FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, December 1, 2017

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் போல் நடித்து மொபைல் திருடியவர்கள் சிக்கினர்

26.11.2017
வாழப்பாடி: மாற்றுத்திறனாளி மாணவர்கள் போல் நடித்து, அதிகாரிகளின் மொபைல்களை திருடிய இருவர் சிக்கினர். அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி ஒன்றிய அலுவலகங்களுக்கு, நேற்று முன்தினம், இருவர் சென்றனர். அவர்கள், வாய்பேச முடியாதவர்கள் போல் நடித்து, 'கல்லூரியில் படிக்கிறோம். ஏதாவது உதவி செய்யுங்கள்' எனும் வாசகத்தை காட்டி, உதவி கேட்டுள்ளனர். திடீரென, அங்கிருந்த பணியாளர்களின் விலை உயர்ந்த மொபைலை திருடிக்கொண்டு மாயமாகினர். இதனால், சுதாரித்துக்கொண்ட அலுவலர்கள், மற்ற ஒன்றிய அலுவலகங்களுக்கு, இதுபோல் வரும் நபர்களை கண்காணிக்க அறிவுறுத்தினர். நேற்று காலை, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில், மொபைல் திருட முயன்றபோது, அவர்கள் கையும் களவுமாக சிக்கினர். அவர்களை பிடித்த ஊழியர்கள், வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம், நரிப்பட்டியைச் சேர்ந்த சண்முகம், 40, முருகன், 45, என்பதும், சேலம் அருகே, சின்னப்பம்பட்டியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகள் போல் நடித்து, பல்வேறு இடங்களில் மோசடி செய்தது உறுதியானது. அவர்களிடமிருந்து, போலி ஆவணங்கள் மற்றும் அரசு முத்திரை கட்டைகளை, போலீசார் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment