FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, December 1, 2017

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் போல் நடித்து மொபைல் திருடியவர்கள் சிக்கினர்

26.11.2017
வாழப்பாடி: மாற்றுத்திறனாளி மாணவர்கள் போல் நடித்து, அதிகாரிகளின் மொபைல்களை திருடிய இருவர் சிக்கினர். அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி ஒன்றிய அலுவலகங்களுக்கு, நேற்று முன்தினம், இருவர் சென்றனர். அவர்கள், வாய்பேச முடியாதவர்கள் போல் நடித்து, 'கல்லூரியில் படிக்கிறோம். ஏதாவது உதவி செய்யுங்கள்' எனும் வாசகத்தை காட்டி, உதவி கேட்டுள்ளனர். திடீரென, அங்கிருந்த பணியாளர்களின் விலை உயர்ந்த மொபைலை திருடிக்கொண்டு மாயமாகினர். இதனால், சுதாரித்துக்கொண்ட அலுவலர்கள், மற்ற ஒன்றிய அலுவலகங்களுக்கு, இதுபோல் வரும் நபர்களை கண்காணிக்க அறிவுறுத்தினர். நேற்று காலை, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில், மொபைல் திருட முயன்றபோது, அவர்கள் கையும் களவுமாக சிக்கினர். அவர்களை பிடித்த ஊழியர்கள், வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம், நரிப்பட்டியைச் சேர்ந்த சண்முகம், 40, முருகன், 45, என்பதும், சேலம் அருகே, சின்னப்பம்பட்டியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகள் போல் நடித்து, பல்வேறு இடங்களில் மோசடி செய்தது உறுதியானது. அவர்களிடமிருந்து, போலி ஆவணங்கள் மற்றும் அரசு முத்திரை கட்டைகளை, போலீசார் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment