FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, July 1, 2013

அரசு காதுகேளாதோர் உயர்நிலை பள்ளி...மூடும் அபாயம்! வாய்பேசாத மாணவர்களின் எதிர்காலம்?


25.06.2013
ஊட்டி:ஊட்டி அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளி, "மூடுவிழா' காண தயாராகி வருகிறது.

ஊட்டியில், கடந்த 1975ல், அரசு காது கேளாதோர் ஆரம்பப்பள்ளி துவங்கியது. விடுதியுடன் கூடிய இப்பள்ளியில், நீலகிரி உட்பட, பிற மாவட்டங்களை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். சைகை மொழி உட்பட பிரத்யேக பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கல்வி துறை கட்டுப்பாட்டில் இருந்த இப்பள்ளி, கடந்த 1984ல், சமூக நலத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

வளர்ச்சியும், வீழ்ச்சியும்::
இப்பள்ளி கடந்த 1996ல், உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது; 130 குழந்தைகள் படித்து வந்தனர். நாளடைவில், மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, நடப்பாண்டு 29 பேர் மட்டுமே உள்ளனர். பள்ளியில், மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்குள்ள 3 வகுப்பறைகள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக பயன்பாட் டுக்கு வழங்கப்பட்டுவிட்டது. பெரிய அறையில் இருந்த ஆய்வுக் கூடம், மிகச் சிறிய அறைக்கு மாற்றப்பட்டுள்ளது. தவிர, இப்பள்ளியை ஈரோடு அரசு காதுகேளா தோர் பள்ளியோடு இணைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது, என கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் குமுறல்::
சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "மாவட்டத்தில் வாய் பேச முடியாதோர் 119, காது கேளாதோர் 89 பேர் உள்ளனர் என, எஸ்.எஸ்.ஏ., கூறுகிறது. வாய் அசைவு, மனநிலை அறிந்து, கல்வி போதித்தால் மட்டுமே, வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியரின் மனதில் பாடங்களை புரிய வைக்க முடியும். மாறாக, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அத்தகைய முறையில் பாடங்கள் போதிக்கப்படுவதில்லை. மாறாக, 8ம் வகுப்பு வரை, அத்தகைய மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகங்கள் "பாஸ்' செய்து விடுகின்றன. 9ம் வகுப்பு வந்தவுடன், அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு அனுப்பி விடுகின்றன. இதனால், சிறப்பு பயிற்சி உபரகணம் மூலம் அவர்களுக்கு பாடங்களை புரிய வைக்க சிரமப்பட வேண்டியுள்ளது' என்றனர்.

ஏன் இந்த முரண்பாடு::
பெயர் சொல்ல விரும்பாத மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) ஒருங்கிணைந்த கல்வி முறையின் கீழ், வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியர், சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி வாழாமல், நல்ல நிலையில் உள்ள மாணவ, மாணவியருடன் இணைந்து படிக்க வேண்டும், என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, சாதாரண பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இதனால் தான், அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைகிறது. சாதாரண பள்ளிகளில், அவர்களுக்குரிய பிரத்யேக முறையில் கல்வி போதிக்கப்படுவதில்லை. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றால், அரசின் ஒருங்கிணைந்த கல்வி முறையை எதிர்ப்பதாக கூறி, எங்கள் மீது நடவ டிக்கை எடுத்து விடுவார்கள்' என்றார்.

பிரத்யேக ஆசிரியர்கள் இல்லை::
அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூறுகையில்,"சாதாரண பள்ளிகளில் படிக்கும், வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியருக்கு கல்வி போதிக்க, சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. மாறாக, அத்தகைய மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி போதிக்க வேண்டும் என்ற பயிற்சியை, எஸ்.எஸ்.ஏ.,வின் ஆசிரியப் பயிற்றுனர்கள் மூலம், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. அப்பயிற்சியை அடிப்படையாக வைத்து தான் சாதாரண பள்ளி ஆசிரியர்கள் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியருக்கு கல்வி போதிக்கின்றனர்' என்றனர்.

கல்வி கொள்கையில் உள்ள இத்தகைய முரண்பாடுகளால், அரசு காது கேளாதோர் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது. இதில் உள்ள குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு காதுகேளாதோர் பள்ளியை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thanks to Dinamalar.

No comments:

Post a Comment