FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, December 17, 2017

வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள் 'ஆதார்' தகவலால் வீடு திரும்பினர்

16.12.2017
சென்னை, சென்னையில் செயல்படும், தனியார் காப்பகத்தின் உதவியால், உறவினர்களை பிரிந்து தவித்த, வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள், 'ஆதார்' பதிவு தகவலின் அடிப்படையில், மீண்டும் வீடு திரும்பினர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான காப்பகம் செயல்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன், நகரின் வெவ்வேறு பகுதி களில், ஆதரவின்றி சுற்றித் திரிந்த, வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள் மூவரை, இந்த காப்பகம் அரவணைத்தது.தங்களை பற்றிய தகவல்களையோ, வீட்டு முகவரி பற்றிய குறிப்பையோ, கூற இயலாத நிலையில் இருந்த அவர்களை, எப்படியாவது, அவர்களின் உறவினர்களுடன் இணைக்கும் முயற்சியில், காப்பக நிர்வாகிகள் செயல்பட்டனர். அவர்களை, ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்துச் சென்று, பதிவு செய்ய முயன்ற போது, அவர்கள் மூவரும், ஏற்கனவே, ஆதார் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, காப்பக நிர்வாகத்தின் சார்பில், ஆதார் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. அவர்கள் விடுத்த வேண்டு கோளை தொடர்ந்து, ஆதார் பதிவில் இடம் பெற்றுள்ள, மூவரின் விபரங்களும் பெறப்பட்டன. இதையடுத்து, போலீசார் உதவியுடன், மூவரின் உறவினர்களை தொடர்பு கொண்டு, அவர்களுடன் அனுப்பி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த, வேங்கடலக் ஷம்மா, 45, அவரது மகளுடன் அனுப்பி வைக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, சிந்தலா ரஜிதா, 27, அவரது தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.காப்பகத்தில் இருந்த மற்றொரு பெண், பார்வதி, 19, ஈரோட்டைச் சேர்ந்தவர் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது தாயாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. எனினும், அவரின் தாயாருடன் செல்ல, பார்வதி மறுத்து விட்டார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பார்வதி, பல முறை வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக, அவரது தாயார் தெரிவித்தார்.தன்னுடன் இருப்பதை விட, காப்பகத்தில், மகள் பார்வதிக்கு பாதுகாப்பு அதிகம் என, அவரது தாயார் கூறியதை தொடர்ந்து, பார்வதி, அங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளார். மாதம் ஒரு முறை, தன் மகளை சந்திப்பதாக, அவர் உறுதியளித்து உள்ளார்.இது குறித்து, காப்பக இயக்குனர், டாக்டர் ஐஸ்வர்யா கூறியதாவது:காணாமல் போனவர்களை, ஆதார் பதிவின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அவர்களின் உறவினர்களுடன் சேர்த்து வைத்த சம்பவங்கள், இதற்கு முன்னரும் நடந்துள்ளன.ஆனாலும், காது கேளாத, வாய் பேச முடியாத பெண்களை, அவர்களது உறவினர்களுடன் சேர்த்து வைத்துள்ளது, இதுவே முதன்முறை என, ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment