FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, October 8, 2017

’காது கேளாவதர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்க வேண்டும்’ -கேரள இளைஞர் கோரிக்கை

07.10.2017
காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கவும், சம உரிமையை அளிக்கவும் வலியுறுத்தி, இந்தியா முழுவதும் இரு சக்கர வாகனத்தில் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வரும் கேரள இளைஞர் சினான் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று கோவை வந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காது கேளாத, வாய் பேச இயலாதவர்கள் தங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி, நீண்ட நாள்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போராடி வருகின்றனர். பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கவும், சம உரிமை அளிக்க வலியுறுத்தியும் இந்தியா, பூட்டான்,நேபாள் ஆகிய மூன்று நாடுகளில் 16,000 கிலோ மீட்டர் தூரத்தை தனது இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளார் சினான் என்ற கேரள இளைஞர். இவர் தனது பயணத்தை ஜீலை மாதம் 13-ம் தேதியன்று கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, செப்டம்பர் மாதம் 25-ம் தேதி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இந்நிலையில், பூட்டான், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று காது கேட்காத வாய் பேசமுடியாதவர்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தியதால் இவரது பயணம் வெற்றிப் பயணமாக அமைந்ததுள்ளதாக சினான் தெரிவித்தார்.

தனது பயணத்தை முடித்துவிட்டு சினான் இன்று கோவை வந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சினான் உறவினர், 'கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியா, நேபால், பூட்டான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சியான் இந்தியா முழுவதும் உள்ள காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும், எங்களாலும் மற்றவர்கள் போல் வாகனங்கள் ஓட்ட இயலும் என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தப்பயணத்தின் போது வாய் பேசமுடியாத , காது கேட்காத அமைப்பின் சார்பாக உதவிகள் கிடைத்ததாகவும், கண்ணாடி பார்த்து தன்னால் சிறப்பாக வண்டி ஓட்ட முடிந்ததாகவும் குறிப்பிட்டார். பயணத்தின்போது எந்த விபத்தும் இல்லாமல் வண்டி ஓட்டமுடிந்ததாகவும், அனைத்து வாய் பேசமுடியாதவர்கள் மற்றும் காது கேளாவதர்களுக்குச் சம உரிமை வழங்குவதோடு, ஓட்டுநர் உரிமைத்தை வழங்க நடவடிக்கை எடுக்க தமிழகம் உட்பட சில மாநிலங்கள் முன் வர வேண்டும்' என்றார்.

1 comment: