FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, September 18, 2013

அடிப்டை விதிமுறைகள்

சுய உதவிக் குழு குழுவின் பொதுவான அடிப்டை விதிமுறைகள்:
  1. சுய உதவிக் குழு உறுப்பினர்களின் தேர்வு, தகுதியின் அடிப்படையில், உரிய வகையில் செய்ய வேண்டும்.
  2. வங்கிக் கணக்கு (Bank SB / Ac) குழுவின் பெயரில் ஆரம்பிக்க வேண்டும்.
  3. குழுக் கூட்டம் வாரந்தோறும் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், நாளில், குழு உறுப்பினர்களின் வசதிக்கேற்ப நடைப் பெற வேண்டும்.
  4. குழு உறுப்பினர்களின் தேவையின் அடிப்படையில், கடன் வழங்கப் பட வேண்டும்.
  5. குழுவால் நிர்ணயிக்கப்பட்ட தவணை மற்றும் வட்டியினை கடன் பெற்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்.
  6. கடன் பெற்ற உறுப்பினர்கள் கடனை குறிப்பிட்ட தவணைக்குள் வட்டியு டன் செலுத்த வேண்டும்.
  7. குழுப் பிரதிநிதி, ஊக்குனரைக் கொண்டு குழு செயல்பட வேண்டும்.
  8. சமூக / கிராம மேம்பாட்டிற்கு குழு பாட வேண்டும்.
  9. குழுவின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உறுப்பினர்களால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை அபராதமாக விதிக்கலாம்.
  10. ஒரு குழுவில் ஒரு குடும்ப நபர் மட்டுமே உறுப்பினராய் இருப்பது நலம். உறவுக்கார்கள் ஓரே குழுவில் உறுப்பினராய் இருப்பதைத் தவிர்த்தல் நலம்.
  11. ஊக்குனர், பிரதிநிதி பொறுப்பானது சுழற்சி முறையில் இருக்க வேண்டும்.
  12. உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படி சேமிப்புத் தொகைக் கட்டலாம். ஆனால், அது தொடர்ந்த சேமிப்பாக இருக்க வேண்டும்.
  13. குழுவில் இருக்கும் உறுப்பினர் தாமாக விலகினாலும் அல்லது நீக்கப்பட்டாலும் அவர் குழுவின் பொது நிதியில் உரிமை கோர முடியாது. அவரின் சேமிப்பு தொகை மட்டுமே திருப்பித் தரமுடியும்.(சந்தா எக்காரணத்தை கொண்டும் திருப்பித் தர இயலாது)
  14. குழுக் கூட்டத்தின் இறுதியில் குழுவின் வரவு, செலவினை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  15. குழுவின் கையிருப்புத் தொகை ரூ.100 க்கு மேற்படாமல் இருப்பது நல்லது. கையிருப்பை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  16. கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்களிடம் இருந்து வசூலான பணத்தை அடுத்த நாளே வங்கியில் செலுத்த வேண்டும்.

சேமிப்பு :
சேமிப்பு என்ற சொல்லைச் சொல்லும் போதே ஏதோ ஓரு பூரிப்பு நம் மனதில் எழுகிறது! இன்று மகளிரின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதே மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான். குழுவாக சேமிக்கும் போது ஓரு முனைப்பும், நல்ல பிணைப்பும் உண்டாகிறது. பிறசேமிப்புகளில் உள்ள குறைபாடுகள் யாவை? குழுவாக சேமிப்பதில் நன்னைகள் யாவை? சிக்கனத்தை கடைப்பிடித்து, சேமிப்பு பழக்கத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம்

சிறுதுளி பெருவெள்ளம்!
சேமிப்பு இல்லாத வீடு கூரை இல்லாத வீடு…!
சேமிப்பே உங்கள் முதல் செலவாக இருக்கட்டும்!
இன்றைய சேமிப்பு நாளைய முதலீடு!


போன்ற வாசகங்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. பொதுவாக சேமிப்பின் அவசியத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. சேமிப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக பொருளையோ, பணத்தையோ சேர்த்து வைத்து, இல்லாத நேரத்தில் அதை பயன்படுத்துவது. சேமிக்க தெரியாதவர்கள் எதிர்கால வாழ்கையில் அல்லல் பட நேரும்.

தகவல் மூலம் :
மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

No comments:

Post a Comment