FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 27, 2017

காது கேளாத, வாய் பேசாத 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை! அரசு மருத்துவர்கள் சாதனை

27.12.2017
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று ஆடியோ வெர்பெல் தெரப்பி எனும் காக்ளியர் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பேச்சுப் பயிற்சிக்கான முறை கொண்டுவரப்பட்டது. அரசு மருத்துவமனையிலையே வயதுவரம்பு அரசு காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை மூலம் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி கூறுகையில், “தென் தமிழகத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறவியிலே முற்றிலும் காது கேளாத, வாய் பேசாத 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூபாய் 7 லட்சம் பெறுமான காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஜனவரி முதல் தற்போதுவரை 61 குழந்தைகளுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை சிறப்பாகச் செய்யப்படுகிறது . இதுவரை 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டு இன்று நல்ல முறையில் காது கேட்கவும் பேசிக் கொண்டும் உள்ளனர்.

தற்போது கொண்டுவந்துள்ள பயிற்சி முறை மூலம் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சாதாரண குழந்தைகளுடன் சேர்ந்து பயில இயலும். காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பேச்சுப் பயிற்சி மதுரை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் ஒரு பிரிவாகச் சிறப்பாகச் செயல்பட உள்ளது. இதன் மூலம் காது கேளாத குழந்தைகளுக்கு அனைத்து சிறப்புப் பரிசோதனைகள், சிறப்பு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை, சிறப்புப் பேச்சுப் பயிற்சி ஆகிய அனைத்தையும் வழங்கி அரசு மருந்துவமனை ஓர் ஒருங்கிணைந்த காக்ளியர் இம்பிளான்ட் அறுவைசிகிச்சை மையமாக செயல்பட உள்ளது'' எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காது , மூக்கு , தொண்டை பிரிவு மருத்துவர்கள், தினகரன், ராஜகணேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment