FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, July 9, 2013

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக TNPSC-II Group-ல் வெற்றி பெற்றவன் மாற்றுத்திறனாளி (Deaf) குமார்



குமார் என்பவர் மாற்றுத்திறனாளி (Deaf) சிறுவயதில் காதுகேளாதோர் பள்ளியில் படித்தான். பிறகு அனைத்து மாணவர்கள் பயிலும் பள்ளியில் சமமாகப் படித்தான். அவனுடைய அப்பா சாதாரண ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். அவன் பகலில் கல்லூரிக்கும், மாலை முதல் இரவு வரை ஹோட்டலில் வேலை செய்தான். அப்பாவுக்கு மிகவும் உதவி செய்தான். இந்த சூழ்நிலையில் அவன் B.Sc முடித்தான். பிறகு M.Sc  முடித்தான். பிறகு முழு நேரமாக அப்பாவுக்கு உதவியாக ஹோட்டல் வேலை முழுவதுமாக செய்து கொண்டிருந்தான்.

ரமேஷ்பாபு என்பவர் ஒரு நாள் குமாரை சந்தித்து TNPSC Exam யைப் பற்றி பேசினார். உன்னால் வெற்றி பெறமுடியும் முயற்சி செய் என்று பேசினார். அவனும் முயற்சி செய்தபோது முதலில் தோல்வி அடைந்தான். ரமேஷ்பாபு என்பவர் குமாரிடம் திரும்புவும் பேசினார். நீ முயற்சி செய்துகொண்ட  இருக்கவும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றார். அதே போல் அவனும் தொடர்ந்து முயற்சி செய்து TNPSC IV Group –ல் வெற்றி பெற்றான். பிறகு விடாமுயற்சியால் TNPSC II Group –ல் வெற்றி பெற்றான். திருச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பெருமையாக நினைக்கின்றனர். அதே போல் மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும் நமக்கு குறை உள்ளது என்று கருதாமல் குமாரைப் போல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment