FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, July 12, 2013

சேமிப்பு பணத்தில் இருந்து காது கேளாத மாணவிகளுக்கு உதவிய பிச்சைக்காரர்: புத்தாடை வாங்கி கொடுத்தார்

பிச்சைக்காரர்கள்தான் மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்ப்பார்கள். ஆனால் பிச்சைக்காரரே மற்றவருக்கு உதவிய சம்பவம் அகமதாபாத்தில் நடந்து உள்ளது.

இந்த ஊரை சேர்ந்த பிரஜாபதி (வயது 64) என்ற பிச்சைக்காரர் தினமும் அங்குள்ள ஜெயின் கோயில் முன்பு நின்று பிச்சை எடுப்பார். அதில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் காது கேளாத, வாய்பேசாத ஏழை மாணவி கள் படிக்கும் பள்ளிக் கூடம் இருந்தது. அவர்களுக்கு உதவ விரும்பினார். அவர் ரூ.3 ஆயிரம் சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்துடன் சென்று பள்ளி நிர்வாகத்தினரை சந்தித்து பேசினார்.

அவர்கள் மாணவி களுக்கு புத்தாடை எடுத்து கொடுக்கும்படிகூறினார் கள். அதன்படி 11 மாணவி களுக்கு அவர் புத்தாடை எடுத்து கொடுத்தார்.

இது பற்றி பிரஜாபதி கூறியதாவது:-

பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தினமும் 2 வேளை மட்டும் சாப்பிடுவேன். ஒரு பகுதி பணத்தை சொந்த ஊர் ராஜ்கோட்டில் நோயுற்று இருக்கும் எனது மனைவிக்கு அனுப்பி வைப்பேன்.

மீதி பணத்தை வைத்து ஏழைகளுக்கும் பசியால் இருப்பவர்களுக்கும் உணவு வாங்கி கொடுப்பேன்.

காது கேளாத பள்ளி மாணவிகளுக்கும் ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தேன். எனவே ரூ.3 ஆயிரம் சேமித்து அவர் களுக்கு புத்தாடை வாங்கி கொடுத்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to Tamil Oli

No comments:

Post a Comment