FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, July 7, 2019

This girl is on fire: Vidisha Baliyan is headed to South Africa for Miss Deaf World


Vidisha Baliyan may need to read your lips to understand what you are saying. But this does not seem to be slowing down the 22-year-old beauty contestant from Ghaziabad.

In fact, the model who will represent India at the Miss Deaf World 2019 pageant next week, is moving upward and onward, so fast — one might need to pick up the pace to keep up with her!

The background story that led up to this big moment on a world stage, that will take place on July 12 in South Africa, is however, quite heart-wrenching. And we quickly discover over email correspondence with Vidisha who has 100 per cent hearing loss in her right ear and 90 per cent in her left — that there were many obstacles that stood in her way, owing to repeated rejection and comparison.

Before glamorous shoots could be arrived at, she would need to overcome suicidal thoughts. “When I was in the 6th, 7th and 8th standard, I was seated in a classroom, surrounded by sound and my grades were going drastically down. It left me feeling suicidal and like I was a burden to my family, as I watched my mother crying and helpless,” Vidisha remembers.

Love all, back against the wall
She would go on to find a love, a purpose that would drown out all of this negativity when she started playing tennis in 2010. This game would carry her toward what she calls her “biggest high” in 2017 — representing India in the Deaflympics. But post the competition, doctors told her to give up the game, due to a severe back injury. Vidisha tells us, “I was at my peak. I was living and breathing tennis. It felt like they took away my oxygen.”

It was in the process of coming out of this hopeless place that she heard about the Miss Deaf India pageant, which she went on to win earlier this year. “The format is quite similar to a regular beauty pageant,” Vidisha informs us. “Except, there is no bikini round and the interview round has been removed, though contestants can use sign language and there will be an interpreter to translate,” she elaborates.

Stop and listen
The inspiring youngster was later spotted by Para Olympic silver medallist and Arjuna awardee, Deepa Malik’s foundation, Wheeling Happiness, which agreed to sponsor her and even got her some one-on-one time with former Miss World Manushi Chillar!

So what does she want to change in the world, if she manages to win that crown? “I want to be a role model for the deaf community and I would love to create a foundation that offers emotional, psychological and financial support,” she says, having needed all of the above herself. But the most frustrating obstacle that she has no control over is “going through life being ignored by people, simply because it requires effort to speak to someone with a hearing loss”.

So she implores those who can hear to listen. “Don’t hesitate to repeat your question or reply to ours or add some sign language, whatever you know. Let’s play some dumb charades,” Vidisha suggests with a smile. “We need sensitivity, not sympathy,” she signs off.

Miss Deaf World 2019 will take place in South Africa on July 12.

Gauranshi to represent India in World Youth Deaf Badminton

03.07.2019
Gauranshi Sharma, a day-boarding badminton player trained at the stadium, will represent the Indian team in the Second World Youth Deaf Badminton Championship. The championship will be held in Taipei from China from July 13 to 22, 2019.

Gaurganshi will perform talent in the under-16 category of the girl. Gaurangi Sharma, the talented player of Bhopal, is the only player from Madhya Pradesh who has been selected for this championship.

For partnering with the World Youth Deaf Badminton Championship, Gauruna left for Bhopal from Delhi today. Gauranshi Sharma will participate in the seven-day training camp organised by the Sports Authority of India in Delhi.

Prior to leaving for Delhi, Gaurbanshi accompanied her parents and met the State Sports and Youth Welfare Minister Jeetu Patwari and presented him at his residence. Sports Minister Jeetu Patwari congratulated Gauranshi Sharma for his selection for the World Youth Deaf Badminton Championship.

They greeted Gaurnasi with a good performance in the championship and congratulated the country for winning the title. Kalpival MLA Shri Kunal Chaudhary was also present on this occasion. Gauranshi, Director Sports and Youth Welfare SL Thoussen was also present. Sports Director Thoussen expressed his happiness at being selected in Gaurani Sharma's World Youth Deaf Badminton Championships and encouraged her to excel in the championship for his outstanding performance.

It is worth mentioning that the top eight players from India were called in the trial organized by the Sports Authority of India in the past month. Four of these players were selected, including Gaurnashi.

It is also worth mentioning here that the 12-year-old Gauranshi Sharma, who was studying in Asha Niketan School, is learning the nuances of Badminton Sports from Badminton trainer Rashmi Malviya at the TT Nagar Stadium for the last 3 years.

Tuesday, June 25, 2019

வாய் பேச முடியாத & காது கேளாதமாற்று திறனாளி தங்க மங்கை; வாட்டும் வறுமையால் தவிப்பு

21.06.2019

சேலம்: பல்வேறு பதக்கங்களை குவித்த மாற்றுத் திறனாளி பெண், வறுமையால், சர்வதேச போட்டிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, சித்தர்கோவில் பொன்னகரைச் சேர்ந்தவர் சூர்யா, 25; வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத, மாற்றுத் திறனாளி பெண். வறுமை காரணமாக, பி.காம்., படிப்பை, பாதியில் நிறுத்தி விட்டார். இவருக்கு, கடந்த ஆண்டு திருமணமாகி, சேகர், 30, என்ற கணவர் உள்ளார். இருவரும், வெள்ளி கூலி தொழில் செய்து வருகின்றனர். சூர்யா, சிறுவயதிலிருந்தே தடகளம் விளையாட்டில், ஆர்வம் செலுத்தி வந்துள்ளார்.

மாநில, தேசிய அளவில் பல்வேறு தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார். முறையான பயிற்சி மற்றும் பண உதவி செய்தால், சர்வதேச அளவிலான போட்டிக்கு செல்லும் வாய்ப்புள்ளது.கடந்த, 2017ல் திருநெல்வேலியில், மாநில கைப்பந்து போட்டியில் தங்கம், 2017ல், மாநில தடகள போட்டியில், 800 மீ., ஓட்டத்தில் தங்கம், வட்டெறிதலில் வெண்கலம், 2018ல், கோவையில் நடந்த மாநில ஈட்டி எறிதலில் தங்கம், 2019ல் சென்னையில் நடந்த, 23வது தேசிய கைப்பந்து போட்டியில் வெண்கலம், கோலம், அழகி போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

பதக்கங்களை குவித்து சாதனை படைத்தாலும், போட்டி நடக்கும் பகுதிகளுக்கு செல்ல, பணம் இல்லாமல், கூலி வேலைக்கு செல்கிறார். இவருக்கு உதவ முன்வருவோர், 97891 - 81105, 86674 - 63687 என்ற எண்களில் அழைக்கலாம்.

பிறந்தது முதலே காது கேளாத குழந்தைகளுக்கு ஜிெஹச்சில் சூப்பர் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அசத்தல்

மதுரை, ஜூன் 25: பேச்சு மற்றும் கேட்கும் திறன்களை இழந்து பிறக்கும் குழந்தைகளை 6 வயதிற்குள், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தால் இலவசமாக அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணப்படும் என, மதுரை அரசு மருத்துவமனை ெதரிவித்துள்ளது. இந்திய அளவில் நடந்த ஒரு ஆய்வில், பிறக்கும் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் சிறு சிறு குறைபாடுகள் முதல், சரி செய்ய முடியாத குறைபாடுகள் உள்ளவர்களாக (மாற்றுத் திறனாளிகளாக) பிறக்கின்றனர். இப்படி மாற்றுத் திறனாளிகளாக பிறக்கும் குழந்தைகளில், காதும் கேளாமல், வாயும் பேசமுடியாமல் பிறக்கும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் வைத்தியமே இல்லாத நிலை இருந்தது. பல பெற்றோர் சாபக்கேடு என்று நினைத்து அக்குழந்தையை வீட்டிலேயே சிறை வைத்து விடுவர். 

ஆனால் தற்ேபாது விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. அரிய வகை, அறுவை சிகிச்சையின் போது, சிகிச்சை மேற்கொள்பவரின் இதய ஓட்டத்தை சில மணித்துளிகள் நிறுத்தி, செயற்கை இதய ஓட்டம் மூலம் அறுவை சிகிச்சை முடிந்ததும், மீண்டும் இதயத்தை இயற்கையாக செயல்பட வைக்க முடிகிறது. அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் ஒன்றுதான், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை இழந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நவீன அறுவை சிகிச்சை மூலம் காதுகேட்கும் திறனை செயற்கையாக பெற வைப்பது. மதுரை அரசு மருத்துவமனையில் பிறவியிலேயே முற்றிலும் காது கேளாத, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக `காக்ளியர் இம்ப்ளான்ட்’ (நுண் செவி கருவி) என்ற நவீன காதொலி கருவி இலவசமாக பொருத்தப்படுகிறது. இதுவரை ஏராளமான குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை அறுவை சிசிச்சை துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறுகையில், ``செயற்கை காதொலி கருவி பொருத்தும் சிகிச்சைக்காக, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, குழந்தைகளை கூட்டி வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை செலவாகும், ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் இலவசமாக இக்காதொலி கருவி பொருத்தப்படுகிறது. 6 வயதிற்கு உட்பட்ட பிறவியிலேயே காதுகேளாத குழந்தைகளின் பெற்றோர், அரசின் காப்பீட்டு திட்ட அட்டையுடன் வந்து இந்த சிகிச்சையை இலவசமாக பெறலாம்’’ என்றார்.

Sunday, June 23, 2019

பிறவிலேயே காதுகேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ‘‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’’ அறுவை சிகிச்சை


விழுப்புரம், ஜூன் 22–
பிறவிலேயே காது கேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதி நவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்எம்ஓ கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . காது , மூக்கு, தொண்டைபிரிவு துறை தலைவர் இளஞ்செழியன் வரவேற்றார் . பிறவிலேயே காது கேட்காமல், பேச்சுத்திறன் குறைபாடு இல்லாமல் இருக்கும் குழந்தைளுக்கு கேட்கும், பேசும் திறன் மேம்படுத்தும், அதிநவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சையை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி கட்டளையின் இயக்குனர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் , மெட்ராஸ் மருத்துவ கல்லுாரி இஎன்டி பிரிவு இயக்குனர் முத்துகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த அறுவை சிகிச்சையை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து, அறுவை சிகிச்சை பற்றிய டாக்டரின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூ. 7 லட்சம் வரை செலவாகும். தற்போது அரசு மருத்துவ காப்பீடு மூலம் இலவசமாக செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட இணை இயக்குனர் சுகந்தி, துணை இயக்குனர் பாலுச்சாமி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுாரி இஎன்டி பிரிவு துறை தலைவர் இந்திரா, டாக்டர்கள் வெற்றிவேல், சவுந்திரராஜன், துறை டாக்டர்கள் ரவிக்குமார், விஜயபாபு, ஸ்ரீராம், நிஷாத், சையது அபுதாஹீர் , நிர்வாக அலுவலர்கள் கவிஞர் சிங்காரம் , ஆனந்த ஜோதி மற்றும் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி புரியும் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக பிறந்ததால் விரக்தி 2 வயது மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: போரூரில் சோகம்

22.06.2019, பூந்தமல்லி: போரூர் அருகே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகனை கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. போரூர் அடுத்த தெள்ளியார் அகரம் தெருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (37), பெயின்டர். இவரது மனைவி அஸ்வினி (28). இவர்களது மகன்கள் பிரதீப் (4), சக்திவேல் (2). மூத்த மகன் பிரதீப்புக்கு, வாய்பேச இயலாது, காதும் கேட்காது. அதனால், சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பேச்சு தெரபி பயிற்சி அளித்து வந்தனர். இதற்காக பெற்றோர் ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இளைய மகனான சக்திவேலை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவனுக்கும் வாய்பேச இயலவில்லை, காதும் கேட்கவில்லை என்பது தெரிந்தது. அவற்றை நிவர்த்தி செய்ய முடியாது என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனது 2 மகன்களும் வாய்பேச இயலவில்லை, காதும் கேட்கவில்லையே என்ற மன உளைச்சலில் அஸ்வினி இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மூத்த மகன் பிரதீப்பை, பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வரும்படி கணவரிடம் அஸ்வினி கூறியுள்ளார். அதன்படி அவரும், மகனை அழைத்து சென்று பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பினார். அங்கு, அஸ்வினி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார். மற்றொரு அறைக்குச் சென்று பார்த்தபோது கட்டிலில் இளைய மகன் சக்திவேலும் இறந்து கிடந்தான்.

தகவலறிந்து போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தாய், மகன் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அஸ்வினிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Woman kills son, ends life

22.06.2019, Chennai:
Dejected over the hearing impairment of both her sons, a 24-year-old woman smothered her 2-year-old younger kid and committed suicide in Porur on Friday.

Ashwini smothered Sakthivel with a pillow and committed suicide by hanging from the ceiling at her house. Ashwini’s first son Pradeep, 4, also a hearing impaired, is undergoing speech therapy after surgery at a private hospital.

On Friday, Ashwini, a home maker, asked her husband Mahesh, a painter, to leave Pradeep at her parents' house in Mangadu.

When Mahesh returned home around 1.30pm, he found the door locked from inside.

When repeated knocks went unanswered Mahesh broke open the door and found Ashwini hanging from ceiling and Sakthivel lying unconscious on the bed.

He took them to a private hospital with the help of neighbours.

Doctors at the hospital declared the two brought dead. Their bodies were sent to Kilpauk Medical College Hospital for postmortem.

Mahesh and Ashwini were married for over six years and they spent a large sum on medical expenses of Pradeep who was born speech and hearing impaired.

However, the couple found that their second son Sakthivel too did not respond to calls and took him to a doctor.

When they were told that Sakthivel also suffered from the same problem, Ashwini was dejected for the last few days.

The SRMC police have registered a case. An inquiry has been ordered.

Thursday, June 20, 2019

தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி

17.06.2019
சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் சிறப்புக் குழந்தைகளுக்காக…

இருவர் மூவராய் இணைந்து... பொது இடங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் விரல்களையும் கைகளையும் அசைத்து, சைகை செய்து, தங்களுக்குள்ளாகவே பேசி, சிரித்து, மகிழ்ந்து, பிறகு மீண்டும் விரல்களை அசைக்கும் ‘காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத’ சிறப்புக் குழந்தைகளை பலமுறை பார்த்து கடந்திருப்போம். தங்களின் மௌன மொழியை விரல் அசைவில் வித்தையாக்கி, மனப் பகிர்தல்களை நிறைவேற்றிக்கொள்ளும் இவர்களின் கல்வி, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு குறித்து அறியவும், இவர்களது சைகை மொழி (sign language) குறித்து தெரிந்துகொள்ளவும்,


சென்னை மைலாப்பூரில் இயங்கிவரும் சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான சிறப்புப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் ஆல்ஃபர்ட் அவர்களை சந்தித்தபோது… ‘‘என்னைப் பொறுத்தவரை இயல்பான குழந்தைகள். மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. இவர்களும் திறமையானவர்கள்தான். எந்த விசயத்தையும் விரைவாக கற்கும் திறன் கொண்டவர்கள். சாதாரண குழந்தைகளைப்போல இவர்களும் நன்றாகவே படிக்கிறார்கள். நன்றாகவே செயல்படுகிறார்கள். இவர்களாலும் பார்க்க முடியும். படிக்க முடியும், எழுத முடியும். நன்றாக வேலை செய்ய முடியும்.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். அப்படி இருக்க ஏன் அவர்களை இயலாதவர்களாக முடிவு செய்து குறுகிய வட்டத்திற்குள் அடைக்க வேண்டும். நம் அனைவருக்கும் தெரியாத ஒன்று, வராத ஒன்று என்பது கண்டிப்பாக இருக்கும். அதற்காக நாம் குறையுள்ளவர்களா? காதுகேட்காத வாய்பேச முடியாதவர்களின் குறைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கான வழியினை செய்து கொடுத்துவிட்டால் அவர்களும் நம்மைப்போல் இயல்பானவர்களே.நம் ஒவ்வொருவருக்கும் எப்படி தாய் மொழி என்கிற ஒன்று இருக்கிறதோ அதைப்போல, இவர்களின் தாய் மொழி சைகை எனப்படும் சைன் லாங்வேஜ்.

தங்கள் செவியால் ஒலியை உள்வாங்க முடியாத நிலையில், பேச்சு வராமல், தங்களைப் போன்றவர்களிடம் தொடர்புப்படுத்திக்கொள்ள சைகை மொழியை இவர்களே சுலபமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒலிவாங்கி கருவிகள் மூலமாக இவர்களுக்கு லிப் மூவ்மென்ட் பயிற்சி, ஓரல் மெத்தெட் போன்ற வழிகளில் கற்பிக்க முயற்சித்தாலும், விரல்களை அபிநயித்து, காற்றில் அசைந்து இவர்கள் காட்டும் சைகை மொழியே இவர்களுக்கு சுலபமானது. அவர்களுக்கான மொழி அது. அதை ஏன் நாம் தடுக்க வேண்டும்? இவர்களின் வாழ்க்கை எப்போதும் குறுகிய வட்டம்தான்.

நம்மோடு இணைய முற்படவேமாட்டார்கள். பெரும்பாலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் உணர்வுகளை நம்மாலும் புரிந்துகொள்வது கடினம். தங்கள் உணர்வை வெளிப்படுத்த முடியாத நிலையில் அதிகம் முன்கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். ஒருசிலரை மட்டுமே தங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நினைப்பார்கள். அவர்கள் சொன்னால் உடனே கேட்பார்கள். எங்களிடம் 130 குழந்தைகள்வரை உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களாக இங்கேயே தங்கி பயில்கிறார்கள். கல்வி, தங்கும் இடம், உணவு, சீருடை இவர்களுக்கு இலவசம். 

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள். ஒருசில குழந்தைகள் தவிர, பெற்றோர் இல்லாத, அப்பா மட்டும் இல்லாத, விவாகரத்துப்பெற்ற, சிங்கிள் பேரண்ட் குழந்தைகள் என எல்லோரும் கலந்தே இங்கு தங்கிப் படிக்கிறார்கள். ஓரளவுக்கு வசதியோடு, பணம் செலுத்த முடிந்தவர்களாக இருந்தால் அவர்களிடம் மட்டும் குறைந்த அளவிலான கல்வி கட்டணத்தை பெறுகிறோம். இயல்பான குழந்தைகளுக்கு இணையாக இவர்களையும் மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஸ்கூல் ஆஃப் எஜுகேஷனோடு இணைந்து சமச்சீர் கல்வியினை இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வழங்குகிறோம்.

இங்கு 6 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியும், கார்பென்டரி பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் மாணவர்களில் மேலே படிக்க விரும்பும் மாணவர்களை, இவர்களுக்கென இயங்கும் செயின்ட் லூயிஸ் கல்லூரி, எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி போன்ற சிறப்புக் கல்லூரிகளில் படிக்க ஏற்பாடு செய்து தருகிறோம். படிப்பை முடித்து வேலை என்று வரும்போதுதான் இவர்கள் சிக்கலில் மாட்டுகிறார்கள். எந்த நிறுவனமும் இவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தர முன்வருவதில்லை.

பள்ளி இறுதி முடித்ததுமே நாங்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிடுகிறோம். வாய்ப்பு கிடைக்கும் குழந்தைகள் கல்லூரிக்குள் நுழைந்து விடுகிறார்கள். மீதி குழந்தைகளின் நிலை? அப்பா, அம்மா இல்லாத குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளாக இருந்தால் வாய்பேச முடியாத நிலையில் வெளியில் சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்ய முடியும்? சில வருடங்கள் கழித்து மீண்டும் இந்தக் குழந்தைகளை சந்திக்கும்போது தங்களின் உணவு மற்றும் அடிப்படைத் தேவைக்காக பிட்பாக்கெட் திருடர்களாகவும், சமூகவிரோதிகளாகவும், வேறுமாதிரியான நிலைக்கும் மாற்றப்பட்டு இருப்பார்கள்’’ எனத் தன் ஆதங்கத்தை மிகவும் வேதனையோடு தெரிவித்தார்.

‘‘இவர்களின் நலன் கருதி, இவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை நாங்கள் எங்கள் பள்ளி வளாகத்திலேயே நடத்தினோம். 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். அதில் நிறைய பெண் குழந்தைகள் இருந்தார்கள். எங்களை அதள பாதாளத்தில் தள்ளிய மாதிரியான நிலையில் இருக்கிறோம், மிகவும் கஷ்டமான சூழல் எனவும் வாய்ப்பு கேட்டு பல மாணவர்கள் வந்தார்கள். அந்த நிகழ்வு எங்களுக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. ‘பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடு’ என்ற பழமொழி உண்டு.

வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டால் தங்கள் பசிக்காக பிட்பாக்கெட் அடிப்பது, திருடுவது, வேறு மாதிரியான தவறான செயல்களுக்குள் தங்களை திசை திருப்புவது என செல்ல மாட்டார்கள் என முடிவு செய்தோம். தொழில்முறை பயிற்சியை இவர்களுக்கு வழங்கலாம் என முடிவு செய்து பள்ளியிலேயே கம்ப்யூட்டர், தையல், ஆர்கானிக் தோட்டம் அமைத்தல், மாடித் தோட்டம் செய்வது, ப்யூட்டி பார்லர், பேக்கரி மேக்கிங், கார்பென்டரி பயிற்சிகளை, முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு சொல்லிக்கொடுக்கத் தொடங்கினோம். எதை எல்லாம் கண்ணால் பார்த்து அவர்களால் செய்ய முடிகிறதோ அவற்றை வேலை வாய்ப்பிற்காக பயிற்சிகளாகத் தேர்ந்தெடுத்து செய்ய வைத்தோம்.

இதுவரை 250 மாணவர்கள் எங்கள் நிறுவனத்தில் பயிற்சி எடுத்துள்ளனர். 210 பேர் வரை வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். ஐ.டி,, ரிலையன்ஸ், மேக்ஸ், கே.எப்.சி. போன்ற நிறுவனங்களில் பணிவாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்துள்ளது. மேலும் சோலார் தயாரிப்பு, லாண்டரி பயிற்சி, பாக்குமட்டையில் தட்டு, டம்பளர் தயாரிப்பு போன்றவற்றுக்கு பயற்சி கொடுப்பதற்கான முயற்சியிலும் உள்ளோம். பயிற்சிகளை வழங்கத் தேவையான இடவசதி, ஆய்வக வசதி போன்றவைகள்தான் எங்களின் பிரச்சனையாக உள்ளது. பொருளாதார சிக்கலினாலும் ஒவ்வொன்றையும் மெதுவாகச் செய்யும் நிலையும் ஏற்படுகிறது.

நாங்கள் வழங்கும் பயிற்சிகள், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கு மட்டும் என்கிற நிலையைக் கடந்து தற்போது, ஆட்டிசம் குறைபாடு, மாற்றுத் திறனாளி மாணவர்கள், மாற்றுப் பாலினத்தவர் (trans gender) என விரிவடைந்திருக்கிறது. பயிற்சி முடிக்கும் காலம்வரை இவர்களுக்கு உணவும், தங்குமிடமும் முற்றிலும் இலவசம். வாய்பேச முடியாத பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்தோடு வருகிறார்கள். பெற்றோர்களாலும் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்களுக்கென குடும்பநல ஆலோசனையும் (family counselling) இங்கு வழங்கப்படுகிறது.

வாய்ப்பை எதிர்நோக்கி இங்கு வரும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வருமானம் ஈட்ட வழிவகை செய்யும், மெஹந்தி ஆர்ட், ஃபேஷன் மேக்கிங், ஜுவல்லரி மேக்கிங் போன்றவற்றை கற்றுத்தர விரும்பும் தன்னார்வலர்கள் தாராளமாக எங்களை அணுகலாம்’’ என முடித்தார். பிளாரன்ஸ் அம்மையார் அவர்கள் 1886ல் பாளையங்கோட்டையில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான முதல் பள்ளியை தொடங்கினார். அப்போது சென்னையில் இருந்து பாளையங்கோட்டை சென்று நிறைய குழந்தைகள் படித்தனர். எனவே சென்னையிலேயே ஒரு பள்ளியைத் துவங்க முடிவு செய்தார். சென்னை திருவல்லிக் கேணி பகுதி இஸ்லாமிய சமூக மக்கள் அதிகமாக வாழும் பகுதி.

இவர்கள் ஒரே ரத்த உறவில் திருமணம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், இவர்களது குழந்தைகள் அதிகம் இப்பிரச்சனையால் பாதிப்படைந்திருந்தனர். எனவே சி.எஸ்.ஐ.காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர் பயிற்சி நிறுவனம் மைலாப்பூரில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 20 மற்றும் 30 வயதிற்குமேல் பேசமுடியாத நிலையில் சுற்றித் திரிந்தவர்களை அழைத்து, தொழில் பயிற்சியாக வெல்டிங், லேத், கார்பென்டரி, டெய்லரிங் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் இங்கு பயிற்சி எடுத்தவர்கள் அதிகமாக அசோக் லேலாண்ட் போன்ற நிறுவனங்களில் பிட்டர், வெல்டராகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.

பலர் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளில் வேலை கிடைத்து சென்று பரவலாக குடும்பமாக செட்டிலாகிவிட்டார்கள். தொடர்ந்து 1912ல் அதே வளாகத்திற்குள் ஜனனா மிஷினரி சொஷைட்டி ஆஃப் இங்கிலாந்து நிறுவனத்தால் சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஜனனா என்றால் பரிதாபத்திற்குரிய பெண்கள் என்கிற அர்த்தம். 1927ம் ஆண்டு வளாகத்திற்குள் ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவர முடிவு செய்தனர். தற்போது எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்புவரை இதில் உள்ளது. ஹியரிங் எய்ட் கண்டுபிடிப்பதற்கு முன்பாக புனல் வழியாக மைக் வைத்து சொல்லித்தரும் கற்றல் முறை இருந்துள்ளது.

இதில் பல கட்ட பயிற்சிகளும் உண்டு. 1947ல் தமிழ்வழி் கல்வி கொண்டுவர முடிவு செய்தார்கள். அத்தோடு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி சைன் லாங்வேஜ் மற்றும் வாய்வழிக் கற்றல்(oral) முறையையும் தொடங்கினார்கள். முறையாகப் பயிற்சி கொடுத்தால் இவர்களையும் பேசவைக்க முடியும் என முடிவு செய்து, லிப் ரீடிங் முறை கொண்டு வரப்பட்டது. லிப் ரீடிங் முறை முதலில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியாகத் வழங்கப்பட்டது. புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளுக்கும், ஒரே மாதிரி ஒலி வடிவம் கொண்ட வார்த்தைகளையும் புரிய வைப்பதற்கு சைன் அண்ட் லிப் ரீடிங் இரண்டையும் பயன்படுத்தி இவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. கோயம்புத்தூர், திருவனந்தபுரம், மும்பை, ஆந்திரா போன்ற இடங்களில் இந்தியன் சைன் லாங்வேஜ் என்றே தனியாக பயிற்சிப் பள்ளிகள் இவர்களுக்காக உள்ளது.