FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, May 9, 2018

மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவமதிப்பு அரசு டாக்டர் மீது போலீசில் புகார்


திருச்சி, மே 8: மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச்சேர்ந்தவர் ராஜேந்திரன்(41). வாய் பேசமுடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி. இவரது மகள் லில்லிபுஷ்பம்(17). இவரும் அதே குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை ரயில் பாஸ் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இதனால் கடந்த 4ம் தேதி வெள்ளிக்கிழமை ராஜேந்திரன் தனது மகள் லில்லி புஷ்பம், அருகில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காதுமூக்குதொண்டை பிரிவுக்கு சென்று மருத்துவர் பழனிசாமியை பார்த்து சான்றிதழ் கேட்டனர்.

ஆனால் மருத்துவர் பழனிசாமி சான்றிதழ் தரமறுத்து, அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கேட்டுக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி, மருத்துவரிடம் தரைக்குறைவாக பேசவேண்டாம் என சொன்னதற்கு, அவரையும் மருத்துவர் திட்டி அனுப்பியுள்ளார். இந்நிலையில் இதை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் கோபிநாத், பொருளாளர் புஷ்பநாதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளை அழைத்துக்கொண்டு நேற்று காலை மருத்துவ மனை டீன் அனிதாவை சந்தித்து புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட டீன், துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, வேறு மருத்துவர் மூலம் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஜிஹெச் காவல்நிலையத்தில் மருத்துவர் பழனிசாமி மீது ராஜேந் திரன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பெரும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment