FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, November 15, 2020

செவிப்புலன் தொடர்பில் பள்ளிகளில் பாலர்களுக்கு கூடுதல் ஆதரவு

 
13.11.2020
முதன்­மு­றை­யாக காது கேளாத பிள்­ளை­க­ளுக்கு கல்வி அமைச்­சின் பாலர் பள்ளி ஒன்று கூடுதல் ஆத­ரவு வழங்­க­வுள்­ளது.

அடுத்த ஆண்டு முதல் செயல்­ப­டத் தொடங்­கும் இந்­தப் பாலர் பள்­ளி­யில் சைகை மொழி கற்­பிக்­கப்­படும். செவிப்­பு­ல­னில் மித­மான பாதிப்பு முதல் கடும் பாதிப்பு வரை­யி­லான நிலை­யில் உள்ள மாண­வர்­கள் இப்­பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர்.

இளம் வய­தி­லேயே சிங்­கப்­பூர் சைகை மொழி­யில் அடிப்­படை மொழித் தேர்ச்­சி­நி­லையை இவர்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­பது இப்­பு­திய திட்­டத்­தின் இலக்கு.

இந்த ஆத­ரவு கிட்­டு­வ­தால், கேட்­கும் திற­னு­டைய அவர்­க­ளின் நண்­பர்­க­ளைப் போலவே காது கேளாத சிறார்­களும் அதே பாடத்­திட்­டத்­தைக் கற்க முடி­யும்.

இதற்­கா­கவே சைகை மொழி ஆசி­ரி­யர் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­து­டன் பேச்சு, மொழி தொடர்­பில் சிகிச்சை அளிக்­கும் நிபு­ணர்­க­ளின் சேவை­யை­யும் பிள்­ளை­கள் பெற்­றுக்­கொள்­ளும் வசதி உண்டு.

அங் மோ கியோ­வில் உள்ள மேஃபிளவர் தொடக்­கப்­பள்­ளி­யில் இந்­தப் புதிய பாலர் பள்ளி அமை­ய­வுள்­ளது.

ஆண்­டுக்கு 120 பிள்­ளை­கள் பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர். காது கேளாத ஏழு முதல் 10 பிள்­ளை­கள் ஒவ்­வொரு நிலை­யி­லும் 2022ஆம் ஆண்டு முதல் பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர்.

“இத்­த­கைய ஆத­ர­வால் நம் கல்வி அமைப்­பு­ மு­றை­யின்கீழ் மேலும் சிறந்த வழி­யில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்க முடி­யும்,” என்­றார் கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங்.


விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி

13.11.2020
விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் சார்பில் ஆதரவற்றோர் பள்ளிகள், ஆசிரமங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார். பாதுகாப்பு மைய முதன்மை செயல் அதிகாரி பானுமதி மணிகண்டராஜன் முன்னிலை வகித்தார். அதில், 45 சிறப்பு மாணவர்களுக்கு பட்டாசு, இனிப்புகள் வழங்கினர்.திருக்கோவிலுார் ஹன்னா ஜான் ஊனமுற்றோர் ஆசிரம், விருத்தாசலம் வள்ளலார் குருகுலத்தில் உள்ள சிறுவர் மற்றும் முதியவர்கள் உட்பட75 பேருக்கு இனிப்புகள், பட்டாசுகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டன.

ஆசிரம பணியாளர்கள், ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். மைய உறுப்பினர்கள் ஸ்டாலின், பார்த்தசாரதி, வினோத் உட்பட பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.


Wednesday, October 21, 2020

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை


20.10.2020
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா தலைமையில் நடந்த இந்த ஏலத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கையை ஏற்று, மாற்றுத் திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் வாகன ஏலம் தனியாக நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களும் கலந்துகொண்டு, 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் கிடைக்க ஏற்ப்பாடு செய்த மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியாவுக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் செல்வநாயகம், பகத்சிங் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


பெரியநாயக்கன்பாளையம் அருகே அண்ணனை அடித்துக்கொன்ற காது மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கைது

21.10.2020
இடிகரை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 57). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தெய்வானை. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராமகிருஷ்ணனின் தம்பி லட்சுமணன் (48). பிறவியிலேயே காது மற்றும் வாய்பேச முடியாது. இவருக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமணன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 4-ந் தேதி ராமகிருஷ்ணன் தனது தம்பி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டை ஏன் சுத்தம் செய்யாமல் இருக்கிறாய்? என்று சைகை மூலம் லட்சுமணனிடம் கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தனது அண்ணன் ராமகிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து மயக்கத்தில் இருந்து எழுந்த ராமகிருஷ்ணன் வழக்கம்போல் வேலையை பார்த்தார். ஆனால் 4 நாட்களுக்கு பிறகு அவருக்கு தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீரபாண்டி பிரிவு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கடந்த 16-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தலைக்குள் ரத்தம் உறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தலையில் இரும்பு பெட்டி அடித்தாக அவரின் தம்பி லட்சுமணன் போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரின் செயலில் சந்தேகம் அடைந்து துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

அத்துடன் மாற்றுத்திறனாளிகளிடம் சைகை பாஷை பேசும் ஒருவர் வரவழைக்கப்பட்டு லட்சுமணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது அண்ணனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் லட்சுமணனை கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே அண்ணனை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tuesday, October 20, 2020

Players Going For Glory At National Zone Cricket Championship League For Deaf

20.10.2020
Highlights
  • The 2nd ODI National Zone Cricket Championship League for Deaf is going to be played in New Delhi from March 1 to 5, 2021.
  • Deaf cricketers from different parts of the country shall be displaying their talents.
  • The aim is to nurture talent which can then do us proud at the national level.
The 2nd ODI National Zone Cricket Championship League for Deaf is going to be played in New Delhi from March 1 to 5, 2021. Deaf cricketers from different parts of the country shall be displaying their talents. The Indian Deaf Cricket Association which is recognised by the Deaf International Cricket Council is organising it.

“We are really excited to be hosting this tournament. This will be the best platform for all cricketing talent in India to come and showcase themselves. This tournament will definitely encourage the Indian players and give them the confidence to play at the International level,” said Sumit Jain, President of Indian Deaf Cricket Association, as per the official release.

“This will be an important test for all our players as the team for DICC World Cup 2021 will be chosen from among these players. This is their opportunity to reserve a spot in Team India for the World Cup. I would like to wish each player the very best.” he added.

Registration has already begun from September 15.

“IDCA is managed by differently-abled members who are committed to proving they are a reflection of the immense capabilities existing within each of us. Young auditory-challenged cricketers in the organization are striving to promote and upgrade cricket as a professional sport among themselves. Nonetheless, we believe a greater degree of support from official cricket bodies would help these players put in better performances,” said Reena Jain Malhotra, a patron of the IDCA.

Cricket for Hearing Impaired: IDCA set to organise 2nd national zonal meet in March next year


17.10.2020
NEW DELHI: The Indian Deaf Cricket Association (IDCA) will be conducting the second inter-zonal championship for the hearing impaired in the capital from March 1-5 next year.

The tournament will serve as a selection trial for the Indian hearing impaired team that will take part in the Cricket World Cup for the Deaf, scheduled in the UAE in November next year.

IDCA president Sumit Jain said: "We are really excited to be hosting this tournament. This will be the best platform for all cricketing talent in India to come and showcase themselves.

"This tournament will definitely encourage the Indian players and give them confidence to play at the International level."


காது கேளாத மாணவர்களுக்காக சைகை மொழி புத்தகங்களை வடிவமைக்க புதிய ஒப்பந்தம்….

18.10.2020
இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் என்சிஇஆர்டி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாத குழந்தைகள், சைகை மொழியில் பாடப்புத்தகங்களையும் பிற கல்வி உபகரணங்களையும் உபயோகப்படுத்திக் கற்க முடியும்.

குழந்தைப் பருவத்தில்தான் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் வளர்கின்றன. அதனால் அப்போதில் இருந்தே அவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப, கல்வி உபகரணங்களை வழங்க வேண்டியது அவசியம். இதுநாள் வரை காது கேளாத மாணவர்கள், வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ கற்றலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போது காது கேளாத மாணவர்கள், இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் வகையில் என்சிஇஆர்டி, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மெய்நிகர் முறையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

இதுகுறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறும்போது, ''இந்திய சைகை மொழியில் இனி என்சிஇஆர்டி புத்தகங்களும் பிற கற்றல் உபகரணங்களும் கிடைக்கும். இதன்மூலம் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் காது கேளாதோர் சமூகத்தினர் மிகுந்த பயன் பெறுவர்'' என்றார்.

ஹத்ராஸ் சோகம் மறையும் முன்பு குஜராத்தில் அதிர்ச்சி : 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார கொலை

18.10.2020
பனஸ்காந்தா,:குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி (பேசும் திறனற்ற, காதுகேளாத மாற்றுத்திறனாளி) 2 தினங்களுக்கு முன்பு மாயமானார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் டான்டிவாடா போலீசார் சிறுமியின் சடலத்தை அதேபகுதியில் மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘12 வயது சிறுமி முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். தற்போது, ​​இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட குற்றவாளி சிறுமியின் உறவினர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை சம்பவ நாளில் தன்னுடன் பைக்கில் அழைத்துச் சென்றார். இந்த நபர் முதலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார், தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர். இதுகுறித்து எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், ‘குஜராத்தில் பாரத மாதாவின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறினோம். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இப்போது குஜராத்தின் டான்டிவாடாவில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வளர்ச்சி? இங்கே சட்டம்ஒழுங்கு கெட்டுள்ளது’ என்றார்.


Thursday, October 8, 2020

மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம்: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

07.10.2020
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாற்றுத் திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டிலும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் தையல் பயிற்சி பெற்றிருப்பின் அவா்களுக்கு இயந்திரம் வழங்கப்படுகிறது. 75 சதவிகிதத்துக்கு மேல் மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகளின் தாய்மாா்கள் இத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றவராக, வேறு அரசுத் திட்டங்களில் தையல் இயந்திரம் பெறாதவராக இருத்தல் வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பமுடையோா் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, தையல் பயிற்சி பெற்ற சான்று, குடும்ப அட்டை, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகலுடன், புகைப்படத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் பின்புறம், கண்டோன்மென்ட், திருச்சி-1 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.