழகுக்காகவும் வாஸ்து உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மக்களிடையே பரவலாக விற்பனையாகின்றன. எந்த தட்ப வெப்ப நிலையிலும் சிறிய அளவிலான தொட்டியில் கூட இந்த மரங்களை வளர்க்க முடியும் என்பதே மக்கள் இந்த வகையான மரங்களை விரும்ப காரணம். பல தலைமுறைகள் வாழக்கூடிய ஆலமரம், அரச மரம் முதலான மரங்களை கூட போன்சாய் மரங்களாக மாற்ற முடியும்.



இப்போது செய்தி இதுவல்ல.சில திருமணங்களிலும், பள்ளிகளிலும் போன்சாய் மரங்களை பரிசுப் பொருட் களாக கொடுத்து அனுப்புகிறார்கள். இயற்கைக்கு மாற்றான இந்த போன்சாய் மரங்களை குழந்தைகளிடம் கொடுத்து ஊக்கப்படுத்துவது எந்த வகையில் சரியாகும்? என்பதை சூழலியலாளர் ரமேஷ் கருப்பையாவிடம் கேட்டோம்.

‘’தாவரங்களைப் பொறுத்தவரை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தட்ப வெப்பநிலை, காற்று, மண் நீர் இவற்றை சார்ந்து வளரும். அதனை இயற்கைக்கு மாற்றாக நம்முடைய விருப்பத்திற்காக அதன் இயல்புத் தன்மையை அடக்கி ஒடுக்கி சுருக்குவதே ஒரு தவறான செயல்தான். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அது இயற்கையை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். இயற்கையின் கூறுகளை வேண்டுமானால் விஞ்ஞானத்தின் உதவியால் தெரிந்து கொள்ளலாம்.



பூகம்பம் ஏன் வருகிறது? வானிலை அறிக்கை என்ன, பாலைவனங்கள் எதனால் உருவாகின்றன என இயற் கையை அறிந்து கொள்ளவே நாம் அறிவியலை பயன்படுத்த வேண்டுமே தவிர, இயற்கைக்கு புறம்பான ஒன்றை செய்ய பயன்படுத்துவதும், அதனால் விளைந்த ஒன்றை குழந்தைகளுக்குப் பரிசளிப்பதும் அதை ஊக்கப்படுத்துவதுமே தவறான செயலாகும்.

மண்ணில் விதை விதைக்கிறோம். விதை முளைக்கிறது, பின்பு செடியாகிறது, பின்பு மரமாகிறது, பூ பூக் கிறது, காய் கனியாகிறது, பூக்களைத் தேடி வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் வருகின்றன.

இயற்கையாய் நிகழும் நிகழும் நிகழ்வுகளை குழந்தைகளுக்கு முன் உதாரணம் காட்டலாமே தவிர, இயற் கையை அடக்கி ஆளும் செய்கையை செய்யவே கூடாது. மரக் கன்றுக்களை பரிசளிப்பது எந்த அளவுக்கு நல்ல விஷயமோ அதேபோல் போன்சாய் மரங்களை தராமல் இருப்பதும் நல்லது. சுற்றுச் சூழலுக்கு நன்மை தரும் வகையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் கல்வாழை செடிகள், வெட்டிவேர் இவற்றையும் பரிசாக கொடுக்கலாமே.

வீட்டை சுற்றிலும் காற்றை சுத்திகரிக்கும் மூங்கில் செடிகள், வேப்ப மரங்கள், மூலிகைச்செடிகள் இவைகளை வைப்பதால் நல்ல காற்றை பெறுவதுடன் இயற்கையோடு சேர்ந்து நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம். அதை விடுத்து மரங்களை அணு அணுவாய் சிதைக்கும் குரூரத்தை செய்வது சரியா..? இயற்கையோடு இணைந்திருப்போமே’’ என்றார் அக்கறையுடன்.
-பொன்.விமலா

No comments:

Post a Comment