FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, July 9, 2013

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக TNPSC-II Group-ல் வெற்றி பெற்றவன் மாற்றுத்திறனாளி (Deaf) குமார்



குமார் என்பவர் மாற்றுத்திறனாளி (Deaf) சிறுவயதில் காதுகேளாதோர் பள்ளியில் படித்தான். பிறகு அனைத்து மாணவர்கள் பயிலும் பள்ளியில் சமமாகப் படித்தான். அவனுடைய அப்பா சாதாரண ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். அவன் பகலில் கல்லூரிக்கும், மாலை முதல் இரவு வரை ஹோட்டலில் வேலை செய்தான். அப்பாவுக்கு மிகவும் உதவி செய்தான். இந்த சூழ்நிலையில் அவன் B.Sc முடித்தான். பிறகு M.Sc  முடித்தான். பிறகு முழு நேரமாக அப்பாவுக்கு உதவியாக ஹோட்டல் வேலை முழுவதுமாக செய்து கொண்டிருந்தான்.

ரமேஷ்பாபு என்பவர் ஒரு நாள் குமாரை சந்தித்து TNPSC Exam யைப் பற்றி பேசினார். உன்னால் வெற்றி பெறமுடியும் முயற்சி செய் என்று பேசினார். அவனும் முயற்சி செய்தபோது முதலில் தோல்வி அடைந்தான். ரமேஷ்பாபு என்பவர் குமாரிடம் திரும்புவும் பேசினார். நீ முயற்சி செய்துகொண்ட  இருக்கவும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றார். அதே போல் அவனும் தொடர்ந்து முயற்சி செய்து TNPSC IV Group –ல் வெற்றி பெற்றான். பிறகு விடாமுயற்சியால் TNPSC II Group –ல் வெற்றி பெற்றான். திருச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பெருமையாக நினைக்கின்றனர். அதே போல் மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும் நமக்கு குறை உள்ளது என்று கருதாமல் குமாரைப் போல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment