FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, December 17, 2017

வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள் 'ஆதார்' தகவலால் வீடு திரும்பினர்

16.12.2017
சென்னை, சென்னையில் செயல்படும், தனியார் காப்பகத்தின் உதவியால், உறவினர்களை பிரிந்து தவித்த, வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள், 'ஆதார்' பதிவு தகவலின் அடிப்படையில், மீண்டும் வீடு திரும்பினர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான காப்பகம் செயல்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன், நகரின் வெவ்வேறு பகுதி களில், ஆதரவின்றி சுற்றித் திரிந்த, வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள் மூவரை, இந்த காப்பகம் அரவணைத்தது.தங்களை பற்றிய தகவல்களையோ, வீட்டு முகவரி பற்றிய குறிப்பையோ, கூற இயலாத நிலையில் இருந்த அவர்களை, எப்படியாவது, அவர்களின் உறவினர்களுடன் இணைக்கும் முயற்சியில், காப்பக நிர்வாகிகள் செயல்பட்டனர். அவர்களை, ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்துச் சென்று, பதிவு செய்ய முயன்ற போது, அவர்கள் மூவரும், ஏற்கனவே, ஆதார் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, காப்பக நிர்வாகத்தின் சார்பில், ஆதார் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. அவர்கள் விடுத்த வேண்டு கோளை தொடர்ந்து, ஆதார் பதிவில் இடம் பெற்றுள்ள, மூவரின் விபரங்களும் பெறப்பட்டன. இதையடுத்து, போலீசார் உதவியுடன், மூவரின் உறவினர்களை தொடர்பு கொண்டு, அவர்களுடன் அனுப்பி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த, வேங்கடலக் ஷம்மா, 45, அவரது மகளுடன் அனுப்பி வைக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, சிந்தலா ரஜிதா, 27, அவரது தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.காப்பகத்தில் இருந்த மற்றொரு பெண், பார்வதி, 19, ஈரோட்டைச் சேர்ந்தவர் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது தாயாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. எனினும், அவரின் தாயாருடன் செல்ல, பார்வதி மறுத்து விட்டார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பார்வதி, பல முறை வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக, அவரது தாயார் தெரிவித்தார்.தன்னுடன் இருப்பதை விட, காப்பகத்தில், மகள் பார்வதிக்கு பாதுகாப்பு அதிகம் என, அவரது தாயார் கூறியதை தொடர்ந்து, பார்வதி, அங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளார். மாதம் ஒரு முறை, தன் மகளை சந்திப்பதாக, அவர் உறுதியளித்து உள்ளார்.இது குறித்து, காப்பக இயக்குனர், டாக்டர் ஐஸ்வர்யா கூறியதாவது:காணாமல் போனவர்களை, ஆதார் பதிவின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அவர்களின் உறவினர்களுடன் சேர்த்து வைத்த சம்பவங்கள், இதற்கு முன்னரும் நடந்துள்ளன.ஆனாலும், காது கேளாத, வாய் பேச முடியாத பெண்களை, அவர்களது உறவினர்களுடன் சேர்த்து வைத்துள்ளது, இதுவே முதன்முறை என, ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment