FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, February 15, 2019

காதலர் தினத்தை கண் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடிய ஐடி ஊழியர்கள்

14.02.2019
சென்னை அருகே காதலர் தினத்தை கண்பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன்தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் கொண்டாடியுள்ளனர்.

சென்னையில் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100கும் மேற்பட்ட செவி திறன் மற்றும் பார்வை திறன் குறையுள்ள குழந்தைகள் பயின்று வருகின்றனர். காதலர் தினமான நேற்று இளைஞர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.

இதனை மாற்றும் வகையில் ’நம்பிக்கைக்கான முயற்சி’ என்ற அமைப்பின் தலைவர் சரவணன் மற்றும் துணை தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் புது விதமாக காதலர் தினத்தை கொண்டாடினர். தனியார் மென்பொருள் பணியாளர்கள்குழந்தைகளுக்கு ஒட்டப்பந்தயம்,பின்னோக்கி நடத்தல் போன்றவிளையாட்டுகள் நடத்தினர். இதில் எல்லா குழந்தையும் கலந்து கொண்டு அவர்களின் திறமையை வெளிப்படுதினர்.

இதனை தொடர்ந்து மாற்று திறனாளி மாணவி ஒருவர் பாடலின் வரிகள் தவறாமல் அப்படியே பாடியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

பின்னர் இப்பள்ளியில் கல்வியாண்டில் சிறப்பாக பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த மாற்று கொண்டாட்ட நிகழ்வில் தனியார் நிறுவன ஊழியர்கள் 200கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதுபோன்ற மாற்று முறையில் காதலர் தினத்தை கொண்டாடியது மிகுந்த மனநிறைவை தருவதாகவும்,காதல்மற்றவர்களுக்கு பகிரப்படும் குறிப்பாக இதுபோன்ற மாற்று திறனாளிகளுடன் கொண்டாடி அவர்களையும் மகிழ்ச்சிடன் வைத்துக்கொள்ளுதல் வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment