FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, May 9, 2018

மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவமதிப்பு அரசு டாக்டர் மீது போலீசில் புகார்


திருச்சி, மே 8: மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச்சேர்ந்தவர் ராஜேந்திரன்(41). வாய் பேசமுடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி. இவரது மகள் லில்லிபுஷ்பம்(17). இவரும் அதே குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை ரயில் பாஸ் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இதனால் கடந்த 4ம் தேதி வெள்ளிக்கிழமை ராஜேந்திரன் தனது மகள் லில்லி புஷ்பம், அருகில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காதுமூக்குதொண்டை பிரிவுக்கு சென்று மருத்துவர் பழனிசாமியை பார்த்து சான்றிதழ் கேட்டனர்.

ஆனால் மருத்துவர் பழனிசாமி சான்றிதழ் தரமறுத்து, அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கேட்டுக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி, மருத்துவரிடம் தரைக்குறைவாக பேசவேண்டாம் என சொன்னதற்கு, அவரையும் மருத்துவர் திட்டி அனுப்பியுள்ளார். இந்நிலையில் இதை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் கோபிநாத், பொருளாளர் புஷ்பநாதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளை அழைத்துக்கொண்டு நேற்று காலை மருத்துவ மனை டீன் அனிதாவை சந்தித்து புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட டீன், துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, வேறு மருத்துவர் மூலம் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஜிஹெச் காவல்நிலையத்தில் மருத்துவர் பழனிசாமி மீது ராஜேந் திரன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பெரும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment