FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, July 7, 2013

காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டி: பயிற்சியும், முயற்சியும் இருந்தால் தனித்திறன் வெளிப்படும் கலெக்டர் ஜெகநாதன் பேச்சு


29.06.2013
நாமக்கல்,

நாமக்கல்லில் நடந்த காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டியில்
கலந்து கொண்ட கலெக்டர் ஜெகநாதன் பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித் திறனும் வெளிப்படும் என கூறினார்.

தனித்திறன் போட்டி

நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அரங்க வளாகத்தில் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் 56வது உலக காதுகேளாதோர் தினவிழா மற்றும் காதுகேளா தோர் குழந்தைகளின் தனித் திறன் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெக நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:

ஒவ்வொரு குழந்தைகளிடத் திலும் அனைத்து திறமைகளும் இருக்கிறது. அந்த திறமைகளை வெளிக் கொணருவதற்குத் தான் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளில் காதுகேளாத மாணவ, மாண விகள் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

மனஉறுதி வேண்டும்

பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித்திறமையையும் வெளிப் படுத்தலாம். திருப்பூர், குமார பாளையம் பகுதியிலிருந்து இங்கு வருகை தந்து கலந்து கொண்ட மாணவ, மாணவியர் களின் ஆர்வத்தை மனதார பாராட்டுகிறேன். உடல் அளவில் அவர்கள் மாற்றுத் திறன் படைத்திருந்தாலும், உள்ளத்தில் மனஉறுதி அவர்க ளிடம் இருப்பதால் அவர்க ளால் எதையும் சாதிக்க முடி கிறது. மாற்றுத்திறனாளிகளுக் காக உயர்கல்வியான மருத் துவம், பொறியியல் படிப்பு களில் அரசு தனி ஒதுக்கீடும் செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற் றத்திற்காக பல்வேறு திட்டங் கள், சலுகைகள் தமிழக அரசால் அறிவித்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்ற திட்டத்தின் பயன்களை பெறுகின்ற வகையில் மாணவ, மாணவியர் களின் கல்வித்திறன் அமைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெகநாதன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண் ணம்மாள், மாவட்ட விளை யாட்டு அலுவலர் பெரிய கருப்பன், காதுகேளாதோர் முன்னேற்ற சங்க தலைவர் கணபதி, செயலர் ஜெயராமன், ஆசிரியர் அருள்மணி, வழக் கறிஞர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to Dailythanthi.

No comments:

Post a Comment