FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, April 9, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு 20ல் விளையாட்டு போட்டி


06.04.2022 காஞ்சிபுரம் : மாற்றுத்திறனாளிகளுக்கு, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள், வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.

இதில், ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 20ம் தேதி காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது.தடகள போட்டியில், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் ஆகியோர் பங்கேற்பர்.குழு போட்டிகளாக, இறகு பந்து, மேசைப்பந்து, வாலிபால், எறிபந்து, கபடி போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் நபர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரிலோ அல்லது 74017 03481 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு



05.04.2022 மாமல்லபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் தமிழ்நாடு அரசு காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு, 1 முதல் 10ம் வகுப்பு வரை காது கேளாதோர், வாய் பேச முடியாத மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். நேற்று காலை மாற்றுத்திறனாளி மாணவர்கள், சுற்றுலா நகரமான மாமல்லபுரம் வந்தனர். அங்கு, புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே தலசயன பெருமாள் கோயிலில், அரசின் அன்னதான திட்டம் மூலம் 50க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தினமும் மதிய உணவு அளிக்கப்படுகிறது. இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில், காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்கள் வருகையொட்டி கூடுதலாக 50 பேருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து, உணவு வழங்கப்பட்டது. இதற்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியை மதிய உணவு வழங்கிய கோயில் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.




காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்

05.04.2022 மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்க தொடக்க நிகழ்ச்சி மற்றும் முதல் கூட்டம் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு காது கேளாதோர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு காது கேளாத மகளிர் சங்க தலைவி காயத்ரி, பொதுச்செயலாளர் செல்வகுமாரி, பொதுக்குழு உறுப்பினர் ஷோபனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி ஆணையர் பாலு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காது கேளாத இளம் பெண்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பிரகாஷ், பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Saturday, March 5, 2022

சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

 


03.03.2022 கருப்பூர்:

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனமும், சேலம் மறு வாழ்வு நிறுவனமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாமை சேலம் 3 ரோட்டில் உள்ள மறுவாழ்வு நிறுவன வளாகத்தில் நடத்தின. சேலம் மறுவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் வாசுகி விஜயகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்நலத்துறையின் பேச்சு பயிற்சி மற்றும் செவித்திறன் நிபுணர் ஸ்ரீதேவி, சேலம் பேச்சு பயிற்சி மற்றும் செவித்திறன் பரிசோதனை மையத்தின் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். முகாமில் மாற்றுத்திறனாளிளுக்கு பயிற்சியும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. 


செவித்திறன் பாதித்தவர்களுக்கு ஸ்மார்ட் போன்: விண்ணப்பம் வரவேற்பு

28.02.2022
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஸ்மார்ட் போன் இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 வயது, அதற்கு மேற்பட்ட இளநிலைக் கல்வி பயிலும் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கும் திட்டம் உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்போர், மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்வி, பணி, சுயதொழில் ஆகியவை தொடர்பான சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் மார்ச் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.வருமான உச்சவரம்பு ஏதுமின்றி இத்திட்டத்திற்கு உரிய விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படுகிறது.எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பித்து பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Friday, March 4, 2022

ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி

20.02.2022
மயிலாடுதுறை: குத்தாலத்தில் ரயில் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பொன்மலையைச் சேர்ந்தவர் ராஜு,30. காதுகேளாத மாற்றுத்திறனாளி. பெயிண்டர் ஆன இவர் பொன்மலை ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ராஜ கோபாலபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த இவர் அங்கேயே தங்கி பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை ராஜு ராஜகோபாலபுரம் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




இன்ஸ்டாகிராமில் இணைந்த வாய் பேச முடியாத ஜோடிக்கு கோலாகலமாக நடந்த திருமணம்!


ஆன்லைன் யுகத்தில் தினமும் ஆயிரம் காதல் கதைகள் சோசியல் மீடியா மூலமாக முளைக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் துளிர்விடும் முகம் தெரியாத காதல்கள் அனைத்தும் மணவறையை சென்று அடைவது கிடையாது. ஆனால் வாய்பேச முடியாத ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல், கல்யாணத்தில் முடிந்துள்ளது. மனதை உருக வைக்கும் இன்ஸ்டாகிராம் காதல் கதை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி, ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண். இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி வந்துள்ளனர். ஆரம்பத்தில் நண்பர்களாக பரஸ்பரம் பழக ஒருவரைப் பற்றி, ஒருவருக்கு நன்றாக புரிதல் வந்துள்ளது. புரிதலின் அடுத்தகட்டம் என்ன காதல் தான். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த சிறிது காலத்திற்குள்ளாகவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

வாய்பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகளிடையே உருவான அன்பிற்கு, இன்ஸ்டாகிராமில் ஆதரவு குவிந்தது. இதனையடுத்து அத்ரம் லதா, அருண் திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்க ஜாகிடியலில் உள்ள சமூக சேவகர்கள் குழு முன்வந்தது.

திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தி செய்து, பாரம்பரிய முறைப்படி விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும் இளம் தம்பதி புதிதாக மண வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான பொருட்களையும் வழங்கி வாழ்த்தினர்.

முகமது பாபுஜான், ரியாஸ் மற்றும் கசரபு ரமேஷ் ஆகியோரது சமூக சேவைக்குழு, கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது பலருக்கும் உதவி புரிந்துள்ளது. "கொரோனா தொற்றுநோய் காலத்தில் மக்களுக்கு நாங்கள் உதவிகள் செய்தோம். இப்படியொரு ஜோடிக்கு உதவியதை நாங்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறோம். ஒருவரை ஒருவர் உளமார காதலிக்கும் இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்து, அவர்கள் குடும்பம் நடத்த தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் இதேபோல் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணத்தில் கூட வாய்பேச முடியாத, காது கேளாதவர்கள் விருந்தினர்களாக அதிக அளவில் பங்கேற்றது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்தது. திருமணத்தில் கலந்து கொண்ட சைகை மொழி நிபுணர் ரஜனி பானர்ஜி, தம்பதிகளுக்கும் அவர்களது விருந்தினர்களுக்கும் திருமண மந்திரங்களை சைகை மொழியில் விளக்கியிருந்தார்.

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் சிறப்பாகத் தொடர்புகொள்வதற்காக, டெல்லியில் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2018 இல் 3,000 ISL சொற்களைக் கொண்ட ISL அகராதியின் முதல் பதிப்பை உருவாக்கியது. இதுபோன்ற முதல் அகராதி, 6,000 சொற்களைக் கொண்ட இரண்டாவது பதிப்பில் மார்ச் 2019 இல் புதுப்பிக்கப்பட்டது.