FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, May 9, 2018

மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவமதிப்பு அரசு டாக்டர் மீது போலீசில் புகார்


திருச்சி, மே 8: மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச்சேர்ந்தவர் ராஜேந்திரன்(41). வாய் பேசமுடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி. இவரது மகள் லில்லிபுஷ்பம்(17). இவரும் அதே குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை ரயில் பாஸ் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இதனால் கடந்த 4ம் தேதி வெள்ளிக்கிழமை ராஜேந்திரன் தனது மகள் லில்லி புஷ்பம், அருகில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காதுமூக்குதொண்டை பிரிவுக்கு சென்று மருத்துவர் பழனிசாமியை பார்த்து சான்றிதழ் கேட்டனர்.

ஆனால் மருத்துவர் பழனிசாமி சான்றிதழ் தரமறுத்து, அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கேட்டுக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி, மருத்துவரிடம் தரைக்குறைவாக பேசவேண்டாம் என சொன்னதற்கு, அவரையும் மருத்துவர் திட்டி அனுப்பியுள்ளார். இந்நிலையில் இதை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் கோபிநாத், பொருளாளர் புஷ்பநாதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளை அழைத்துக்கொண்டு நேற்று காலை மருத்துவ மனை டீன் அனிதாவை சந்தித்து புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட டீன், துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, வேறு மருத்துவர் மூலம் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஜிஹெச் காவல்நிலையத்தில் மருத்துவர் பழனிசாமி மீது ராஜேந் திரன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பெரும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment