FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, December 27, 2017

காது கேளாத, வாய் பேசாத 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை! அரசு மருத்துவர்கள் சாதனை

27.12.2017
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று ஆடியோ வெர்பெல் தெரப்பி எனும் காக்ளியர் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பேச்சுப் பயிற்சிக்கான முறை கொண்டுவரப்பட்டது. அரசு மருத்துவமனையிலையே வயதுவரம்பு அரசு காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை மூலம் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி கூறுகையில், “தென் தமிழகத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறவியிலே முற்றிலும் காது கேளாத, வாய் பேசாத 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூபாய் 7 லட்சம் பெறுமான காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஜனவரி முதல் தற்போதுவரை 61 குழந்தைகளுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை சிறப்பாகச் செய்யப்படுகிறது . இதுவரை 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டு இன்று நல்ல முறையில் காது கேட்கவும் பேசிக் கொண்டும் உள்ளனர்.

தற்போது கொண்டுவந்துள்ள பயிற்சி முறை மூலம் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சாதாரண குழந்தைகளுடன் சேர்ந்து பயில இயலும். காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பேச்சுப் பயிற்சி மதுரை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் ஒரு பிரிவாகச் சிறப்பாகச் செயல்பட உள்ளது. இதன் மூலம் காது கேளாத குழந்தைகளுக்கு அனைத்து சிறப்புப் பரிசோதனைகள், சிறப்பு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை, சிறப்புப் பேச்சுப் பயிற்சி ஆகிய அனைத்தையும் வழங்கி அரசு மருந்துவமனை ஓர் ஒருங்கிணைந்த காக்ளியர் இம்பிளான்ட் அறுவைசிகிச்சை மையமாக செயல்பட உள்ளது'' எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காது , மூக்கு , தொண்டை பிரிவு மருத்துவர்கள், தினகரன், ராஜகணேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment