FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, May 26, 2018

கோவை கலெக்டர் அலுவலகத்தின் அலட்சியம்.. காது கேளாத முதியவர் இரவு வரை உணவின்றி காத்துகிடந்த அவலம்!

25.05.2018
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காது கேளாத 85 வயது முதியவரை அதிகாரிகள் காத்திருக்க கூறிய நிலையில் இரவு வரை உணவின்றி காத்திருந்த அவலம் அரங்கேறியுள்ளது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் மனு நீதி நாள் முகாம் நடைபெறும். அந்நாட்களில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்குவர்.

இந்த நிலையில் நேற்று மனு நீதி நாளை முன்னிட்டு கோவை சோமனூர் அடுத்த ஊஞ்சம்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயது முதியவரான போஜராஜன் என்பவர் முதியோர் உதவி தொகை பெறுவதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மனு நீதி நாள் முகாமில் தனது மனுவையும் அளித்துள்ளார். மனுவை பரிசீலித்த அதிகாரிகள் நாளைய தினம் (இன்று) வட்டாட்சியர் வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நாளை வரவும் எனவும் கூறியுள்ளனர். 

ஆனால் தனக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாக முதியவர் கூறியதை தொடர்ந்து, அங்கேயே காத்திருந்து ஓய்வூதியம் பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர். 

இதையடுத்து அதிகாரிகள் தனக்கு ஓய்வூதியம் வழங்குவார்கள் என நம்பி இரவு 9 மணி வரை ஆட்சியர்அலுவலகத்தின் ஒரு பகுதியில் முதியவர் காத்துக் கொண்டே இருந்தார். முதியவர் நீண்ட நேரம் அங்கிருப்பதை கண்ட அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் சிலர் காரணம் கேட்டறிந்தனர். பின்னர் அவரது விலாசத்தை பெற்று அவரின் மகனிடம் முதியவரை ஒப்படைத்தனர். 

உதவி கேட்டு வரும் பொதுமக்களை அரசு அதிகாரிகள் காக்க வைப்பதும் அலைக்கழிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. தள்ளாத வயதிலுள்ள காது கேளாத முதியவரை காத்திருக்க வைத்த அதிகாரி யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

No comments:

Post a Comment