FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, December 18, 2017

காதுகேளாதோர் தேசிய கூடைப்பந்து - பட்டிவீரன்பட்டி மாணவர் சாதனை

18.12.2017
பட்டிவீரன்பட்டி: தேசிய அளவிலான காதுகேளாதோர் கூடைப்பந்து போட்டியில் பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவன் சாதனை படைத்தார்.பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுராம் பாண்டிச்சேரி காதுகேளாதோர் கூடைப்பந்து அணியில் விளையாட பங்கேற்றார். ராஞ்சியில் நடந்த அரையிறுதியில் பாண்டிச்சேரி, தமிழக அணியை 45:16 என்ற புள்ளிகளில் வென்றது. இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை 63:31 புள்ளிகளில் வென்றது.இரு போட்டிகளிலும் விஷ்ணுராம் எடுத்த புள்ளிகள் 43. இவரது தந்தை ரமேஷ்பாபு இந்த அணியின் மேனேஜராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே அணியில் தந்தை, மகன் பங்கேற்றது சிறப்பாகும். மாணவனை எச்.என்.யூ.பி.ஆர்., பள்ளி மேலாண்மை குழு தலைவர் மோகன்அருணாச்சலம், எச்.என்.யூ.பி., சங்க தலைவர் ராஜாராம், செயலாளர் சங்கரலிங்கம், பள்ளி செயலாளர் அய்யனார்வெங்கடேசன், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் வெங்கடேஸ், குமார், காமாட்சி ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment