FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, July 12, 2013

சேமிப்பு பணத்தில் இருந்து காது கேளாத மாணவிகளுக்கு உதவிய பிச்சைக்காரர்: புத்தாடை வாங்கி கொடுத்தார்

பிச்சைக்காரர்கள்தான் மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்ப்பார்கள். ஆனால் பிச்சைக்காரரே மற்றவருக்கு உதவிய சம்பவம் அகமதாபாத்தில் நடந்து உள்ளது.

இந்த ஊரை சேர்ந்த பிரஜாபதி (வயது 64) என்ற பிச்சைக்காரர் தினமும் அங்குள்ள ஜெயின் கோயில் முன்பு நின்று பிச்சை எடுப்பார். அதில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் காது கேளாத, வாய்பேசாத ஏழை மாணவி கள் படிக்கும் பள்ளிக் கூடம் இருந்தது. அவர்களுக்கு உதவ விரும்பினார். அவர் ரூ.3 ஆயிரம் சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்துடன் சென்று பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்து பேசினார்.

அவர்கள் மாணவி களுக்கு புத்தாடை எடுத்து கொடுக்கும்படிகூறினார் கள். அதன்படி 11 மாணவி களுக்கு அவர் புத்தாடை எடுத்து கொடுத்தார்.

இது பற்றி பிரஜாபதி கூறியதாவது:-

பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தினமும் 2 வேளை மட்டும் சாப்பிடுவேன். ஒரு பகுதி பணத்தை சொந்த ஊர் ராஜ்கோட்டில் நோயுற்று இருக்கும் எனது மனைவிக்கு அனுப்பி வைப்பேன்.

மீதி பணத்தை வைத்து ஏழைகளுக்கும் பசியால் இருப்பவர்களுக்கும் உணவு வாங்கி கொடுப்பேன்.

காது கேளாத பள்ளி மாணவிகளுக்கும் ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தேன். எனவே ரூ.3 ஆயிரம் சேமித்து அவர் களுக்கு புத்தாடை வாங்கி கொடுத்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to Tamil Oli

No comments:

Post a Comment