FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, February 15, 2019

காதலர் தினத்தை கண் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடிய ஐடி ஊழியர்கள்

14.02.2019
சென்னை அருகே காதலர் தினத்தை கண்பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன்தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் கொண்டாடியுள்ளனர்.

சென்னையில் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100கும் மேற்பட்ட செவி திறன் மற்றும் பார்வை திறன் குறையுள்ள குழந்தைகள் பயின்று வருகின்றனர். காதலர் தினமான நேற்று இளைஞர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.

இதனை மாற்றும் வகையில் ’நம்பிக்கைக்கான முயற்சி’ என்ற அமைப்பின் தலைவர் சரவணன் மற்றும் துணை தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் புது விதமாக காதலர் தினத்தை கொண்டாடினர். தனியார் மென்பொருள் பணியாளர்கள்குழந்தைகளுக்கு ஒட்டப்பந்தயம்,பின்னோக்கி நடத்தல் போன்றவிளையாட்டுகள் நடத்தினர். இதில் எல்லா குழந்தையும் கலந்து கொண்டு அவர்களின் திறமையை வெளிப்படுதினர்.

இதனை தொடர்ந்து மாற்று திறனாளி மாணவி ஒருவர் பாடலின் வரிகள் தவறாமல் அப்படியே பாடியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

பின்னர் இப்பள்ளியில் கல்வியாண்டில் சிறப்பாக பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த மாற்று கொண்டாட்ட நிகழ்வில் தனியார் நிறுவன ஊழியர்கள் 200கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதுபோன்ற மாற்று முறையில் காதலர் தினத்தை கொண்டாடியது மிகுந்த மனநிறைவை தருவதாகவும்,காதல்மற்றவர்களுக்கு பகிரப்படும் குறிப்பாக இதுபோன்ற மாற்று திறனாளிகளுடன் கொண்டாடி அவர்களையும் மகிழ்ச்சிடன் வைத்துக்கொள்ளுதல் வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment