FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, September 14, 2013

குழுக் கூட்டத்தின் முக்கியத்துவம்

  1. குழுவின் தொடர்ந்த செயல்பாட்டிற்கு குழுக் கூட்டம் அவசியம்.
  2. கூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்கள் பல தகவல்களைப் பெறவும், விழிப்பிணர்வு அடையவும் வழி வகை செய்கிறது.
  3. சேமிப்பு, தொழில் முனைப்பு போன்ற செயல்பாட்டிற்கு கூட்டம் மிகவும் அவசியம்.
  4. திட்டமிட, ஆண்டுச் செயல் திட்டம் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.
  5. உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், இணக்கமான அணுகு முறையைப் பெறவும் குழுக் கூட்டம் உதவிகிறது.
  6. கிராம மேம்பாட்டிற்கும், சுய முன்னேற்றத்திற்கும், குழுக் கூட்டமே அடிப்படை.
  7. சீராக, தொடர்ந்து குழுக் கூட்டம் நடத்தி முறையான தீர்மானங்கள் இயற்ற, ஏற்ற களமாக அமைவது குழுக் கூட்டமே.
  8. ஊக்குனர்கள் & பிரநிதிகள் பெற்ற பயிற்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள ஏதுவாகிறது.
  9. வாரக் கூட்டம் நல்ல பலனைத் தரும்.

சுய உதவிக்குழு பொறுப்பாளர்களின் பொறுப்புகள் :

அ. ஊக்குனர்களின் பெறுப்புகள் :
  1. ஊக்குனர்கள், பொறுப்பு மிக்க தாயாக இருந்து, குழுவை கட்டிக் காத்தல்.
  2. குழுவை முறையாக நடத்த, வேண்டிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தல்.
  3. குழுக் கூட்டங்களை தவறாமல் நடத்துதல்.
  4. குழுக் கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள ஊக்குவித்தல்.
  5. உறுப்பினர்களிடையே நல்லுறவு மற்றும் ஓற்றுமையை மேம்படுத்துதல்.
  6. குழுக் கூட்டத்தில் விவாதிக்கும் கருத்துகளையும், தீர்மானங்களையும் பதிவு செய்தல்.
  7. குழுவின் பதிவேடிகளை முறையாக பராமரித்தல்.
  8. குழுக் கணக்கினை ஆண்டு தணிக்கைக்கு ஏற்பாடு செய்தல்.
  9. தணிக்கை மற்றும் தரம் பிரித்தலுக்குப் பிறகு அறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்தல்.
  10. ‘கிராம சபா’ கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள ஆர்வமூட்டல்.
  11. ’ஆண்டுச் செயல் திட்டம் ‘ தீட்டி செயல்பட ஊக்குவித்தல்.
  12. பயிற்சியில் அறிந்து கொண்ட கருத்துகளை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.
  13. குழு வெளிக்கடன் பெற, கடன் பெறுவதற்கான மதிப்பீட்டிற்கு (Credit Rating) தயார் செய்தல்.
  14. உறுப்பினர்களிடையே எண்ணறிவு, எழுத்தறிவினை மேம்படுத்துதல்.
  15. பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டங்களில் கலந்துக் கொள்ள உறுப்பினர்களை தவறாமல் அனுப்புதல்.
  16. குழுவின் நிதிநிலைமையை உறுப்பினர்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்துதல்.
  17. கிராம அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் ஓத்துழைப்பைப் பெறுதல்.
  18. வங்கியின் உதவிகள், அரசு நலப்பணிகள் யாவும் பெற வழிவகை செய்கிறது.
ஆ. பிரதிநிதிகளின் பொறுப்புகள் :
  1. தவறாமல் குழுக் கூட்டம் நடத்த ஊக்குனருடன் இணைந்து செயல்படுதல்.
  2. சேமிப்பு, கடன்வசூல் இதர பிற பணத்தை வசூல் செய்தல், வங்கியில் செலுத்துதல்.
  3. குழுவின் வங்கிக் கணக்கை ஊக்குனருடன் இணைந்து துவக்குதல்-இயக்குதல்.
  4. குழு உறுப்பினர்களுக்கு ஏற்ற பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்தல்.
  5. பயிற்சியில் பெற்ற கருத்துகளை உறுப்பினர்களிள் மத்தியில் பகிர்ந்து கொள்ளுதல்.
  6. உறுப்பினர்களையும் பயிற்சியில், கூட்டங்களில் கலந்து கொள்ள ஆர்வமூட்டுதல்.
  7. ஊக்குனர் இல்லாத நேரத்தில் அவரின் பொறுப்பை ஏற்று நடத்துதல்.
  8. ஊக்குனருடன் இணைந்து குழுக் கணக்குப் பதிவேடுகளைப் பராமரித்தல்.
  9. பெற்ற கடனை முறையாக பயன்படுத்தவும், திருப்பி செலுத்தவும் முன் மாதியாக இருந்து உறுப்பினர்களை ஊக்கப்படுத்துதல்.
  10. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வழி காட்டுதல்.
  11. உறுப்பினர்கள் குழுவின் விதிமுறைகளை மீறாமல் பார்த்துக் கொள்ளுதல்.
  12. குழுவின் பிரதிநிதியாக பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டமைப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்.
  13. அரசு மற்றும் பிற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நலத் திட்டங்களைப் பெற உறுப்பினர்களை ஆர்வ மூட்டுதல்.
  14. சமூக மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உறுப்பினர்களை ஒருங்கிணைத்து வழி நடத்துதல்.
  15. குழுவிற்கு ஆதரவாகவும் நல்ல வழி நடத்துனராக செயல்படுதல்.
இ. உறுப்பினர்களின் பொறுப்புகள்:
  1. பொறுப்புமிக்க உறுப்பினர்களாக இருத்தல்.
  2. குழுக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுதல்.
  3. அவரவர் கருத்துக்களையும், தகவல்களையும் சுகந்திரமாக வெளிப்படுத்துதல்.
  4. சேமிப்பு, சந்தா, கடன், வட்டி ஆகியவற்றை தவறாமல் செலுத்துதல்.
  5. தாம் வாங்கிய கடனை கண்ணியமாக, தவனை தவறாமல் திருப்பி கொடுத்தல்.
  6. மற்ற சக உறுப்பினர்களிடம் நல்ல ஓற்றுமை, நல்லுறவு போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல்.
  7. சுழற்சி முறையில் வங்கிக்குச் சென்று வருதல்.
  8. மகளிர் திட்டம் மற்றும் பிற துறைகளின் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளில் கலந்து கொள்ளுதல்.
  9. தமக்களிக்கப்பட்ட பொறுப்புகளைத் தன்னார்வத்துடன் ஏற்று நிறை வேற்றுதல்.
  10. குழுவின் நிலை, தரம், யாவும் அறிந்து இருத்தல்.
  11. சமூக மற்றும் கிராம முன்னேற்ற செயல்பாடுகளில் முழுமையாக ஈட்டுபட்டு செயலாற்றுதல்.
  12. “கிராம சபா”- கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுதல்.
  13. குழுவில் பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனே விவாதித்து சரியான தீர்வினைக் காண உதவுதல்.
  14. பொதுவாக ஏனைய குழுக்களுக்கு முன் மாதிரியாக, சிறந்த குழுவாக திகழப் பாடுபடுதல்.
  15. ஊக்குனர், பிரதிநிதிகளின் சரியான செயல்பாடுகளுக்கு சீரிய ஓத்துழைப்பு தந்து சிறப்பாக குழுவினை வழி நடத்திச் செல்ல உதவுதல். எல்லா உறுப்பினர்களும் எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றுத் திகழ முனைதல்.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

No comments:

Post a Comment