FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, July 10, 2013

வாய் பேசாதோர், காது கேளாதோருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சட்டம்

02.04.2013
சென்னை: காது கேளாதோர், வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என, உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையில், அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் மற்றும் உள்ளாட்சி துறை, மானியக் கோரிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், மாற்றுத் திறனாளிகள், மூன்று சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், உயர்கல்வி கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியில்லாமல் இருந்தனர். எனவே, இவர்களும் போட்டியிட ஏதுவாக, 1994ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 -3அ மற்றும் 38 -3அ, ஆகியவற்றை திருத்தம் செய்து, 2012, நவ., 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமலர் 


வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில்
எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்

No comments:

Post a Comment