FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, July 7, 2013

காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டி: பயிற்சியும், முயற்சியும் இருந்தால் தனித்திறன் வெளிப்படும் கலெக்டர் ஜெகநாதன் பேச்சு


29.06.2013
நாமக்கல்,

நாமக்கல்லில் நடந்த காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டியில்
கலந்து கொண்ட கலெக்டர் ஜெகநாதன் பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித் திறனும் வெளிப்படும் என கூறினார்.

தனித்திறன் போட்டி

நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அரங்க வளாகத்தில் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் 56வது உலக காதுகேளாதோர் தினவிழா மற்றும் காதுகேளா தோர் குழந்தைகளின் தனித் திறன் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெக நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:

ஒவ்வொரு குழந்தைகளிடத் திலும் அனைத்து திறமைகளும் இருக்கிறது. அந்த திறமைகளை வெளிக் கொணருவதற்குத் தான் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளில் காதுகேளாத மாணவ, மாண விகள் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

மனஉறுதி வேண்டும்

பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித்திறமையையும் வெளிப் படுத்தலாம். திருப்பூர், குமார பாளையம் பகுதியிலிருந்து இங்கு வருகை தந்து கலந்து கொண்ட மாணவ, மாணவியர் களின் ஆர்வத்தை மனதார பாராட்டுகிறேன். உடல் அளவில் அவர்கள் மாற்றுத் திறன் படைத்திருந்தாலும், உள்ளத்தில் மனஉறுதி அவர்க ளிடம் இருப்பதால் அவர்க ளால் எதையும் சாதிக்க முடி கிறது. மாற்றுத்திறனாளிகளுக் காக உயர்கல்வியான மருத் துவம், பொறியியல் படிப்பு களில் அரசு தனி ஒதுக்கீடும் செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற் றத்திற்காக பல்வேறு திட்டங் கள், சலுகைகள் தமிழக அரசால் அறிவித்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்ற திட்டத்தின் பயன்களை பெறுகின்ற வகையில் மாணவ, மாணவியர் களின் கல்வித்திறன் அமைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெகநாதன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண் ணம்மாள், மாவட்ட விளை யாட்டு அலுவலர் பெரிய கருப்பன், காதுகேளாதோர் முன்னேற்ற சங்க தலைவர் கணபதி, செயலர் ஜெயராமன், ஆசிரியர் அருள்மணி, வழக் கறிஞர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to Dailythanthi.

No comments:

Post a Comment