FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, February 15, 2019

காதலர் தினத்தை கண் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடிய ஐடி ஊழியர்கள்

14.02.2019
சென்னை அருகே காதலர் தினத்தை கண்பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன்தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் கொண்டாடியுள்ளனர்.

சென்னையில் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100கும் மேற்பட்ட செவி திறன் மற்றும் பார்வை திறன் குறையுள்ள குழந்தைகள் பயின்று வருகின்றனர். காதலர் தினமான நேற்று இளைஞர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.

இதனை மாற்றும் வகையில் ’நம்பிக்கைக்கான முயற்சி’ என்ற அமைப்பின் தலைவர் சரவணன் மற்றும் துணை தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் புது விதமாக காதலர் தினத்தை கொண்டாடினர். தனியார் மென்பொருள் பணியாளர்கள்குழந்தைகளுக்கு ஒட்டப்பந்தயம்,பின்னோக்கி நடத்தல் போன்றவிளையாட்டுகள் நடத்தினர். இதில் எல்லா குழந்தையும் கலந்து கொண்டு அவர்களின் திறமையை வெளிப்படுதினர்.

இதனை தொடர்ந்து மாற்று திறனாளி மாணவி ஒருவர் பாடலின் வரிகள் தவறாமல் அப்படியே பாடியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

பின்னர் இப்பள்ளியில் கல்வியாண்டில் சிறப்பாக பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த மாற்று கொண்டாட்ட நிகழ்வில் தனியார் நிறுவன ஊழியர்கள் 200கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதுபோன்ற மாற்று முறையில் காதலர் தினத்தை கொண்டாடியது மிகுந்த மனநிறைவை தருவதாகவும்,காதல்மற்றவர்களுக்கு பகிரப்படும் குறிப்பாக இதுபோன்ற மாற்று திறனாளிகளுடன் கொண்டாடி அவர்களையும் மகிழ்ச்சிடன் வைத்துக்கொள்ளுதல் வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment