FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, December 18, 2017

காதுகேளாதோர் தேசிய கூடைப்பந்து - பட்டிவீரன்பட்டி மாணவர் சாதனை

18.12.2017
பட்டிவீரன்பட்டி: தேசிய அளவிலான காதுகேளாதோர் கூடைப்பந்து போட்டியில் பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவன் சாதனை படைத்தார்.பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுராம் பாண்டிச்சேரி காதுகேளாதோர் கூடைப்பந்து அணியில் விளையாட பங்கேற்றார். ராஞ்சியில் நடந்த அரையிறுதியில் பாண்டிச்சேரி, தமிழக அணியை 45:16 என்ற புள்ளிகளில் வென்றது. இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை 63:31 புள்ளிகளில் வென்றது.இரு போட்டிகளிலும் விஷ்ணுராம் எடுத்த புள்ளிகள் 43. இவரது தந்தை ரமேஷ்பாபு இந்த அணியின் மேனேஜராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே அணியில் தந்தை, மகன் பங்கேற்றது சிறப்பாகும். மாணவனை எச்.என்.யூ.பி.ஆர்., பள்ளி மேலாண்மை குழு தலைவர் மோகன்அருணாச்சலம், எச்.என்.யூ.பி., சங்க தலைவர் ராஜாராம், செயலாளர் சங்கரலிங்கம், பள்ளி செயலாளர் அய்யனார்வெங்கடேசன், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் வெங்கடேஸ், குமார், காமாட்சி ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment