FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, February 15, 2019

காதலர் தினத்தை கண் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடிய ஐடி ஊழியர்கள்

14.02.2019
சென்னை அருகே காதலர் தினத்தை கண்பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன்தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் கொண்டாடியுள்ளனர்.

சென்னையில் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100கும் மேற்பட்ட செவி திறன் மற்றும் பார்வை திறன் குறையுள்ள குழந்தைகள் பயின்று வருகின்றனர். காதலர் தினமான நேற்று இளைஞர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.

இதனை மாற்றும் வகையில் ’நம்பிக்கைக்கான முயற்சி’ என்ற அமைப்பின் தலைவர் சரவணன் மற்றும் துணை தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் புது விதமாக காதலர் தினத்தை கொண்டாடினர். தனியார் மென்பொருள் பணியாளர்கள்குழந்தைகளுக்கு ஒட்டப்பந்தயம்,பின்னோக்கி நடத்தல் போன்றவிளையாட்டுகள் நடத்தினர். இதில் எல்லா குழந்தையும் கலந்து கொண்டு அவர்களின் திறமையை வெளிப்படுதினர்.

இதனை தொடர்ந்து மாற்று திறனாளி மாணவி ஒருவர் பாடலின் வரிகள் தவறாமல் அப்படியே பாடியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

பின்னர் இப்பள்ளியில் கல்வியாண்டில் சிறப்பாக பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த மாற்று கொண்டாட்ட நிகழ்வில் தனியார் நிறுவன ஊழியர்கள் 200கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதுபோன்ற மாற்று முறையில் காதலர் தினத்தை கொண்டாடியது மிகுந்த மனநிறைவை தருவதாகவும்,காதல்மற்றவர்களுக்கு பகிரப்படும் குறிப்பாக இதுபோன்ற மாற்று திறனாளிகளுடன் கொண்டாடி அவர்களையும் மகிழ்ச்சிடன் வைத்துக்கொள்ளுதல் வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment