FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, December 14, 2017

ராஞ்சியில் நடந்த போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்ற காதுகேளாத மாணவன்

12.12.2017, துறையூர் அருகே பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர் ஒருவர் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறார். திருச்சி மாவட்டம் துறையூர் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் காமராஜ் என்பவர் மகனான மணிகண்டன் பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாதவர். தளகட போட்டிகளில் ஆர்வம் கொண்ட மணிகண்டன், அதில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ந.ரமேஷ்பாபு அவர்கள் மணிகண்டனின் மீது தீவிரமாக உதவி செய்தார். ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் கடந்த 1 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை நடந்த இந்திய காது கேளாதோர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம் கடும் உழைப்பால் அவன் வெற்றி பெற்றுள்ளான்.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில்  நடைபெற உள்ள காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் ஒலிம்பிக் (DEAF OLYMPIC) போட்டிகளில் இந்தியா சார்பில் மணிகண்டன் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment