FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, December 1, 2017

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் போல் நடித்து மொபைல் திருடியவர்கள் சிக்கினர்

26.11.2017
வாழப்பாடி: மாற்றுத்திறனாளி மாணவர்கள் போல் நடித்து, அதிகாரிகளின் மொபைல்களை திருடிய இருவர் சிக்கினர். அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி ஒன்றிய அலுவலகங்களுக்கு, நேற்று முன்தினம், இருவர் சென்றனர். அவர்கள், வாய்பேச முடியாதவர்கள் போல் நடித்து, 'கல்லூரியில் படிக்கிறோம். ஏதாவது உதவி செய்யுங்கள்' எனும் வாசகத்தை காட்டி, உதவி கேட்டுள்ளனர். திடீரென, அங்கிருந்த பணியாளர்களின் விலை உயர்ந்த மொபைலை திருடிக்கொண்டு மாயமாகினர். இதனால், சுதாரித்துக்கொண்ட அலுவலர்கள், மற்ற ஒன்றிய அலுவலகங்களுக்கு, இதுபோல் வரும் நபர்களை கண்காணிக்க அறிவுறுத்தினர். நேற்று காலை, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில், மொபைல் திருட முயன்றபோது, அவர்கள் கையும் களவுமாக சிக்கினர். அவர்களை பிடித்த ஊழியர்கள், வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம், நரிப்பட்டியைச் சேர்ந்த சண்முகம், 40, முருகன், 45, என்பதும், சேலம் அருகே, சின்னப்பம்பட்டியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகள் போல் நடித்து, பல்வேறு இடங்களில் மோசடி செய்தது உறுதியானது. அவர்களிடமிருந்து, போலி ஆவணங்கள் மற்றும் அரசு முத்திரை கட்டைகளை, போலீசார் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment