FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, July 2, 2013

சைகை மொழி , கைகளினால் ஒரு மொழி


செவித்திறனும் வாய்பேசும் திறனும் முழுவதுமாகவோ அல்லது குறைவாகவோ பெற்றிருப்போர் கூடும் சந்திப்புகளில் நிறைய சந்தர்ப்பங்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் ஆச்சரியப்படுத்தும் விசயங்களில் ஒன்று அவர்களின் உற்சாகத்தை அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் விதம். தங்களுக்குள் நகைச்சுவை,கிண்டல் , கேலி, வருத்தம், ஏமாற்றங்கள் இப்படி மனிதனின் அனைத்து மனவெளிப்பாடுகளையும் தங்களது சைகை மொழி மூலம் படுவேகமாக அடுத்தவருக்கு வெளிப்படுத்துவார்கள்.

உதட்டசைவு, கைகளில் அடையாளங்கள், சொல்ல நினைப்பதற்கு ஏற்ற முகபாவங்கள் ஆகியன மூலம் தாங்கள் சொல்ல வந்ததை சக நண்பர்களுக்கு சொல்லிவிடுவார்கள்.

இந்தியாவில் மும்பை மாநகரத்தில் ஒரு வகையான சைகைமொழியும், கோல்கத்தா, டெல்லி என ஒவ்வொரு மாநகரத்திற்கும் ஒவ்வொரு முறையிலான சைகைமொழியும் சென்னை-பெங்களூர்-ஹைதராபாத் என தென்னிந்தியாவிற்கு ஒரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்திய சைகை மொழிகள் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட, பிரிட்டிஷ் முறையைத் தழுவி இருக்கின்றன.

பிரிட்டிஷ் முறையில் இரண்டு கைகளையும் பயன் படுத்தும் விதத்தில் சைகை மொழி அமைந்திருக்கும். 


ஆனால் அமெரிக்க சைகை மொழியில் ஒரு கை மட்டுமே பயன் படுத்துவார்கள். பெங்களுரில் குறைவான எண்ணிக்கையில் அமெரிக்க சைகை மொழியும் பயன்பாட்டில் உள்ளது.


பலவகையான சைகை மொழிகள் பயன்பாட்டில் இருப்பதை ஒருங்கிணைத்து , ஒரே வடிவத்தை அதற்கு கொடுக்கும் முயற்சியில் தில்லி,செவித்திறன் இல்லாதோர் சங்கமும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் இணைந்து செயலாற்றி வருகின்றன.

பிரிட்டன் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா,ஆஸ்திரியா,கனடா, பெல்ஜியம், பின்லாந்து மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அந்த அந்த நாடுகளின் மொழியை அடிப்படையாகக் கொண்ட சைகைமொழியை ஒரு மொழியாகவே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.

இந்தியாவில் செவித்திறன் அற்றோரும் பங்கேற்கும் முக்கிய அரசாங்க விழாக்களில் அவர்களுக்காகவே ஒரு சைகைமொழி பெயர்ப்பாளர் நிகழ்ச்சியில் பேசுபவர்களின் பேச்சை மொழி பெயர்த்து தரவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே சைகைமொழி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பின்பு , இந்தியாவிலும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.ஏற்கனவே தூர்தர்ஷனில் சைகை மொழியில் செய்தித் தொகுப்பு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 30 லட்சம் செவித்திறன் அற்றோர் இருப்பதில் வெறும் 2% மட்டுமே முறையானக் கல்வி அறிவு பெற்றிருக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் 1000 காது கேளாத குழந்தைகள் பிறக்கும் இந்தியாவில் சைகை மொழியின் பயன்பாடு,முறைப்படுத்தப்பட்டு அதிகரிக்கும்பொழுது அவர்களுக்கு ஏற்ற நல்லதொரு கல்வி முறையை உருவாக்கி ,அவர்களையும் மைய நீரோட்டத்தில் இணைக்க முடியும்.

மைய நீரோட்டத்தில் வாய் பேச இயலாத, செவித்திறன் அற்றோர் கலப்பது , கேட்கும் திறன் வாய் பேசும் திறன் உள்ள நம்மில் சிறுபான்மையினராவது சைகைமொழியைத் தெரிந்து வைத்துக்கொள்ளும்போது இன்னும் முழுமை அடையும். இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டுதான் சைகை மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழுக்கான சைகை மொழி இருக்கிறதா என கூகுளில் தேடிப்பார்த்தால் இதுவரை சிக்காததால் , இன்னும் அதற்கான முயற்சிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.[ஒரு வேளை அப்படி ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தால் உபயோகமான அத்தகவலைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்]

சென்ற வருடம் வெளியான “மொழி” திரைப்படத்தின் இருந்த கதையம்சம், நடிப்பு, இசை , இயக்கம் இவையெல்லாம் தாண்டி அந்தப் படம் செய்த மிகப்பெரிய விசயம், மக்களிடம் சைகை மொழியைக் கொண்டுச்சேர்த்ததுதான். நிறைய நண்பர்கள் சைகைமொழி கற்றுக்கொள்ள ஆர்வப்பட்டார்கள். இந்தப்பதிவை அந்த நோக்கத்துடன் நட்சத்திர வாரத்தில் பதிவு செய்ய மகிழ்ச்சி அடைகிறேன்.


நன்றி வினையூக்கி

No comments:

Post a Comment