FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, May 26, 2018

வாய் பேசா பெண் கீதாவை திருமணம் செய்ய 50 பேர் போட்டா போட்டி

25.05.2018
இந்துார்: பாக்.,கில் இருந்து, இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத இளம் பெண், கீதாவை திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்த, 50 பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட, 25 பேரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி, வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தன், 9 வயதில், பெற்றோரை பிரிந்து, ரயில் ஏறி, லாகூர் சென்ற, காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை, தன்னார்வலர் ஒருவர் தத்தெடுத்து, 'கீதா' என்று பெயரிட்டு வளர்த்தார்.மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்த கீதா, மத்திய வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உதவியுடன், பெறோரை தேடி வருகிறார்.

தற்போது, 25 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, காது கேளாத, வாய் பேசாத சிறுமியருக்கான ஆதரவு இல்லத்தில் தங்கிஉள்ளார்.பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால் மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார்.

இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கீதாவை திருமணம் செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கீதாவை திருமணம் செய்ய, 50 பேர் விருப்பம் தெரிவித்தனர். அவர்களில், 25 பேரை, வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டோர் விபரங்களை, இந்துார் நகர நிர்வாகத்துக்கு அனுப்பிய வெளியுறவு அமைச்சகம், அவர்கள் அனைவரையும், கீதா சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளது. அவர்களில், தான் விரும்பும் ஆணுடன், கீதாவுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment