FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, July 10, 2013

வாய் பேசாதோர், காது கேளாதோருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சட்டம்

02.04.2013
சென்னை: காது கேளாதோர், வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என, உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையில், அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் மற்றும் உள்ளாட்சி துறை, மானியக் கோரிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், மாற்றுத் திறனாளிகள், மூன்று சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், உயர்கல்வி கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியில்லாமல் இருந்தனர். எனவே, இவர்களும் போட்டியிட ஏதுவாக, 1994ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 -3அ மற்றும் 38 -3அ, ஆகியவற்றை திருத்தம் செய்து, 2012, நவ., 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமலர் 


வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில்
எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்

No comments:

Post a Comment