FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, July 10, 2013

வாய் பேசாதோர், காது கேளாதோருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சட்டம்

02.04.2013
சென்னை: காது கேளாதோர், வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என, உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையில், அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் மற்றும் உள்ளாட்சி துறை, மானியக் கோரிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், மாற்றுத் திறனாளிகள், மூன்று சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், உயர்கல்வி கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியில்லாமல் இருந்தனர். எனவே, இவர்களும் போட்டியிட ஏதுவாக, 1994ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 -3அ மற்றும் 38 -3அ, ஆகியவற்றை திருத்தம் செய்து, 2012, நவ., 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமலர் 


வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில்
எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்

No comments:

Post a Comment