FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, December 14, 2017

ராஞ்சியில் நடந்த போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்ற காதுகேளாத மாணவன்

12.12.2017, துறையூர் அருகே பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர் ஒருவர் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறார். திருச்சி மாவட்டம் துறையூர் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் காமராஜ் என்பவர் மகனான மணிகண்டன் பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாதவர். தளகட போட்டிகளில் ஆர்வம் கொண்ட மணிகண்டன், அதில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ந.ரமேஷ்பாபு அவர்கள் மணிகண்டனின் மீது தீவிரமாக உதவி செய்தார். ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் கடந்த 1 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை நடந்த இந்திய காது கேளாதோர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம் கடும் உழைப்பால் அவன் வெற்றி பெற்றுள்ளான்.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில்  நடைபெற உள்ள காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் ஒலிம்பிக் (DEAF OLYMPIC) போட்டிகளில் இந்தியா சார்பில் மணிகண்டன் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment