FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, May 26, 2018

வாய் பேசா பெண் கீதாவை திருமணம் செய்ய 50 பேர் போட்டா போட்டி

25.05.2018
இந்துார்: பாக்.,கில் இருந்து, இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத இளம் பெண், கீதாவை திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்த, 50 பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட, 25 பேரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி, வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தன், 9 வயதில், பெற்றோரை பிரிந்து, ரயில் ஏறி, லாகூர் சென்ற, காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை, தன்னார்வலர் ஒருவர் தத்தெடுத்து, 'கீதா' என்று பெயரிட்டு வளர்த்தார்.மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்த கீதா, மத்திய வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உதவியுடன், பெறோரை தேடி வருகிறார்.

தற்போது, 25 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, காது கேளாத, வாய் பேசாத சிறுமியருக்கான ஆதரவு இல்லத்தில் தங்கிஉள்ளார்.பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால் மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார்.

இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கீதாவை திருமணம் செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கீதாவை திருமணம் செய்ய, 50 பேர் விருப்பம் தெரிவித்தனர். அவர்களில், 25 பேரை, வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டோர் விபரங்களை, இந்துார் நகர நிர்வாகத்துக்கு அனுப்பிய வெளியுறவு அமைச்சகம், அவர்கள் அனைவரையும், கீதா சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளது. அவர்களில், தான் விரும்பும் ஆணுடன், கீதாவுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment