FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, July 1, 2013

அரசு காதுகேளாதோர் உயர்நிலை பள்ளி...மூடும் அபாயம்! வாய்பேசாத மாணவர்களின் எதிர்காலம்?


25.06.2013
ஊட்டி:ஊட்டி அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளி, "மூடுவிழா' காண தயாராகி வருகிறது.

ஊட்டியில், கடந்த 1975ல், அரசு காது கேளாதோர் ஆரம்பப்பள்ளி துவங்கியது. விடுதியுடன் கூடிய இப்பள்ளியில், நீலகிரி உட்பட, பிற மாவட்டங்களை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். சைகை மொழி உட்பட பிரத்யேக பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கல்வி துறை கட்டுப்பாட்டில் இருந்த இப்பள்ளி, கடந்த 1984ல், சமூக நலத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

வளர்ச்சியும், வீழ்ச்சியும்::
இப்பள்ளி கடந்த 1996ல், உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது; 130 குழந்தைகள் படித்து வந்தனர். நாளடைவில், மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, நடப்பாண்டு 29 பேர் மட்டுமே உள்ளனர். பள்ளியில், மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்குள்ள 3 வகுப்பறைகள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக பயன்பாட் டுக்கு வழங்கப்பட்டுவிட்டது. பெரிய அறையில் இருந்த ஆய்வுக் கூடம், மிகச் சிறிய அறைக்கு மாற்றப்பட்டுள்ளது. தவிர, இப்பள்ளியை ஈரோடு அரசு காதுகேளா தோர் பள்ளியோடு இணைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது, என கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் குமுறல்::
சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "மாவட்டத்தில் வாய் பேச முடியாதோர் 119, காது கேளாதோர் 89 பேர் உள்ளனர் என, எஸ்.எஸ்.ஏ., கூறுகிறது. வாய் அசைவு, மனநிலை அறிந்து, கல்வி போதித்தால் மட்டுமே, வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியரின் மனதில் பாடங்களை புரிய வைக்க முடியும். மாறாக, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அத்தகைய முறையில் பாடங்கள் போதிக்கப்படுவதில்லை. மாறாக, 8ம் வகுப்பு வரை, அத்தகைய மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகங்கள் "பாஸ்' செய்து விடுகின்றன. 9ம் வகுப்பு வந்தவுடன், அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு அனுப்பி விடுகின்றன. இதனால், சிறப்பு பயிற்சி உபரகணம் மூலம் அவர்களுக்கு பாடங்களை புரிய வைக்க சிரமப்பட வேண்டியுள்ளது' என்றனர்.

ஏன் இந்த முரண்பாடு::
பெயர் சொல்ல விரும்பாத மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) ஒருங்கிணைந்த கல்வி முறையின் கீழ், வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியர், சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி வாழாமல், நல்ல நிலையில் உள்ள மாணவ, மாணவியருடன் இணைந்து படிக்க வேண்டும், என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, சாதாரண பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இதனால் தான், அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைகிறது. சாதாரண பள்ளிகளில், அவர்களுக்குரிய பிரத்யேக முறையில் கல்வி போதிக்கப்படுவதில்லை. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றால், அரசின் ஒருங்கிணைந்த கல்வி முறையை எதிர்ப்பதாக கூறி, எங்கள் மீது நடவ டிக்கை எடுத்து விடுவார்கள்' என்றார்.

பிரத்யேக ஆசிரியர்கள் இல்லை::
அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூறுகையில்,"சாதாரண பள்ளிகளில் படிக்கும், வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியருக்கு கல்வி போதிக்க, சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. மாறாக, அத்தகைய மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி போதிக்க வேண்டும் என்ற பயிற்சியை, எஸ்.எஸ்.ஏ.,வின் ஆசிரியப் பயிற்றுனர்கள் மூலம், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. அப்பயிற்சியை அடிப்படையாக வைத்து தான் சாதாரண பள்ளி ஆசிரியர்கள் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியருக்கு கல்வி போதிக்கின்றனர்' என்றனர்.

கல்வி கொள்கையில் உள்ள இத்தகைய முரண்பாடுகளால், அரசு காது கேளாதோர் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது. இதில் உள்ள குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு காதுகேளாதோர் பள்ளியை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thanks to Dinamalar.

No comments:

Post a Comment