FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, July 7, 2013

காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டி: பயிற்சியும், முயற்சியும் இருந்தால் தனித்திறன் வெளிப்படும் கலெக்டர் ஜெகநாதன் பேச்சு


29.06.2013
நாமக்கல்,

நாமக்கல்லில் நடந்த காது கேளாதோர் குழந்தைகளுக்கான போட்டியில்
கலந்து கொண்ட கலெக்டர் ஜெகநாதன் பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித் திறனும் வெளிப்படும் என கூறினார்.

தனித்திறன் போட்டி

நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அரங்க வளாகத்தில் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் 56வது உலக காதுகேளாதோர் தினவிழா மற்றும் காதுகேளா தோர் குழந்தைகளின் தனித் திறன் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெக நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:

ஒவ்வொரு குழந்தைகளிடத் திலும் அனைத்து திறமைகளும் இருக்கிறது. அந்த திறமைகளை வெளிக் கொணருவதற்குத் தான் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளில் காதுகேளாத மாணவ, மாண விகள் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

மனஉறுதி வேண்டும்

பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் தனித்திறமையையும் வெளிப் படுத்தலாம். திருப்பூர், குமார பாளையம் பகுதியிலிருந்து இங்கு வருகை தந்து கலந்து கொண்ட மாணவ, மாணவியர் களின் ஆர்வத்தை மனதார பாராட்டுகிறேன். உடல் அளவில் அவர்கள் மாற்றுத் திறன் படைத்திருந்தாலும், உள்ளத்தில் மனஉறுதி அவர்க ளிடம் இருப்பதால் அவர்க ளால் எதையும் சாதிக்க முடி கிறது. மாற்றுத்திறனாளிகளுக் காக உயர்கல்வியான மருத் துவம், பொறியியல் படிப்பு களில் அரசு தனி ஒதுக்கீடும் செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற் றத்திற்காக பல்வேறு திட்டங் கள், சலுகைகள் தமிழக அரசால் அறிவித்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்ற திட்டத்தின் பயன்களை பெறுகின்ற வகையில் மாணவ, மாணவியர் களின் கல்வித்திறன் அமைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெகநாதன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண் ணம்மாள், மாவட்ட விளை யாட்டு அலுவலர் பெரிய கருப்பன், காதுகேளாதோர் முன்னேற்ற சங்க தலைவர் கணபதி, செயலர் ஜெயராமன், ஆசிரியர் அருள்மணி, வழக் கறிஞர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to Dailythanthi.

No comments:

Post a Comment