FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, May 26, 2018

கோவை கலெக்டர் அலுவலகத்தின் அலட்சியம்.. காது கேளாத முதியவர் இரவு வரை உணவின்றி காத்துகிடந்த அவலம்!

25.05.2018
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காது கேளாத 85 வயது முதியவரை அதிகாரிகள் காத்திருக்க கூறிய நிலையில் இரவு வரை உணவின்றி காத்திருந்த அவலம் அரங்கேறியுள்ளது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் மனு நீதி நாள் முகாம் நடைபெறும். அந்நாட்களில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்குவர்.

இந்த நிலையில் நேற்று மனு நீதி நாளை முன்னிட்டு கோவை சோமனூர் அடுத்த ஊஞ்சம்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயது முதியவரான போஜராஜன் என்பவர் முதியோர் உதவி தொகை பெறுவதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மனு நீதி நாள் முகாமில் தனது மனுவையும் அளித்துள்ளார். மனுவை பரிசீலித்த அதிகாரிகள் நாளைய தினம் (இன்று) வட்டாட்சியர் வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நாளை வரவும் எனவும் கூறியுள்ளனர். 

ஆனால் தனக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாக முதியவர் கூறியதை தொடர்ந்து, அங்கேயே காத்திருந்து ஓய்வூதியம் பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர். 

இதையடுத்து அதிகாரிகள் தனக்கு ஓய்வூதியம் வழங்குவார்கள் என நம்பி இரவு 9 மணி வரை ஆட்சியர்அலுவலகத்தின் ஒரு பகுதியில் முதியவர் காத்துக் கொண்டே இருந்தார். முதியவர் நீண்ட நேரம் அங்கிருப்பதை கண்ட அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் சிலர் காரணம் கேட்டறிந்தனர். பின்னர் அவரது விலாசத்தை பெற்று அவரின் மகனிடம் முதியவரை ஒப்படைத்தனர். 

உதவி கேட்டு வரும் பொதுமக்களை அரசு அதிகாரிகள் காக்க வைப்பதும் அலைக்கழிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. தள்ளாத வயதிலுள்ள காது கேளாத முதியவரை காத்திருக்க வைத்த அதிகாரி யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

No comments:

Post a Comment