FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, December 18, 2017

காதுகேளாதோர் தேசிய கூடைப்பந்து - பட்டிவீரன்பட்டி மாணவர் சாதனை

18.12.2017
பட்டிவீரன்பட்டி: தேசிய அளவிலான காதுகேளாதோர் கூடைப்பந்து போட்டியில் பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவன் சாதனை படைத்தார்.பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுராம் பாண்டிச்சேரி காதுகேளாதோர் கூடைப்பந்து அணியில் விளையாட பங்கேற்றார். ராஞ்சியில் நடந்த அரையிறுதியில் பாண்டிச்சேரி, தமிழக அணியை 45:16 என்ற புள்ளிகளில் வென்றது. இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை 63:31 புள்ளிகளில் வென்றது.இரு போட்டிகளிலும் விஷ்ணுராம் எடுத்த புள்ளிகள் 43. இவரது தந்தை ரமேஷ்பாபு இந்த அணியின் மேனேஜராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே அணியில் தந்தை, மகன் பங்கேற்றது சிறப்பாகும். மாணவனை எச்.என்.யூ.பி.ஆர்., பள்ளி மேலாண்மை குழு தலைவர் மோகன்அருணாச்சலம், எச்.என்.யூ.பி., சங்க தலைவர் ராஜாராம், செயலாளர் சங்கரலிங்கம், பள்ளி செயலாளர் அய்யனார்வெங்கடேசன், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் வெங்கடேஸ், குமார், காமாட்சி ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment