FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, May 26, 2018

ஊனத்தை நொறுக்கி தள்ளிய காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள்.. 10-ம் வகுப்பில் சதமடித்து சாதனை!

25.05.2018
கோவை: பத்தாம் வகுப்பு தேர்வு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து, ஊனம் என்பது கல்விக்கு எப்போதும் தடையில்லை என்பதை நிரூபித்து உள்ளனர் கோவை மாநகராட்சி பள்ளியில் படித்த காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள். 

கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய ஏழு பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

சைகை மொழியே சொந்தம் 

தேர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது இவர்களுக்கு சாதாரண காரியமாக இல்லாத போதிலும், இதற்கும் மேலாக இருந்து, கணித பாடத்தில் அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதித்து உள்ளனர். சைகை மொழி மட்டுமே தனக்கே உரித்த பாணியில் ஒவ்வொரு நாளையும் சாதனையாக கடந்து வரும் இந்த மாணவிகள் மேலும் தற்போது ஒரு படி சாதனையை உயர்த்தி காண்பித்து உள்ளனர்.

கை கொடுத்த கடின உழைப்பு 

மற்ற பாடங்களை காட்டிலும் கணித பாடத்தை இந்த மாணவர்கள் புரிந்து கொள்ள பல கடினங்களை சந்தித்து வந்தாலும், கடின உழைப்பாலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவாலும் இந்த மதிப்பெண்ணை எடுத்துக் காட்டி உள்ளனர். பல காரணங்களால் சில நாட்கள் வீட்டில் முடக்கி வைத்து இருந்த தனது பிள்ளையை இதுபோன்ற ஒரு பள்ளியில் படிக்க வைத்தது தற்போது பெருமை அளிப்பதாகவும் இவரை போன்று உள்ள குழந்தைகளை அனைத்து பெற்றோர்களின் கல்வி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கின்றனர்.

பெருமைப்படும் ஆசிரியர்கள் 

சாதாரண மாணவர்களை விட இதுபோன்று சிறப்பு மாணவர்களுக்கு தனி கவனத்துடன், பல்வேறு இடர் பாடுகளுடன் பாடங்களை கற்பித்து வருவதாகவும், இருப்பினும் இவர்களின் தேர்ச்சி தங்களுக்கு பெருமையை அளிப்பதாக உள்ளதாக கூறுகின்றனர் ஆசிரியர்கள். இதனால் மற்ற காது கேளாத, மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு மாணவிகளின் இந்த மதிப்பெண்கள் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

அரசின் உதவி தேவை 

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள் ஒவ்வொருவரும் பல இன்னல்களுக்கு இடையே இந்த பொதுத் தேர்வை எழுதுவதாகவும், இருப்பினும் இந்த மாணவர்களுக்காக அரசு தேர்வு எழுதுவதில் சில சலுகைகளை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.தற்போது இந்த மணாவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும் , அடுத்த மேல் படிப்பிற்காக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பெற்றோர்கள் முன் வைக்கின்றனர்.

No comments:

Post a Comment