FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, December 17, 2017

வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள் 'ஆதார்' தகவலால் வீடு திரும்பினர்

16.12.2017
சென்னை, சென்னையில் செயல்படும், தனியார் காப்பகத்தின் உதவியால், உறவினர்களை பிரிந்து தவித்த, வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள், 'ஆதார்' பதிவு தகவலின் அடிப்படையில், மீண்டும் வீடு திரும்பினர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான காப்பகம் செயல்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன், நகரின் வெவ்வேறு பகுதி களில், ஆதரவின்றி சுற்றித் திரிந்த, வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள் மூவரை, இந்த காப்பகம் அரவணைத்தது.தங்களை பற்றிய தகவல்களையோ, வீட்டு முகவரி பற்றிய குறிப்பையோ, கூற இயலாத நிலையில் இருந்த அவர்களை, எப்படியாவது, அவர்களின் உறவினர்களுடன் இணைக்கும் முயற்சியில், காப்பக நிர்வாகிகள் செயல்பட்டனர். அவர்களை, ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்துச் சென்று, பதிவு செய்ய முயன்ற போது, அவர்கள் மூவரும், ஏற்கனவே, ஆதார் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, காப்பக நிர்வாகத்தின் சார்பில், ஆதார் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. அவர்கள் விடுத்த வேண்டு கோளை தொடர்ந்து, ஆதார் பதிவில் இடம் பெற்றுள்ள, மூவரின் விபரங்களும் பெறப்பட்டன. இதையடுத்து, போலீசார் உதவியுடன், மூவரின் உறவினர்களை தொடர்பு கொண்டு, அவர்களுடன் அனுப்பி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த, வேங்கடலக் ஷம்மா, 45, அவரது மகளுடன் அனுப்பி வைக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, சிந்தலா ரஜிதா, 27, அவரது தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.காப்பகத்தில் இருந்த மற்றொரு பெண், பார்வதி, 19, ஈரோட்டைச் சேர்ந்தவர் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது தாயாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. எனினும், அவரின் தாயாருடன் செல்ல, பார்வதி மறுத்து விட்டார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பார்வதி, பல முறை வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக, அவரது தாயார் தெரிவித்தார்.தன்னுடன் இருப்பதை விட, காப்பகத்தில், மகள் பார்வதிக்கு பாதுகாப்பு அதிகம் என, அவரது தாயார் கூறியதை தொடர்ந்து, பார்வதி, அங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளார். மாதம் ஒரு முறை, தன் மகளை சந்திப்பதாக, அவர் உறுதியளித்து உள்ளார்.இது குறித்து, காப்பக இயக்குனர், டாக்டர் ஐஸ்வர்யா கூறியதாவது:காணாமல் போனவர்களை, ஆதார் பதிவின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அவர்களின் உறவினர்களுடன் சேர்த்து வைத்த சம்பவங்கள், இதற்கு முன்னரும் நடந்துள்ளன.ஆனாலும், காது கேளாத, வாய் பேச முடியாத பெண்களை, அவர்களது உறவினர்களுடன் சேர்த்து வைத்துள்ளது, இதுவே முதன்முறை என, ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment