FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, July 2, 2013

சைகை மொழி , கைகளினால் ஒரு மொழி


செவித்திறனும் வாய்பேசும் திறனும் முழுவதுமாகவோ அல்லது குறைவாகவோ பெற்றிருப்போர் கூடும் சந்திப்புகளில் நிறைய சந்தர்ப்பங்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் ஆச்சரியப்படுத்தும் விசயங்களில் ஒன்று அவர்களின் உற்சாகத்தை அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் விதம். தங்களுக்குள் நகைச்சுவை,கிண்டல் , கேலி, வருத்தம், ஏமாற்றங்கள் இப்படி மனிதனின் அனைத்து மனவெளிப்பாடுகளையும் தங்களது சைகை மொழி மூலம் படுவேகமாக அடுத்தவருக்கு வெளிப்படுத்துவார்கள்.

உதட்டசைவு, கைகளில் அடையாளங்கள், சொல்ல நினைப்பதற்கு ஏற்ற முகபாவங்கள் ஆகியன மூலம் தாங்கள் சொல்ல வந்ததை சக நண்பர்களுக்கு சொல்லிவிடுவார்கள்.

இந்தியாவில் மும்பை மாநகரத்தில் ஒரு வகையான சைகைமொழியும், கோல்கத்தா, டெல்லி என ஒவ்வொரு மாநகரத்திற்கும் ஒவ்வொரு முறையிலான சைகைமொழியும் சென்னை-பெங்களூர்-ஹைதராபாத் என தென்னிந்தியாவிற்கு ஒரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்திய சைகை மொழிகள் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட, பிரிட்டிஷ் முறையைத் தழுவி இருக்கின்றன.

பிரிட்டிஷ் முறையில் இரண்டு கைகளையும் பயன் படுத்தும் விதத்தில் சைகை மொழி அமைந்திருக்கும். 


ஆனால் அமெரிக்க சைகை மொழியில் ஒரு கை மட்டுமே பயன் படுத்துவார்கள். பெங்களுரில் குறைவான எண்ணிக்கையில் அமெரிக்க சைகை மொழியும் பயன்பாட்டில் உள்ளது.


பலவகையான சைகை மொழிகள் பயன்பாட்டில் இருப்பதை ஒருங்கிணைத்து , ஒரே வடிவத்தை அதற்கு கொடுக்கும் முயற்சியில் தில்லி,செவித்திறன் இல்லாதோர் சங்கமும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் இணைந்து செயலாற்றி வருகின்றன.

பிரிட்டன் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா,ஆஸ்திரியா,கனடா, பெல்ஜியம், பின்லாந்து மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அந்த அந்த நாடுகளின் மொழியை அடிப்படையாகக் கொண்ட சைகைமொழியை ஒரு மொழியாகவே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.

இந்தியாவில் செவித்திறன் அற்றோரும் பங்கேற்கும் முக்கிய அரசாங்க விழாக்களில் அவர்களுக்காகவே ஒரு சைகைமொழி பெயர்ப்பாளர் நிகழ்ச்சியில் பேசுபவர்களின் பேச்சை மொழி பெயர்த்து தரவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே சைகைமொழி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பின்பு , இந்தியாவிலும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.ஏற்கனவே தூர்தர்ஷனில் சைகை மொழியில் செய்தித் தொகுப்பு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 30 லட்சம் செவித்திறன் அற்றோர் இருப்பதில் வெறும் 2% மட்டுமே முறையானக் கல்வி அறிவு பெற்றிருக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் 1000 காது கேளாத குழந்தைகள் பிறக்கும் இந்தியாவில் சைகை மொழியின் பயன்பாடு,முறைப்படுத்தப்பட்டு அதிகரிக்கும்பொழுது அவர்களுக்கு ஏற்ற நல்லதொரு கல்வி முறையை உருவாக்கி ,அவர்களையும் மைய நீரோட்டத்தில் இணைக்க முடியும்.

மைய நீரோட்டத்தில் வாய் பேச இயலாத, செவித்திறன் அற்றோர் கலப்பது , கேட்கும் திறன் வாய் பேசும் திறன் உள்ள நம்மில் சிறுபான்மையினராவது சைகைமொழியைத் தெரிந்து வைத்துக்கொள்ளும்போது இன்னும் முழுமை அடையும். இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டுதான் சைகை மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழுக்கான சைகை மொழி இருக்கிறதா என கூகுளில் தேடிப்பார்த்தால் இதுவரை சிக்காததால் , இன்னும் அதற்கான முயற்சிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.[ஒரு வேளை அப்படி ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தால் உபயோகமான அத்தகவலைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்]

சென்ற வருடம் வெளியான “மொழி” திரைப்படத்தின் இருந்த கதையம்சம், நடிப்பு, இசை , இயக்கம் இவையெல்லாம் தாண்டி அந்தப் படம் செய்த மிகப்பெரிய விசயம், மக்களிடம் சைகை மொழியைக் கொண்டுச்சேர்த்ததுதான். நிறைய நண்பர்கள் சைகைமொழி கற்றுக்கொள்ள ஆர்வப்பட்டார்கள். இந்தப்பதிவை அந்த நோக்கத்துடன் நட்சத்திர வாரத்தில் பதிவு செய்ய மகிழ்ச்சி அடைகிறேன்.


நன்றி வினையூக்கி

No comments:

Post a Comment