FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, September 13, 2013

நுண் கடன்

  1. சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான நிதியினைத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்கள் நுண் நிதி நிறுவனங்கள் என அழைக்கப்படுகிறது.
நுண் நிதியின் முக்கியத்துவம்
  1. சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை ஊக்கப்படுத்திட
  2. கூட்டமைப்பின் பொதுநிதியினை அதிகரித்திட
  3. உள்கடன் வாய்ப்புகளை அதிகரித்திட
  4. உறுப்பினர்களின் சிறுகடன் / பெருங்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்திட
  5. கூட்டமைப்பில் நிதிகையாளும் திறனை மேம்படுத்தி, முன் உதாரணமாகச் செயல்படுத்திட
நுண் கடன் பெறுவதில் நன்மைகள்:
  1. நுண் நிதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் கடன் திரும்பச் செலுத்தும் அட்டவணையானது மிகவும் குறுகிய கால வரையறைக்குட்பட்டது
  2. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களைத் தவிர நேரிடையாக, நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்
  3. கடன் வழங்கும் முறை மிக எளிதாக இருக்கும்.
  4. கடன் தேவைக்கு அடமானம் ஏதும் தேவையில்லை.
  5. ஒரு சில நிறுவனங்கள் நேரடியாகவே உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது.
  6. அரசுடமையாக்கப்பட்ட வங்களின் வட்டி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
  7. நுண் நிதி நிறுவனங்கள் நேரிடையாக, சமுதாய சார்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழு/ கூட்டமைப்புடன் நேரடித் தொடர்பு.
  8. நுண் நிதி மூலம் பெறப்படும் நிதி பெறுவதற்கான நடைமுறைச் செலவினமானது, நிதி பெறுபவருக்கும், நிதி அளிக்கப்படுபவருக்கும் மிகவும் குறைவு.
  9. நுண் நிதி தொடர்பு, ஒரு குழுவை, கூட்டமைப்பினை மட்டும் சார்ந்திருத்தல்
நுண் கடன் மூலம் ஏற்படும் தீமைகள்
  1. சுய உதவிக் குழு / கூட்டமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படாமை
  2. மகளிர் முன்னேற்றத்தினை விட நிதி பரிமாற்றத்திற்கே முக்கியத்துவம் தரப்படும்
  3. அதிகப்படியான வட்டி
  4. கடன் திருப்பிச் செலுத்தும் முறையானது வாரம், 15 தினங்களுக்கு 1 முறை, மாதம் ஒரு முறை சேமிப்பை பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுதல்
  5. மறைமுகமான வட்டி விகிதம் / வட்டி நிர்ணயம் (உணம்) நுழைவுக்கட்டணம், வட்டி காலதாமத்திற்கான அதிக வட்டி, விண்ணப்ப பரிசிலனைக் கட்டணம் மற்றும் இதர
  6. நுண் நிதி மூலம் பெறப்படும் கடன் பெரும்பாலும், கடன் பெறுபவரின் சுய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  7. சுய உதவிக் குழு / கூட்டமைப்பினை பொருளாதார ரீதியாக, தன்னிறைவு அடையச் செய்வதற்கு முக்கியத்துவம்
  8. நிதிப்பயன்பாட்டினை கண்காணிப்பு செய்வதில் குறைபாடு.
தகவல் மூலம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

No comments:

Post a Comment