FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, May 9, 2018

மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவமதிப்பு அரசு டாக்டர் மீது போலீசில் புகார்


திருச்சி, மே 8: மருத்துவ சான்றிதழ் வாங்கச் சென்ற மாற்றுத்திறனாளிகளை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச்சேர்ந்தவர் ராஜேந்திரன்(41). வாய் பேசமுடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி. இவரது மகள் லில்லிபுஷ்பம்(17). இவரும் அதே குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை ரயில் பாஸ் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இதனால் கடந்த 4ம் தேதி வெள்ளிக்கிழமை ராஜேந்திரன் தனது மகள் லில்லி புஷ்பம், அருகில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காதுமூக்குதொண்டை பிரிவுக்கு சென்று மருத்துவர் பழனிசாமியை பார்த்து சான்றிதழ் கேட்டனர்.

ஆனால் மருத்துவர் பழனிசாமி சான்றிதழ் தரமறுத்து, அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கேட்டுக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி கலியமூர்த்தி, மருத்துவரிடம் தரைக்குறைவாக பேசவேண்டாம் என சொன்னதற்கு, அவரையும் மருத்துவர் திட்டி அனுப்பியுள்ளார். இந்நிலையில் இதை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் கோபிநாத், பொருளாளர் புஷ்பநாதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளை அழைத்துக்கொண்டு நேற்று காலை மருத்துவ மனை டீன் அனிதாவை சந்தித்து புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட டீன், துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, வேறு மருத்துவர் மூலம் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஜிஹெச் காவல்நிலையத்தில் மருத்துவர் பழனிசாமி மீது ராஜேந் திரன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பெரும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment