FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, February 15, 2019

காதலர் தினத்தை கண் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடிய ஐடி ஊழியர்கள்

14.02.2019
சென்னை அருகே காதலர் தினத்தை கண்பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன்தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் கொண்டாடியுள்ளனர்.

சென்னையில் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100கும் மேற்பட்ட செவி திறன் மற்றும் பார்வை திறன் குறையுள்ள குழந்தைகள் பயின்று வருகின்றனர். காதலர் தினமான நேற்று இளைஞர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.

இதனை மாற்றும் வகையில் ’நம்பிக்கைக்கான முயற்சி’ என்ற அமைப்பின் தலைவர் சரவணன் மற்றும் துணை தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பார்வையற்ற மற்றும் காது கேளாத குழந்தைகளுடன் புது விதமாக காதலர் தினத்தை கொண்டாடினர். தனியார் மென்பொருள் பணியாளர்கள்குழந்தைகளுக்கு ஒட்டப்பந்தயம்,பின்னோக்கி நடத்தல் போன்றவிளையாட்டுகள் நடத்தினர். இதில் எல்லா குழந்தையும் கலந்து கொண்டு அவர்களின் திறமையை வெளிப்படுதினர்.

இதனை தொடர்ந்து மாற்று திறனாளி மாணவி ஒருவர் பாடலின் வரிகள் தவறாமல் அப்படியே பாடியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

பின்னர் இப்பள்ளியில் கல்வியாண்டில் சிறப்பாக பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த மாற்று கொண்டாட்ட நிகழ்வில் தனியார் நிறுவன ஊழியர்கள் 200கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதுபோன்ற மாற்று முறையில் காதலர் தினத்தை கொண்டாடியது மிகுந்த மனநிறைவை தருவதாகவும்,காதல்மற்றவர்களுக்கு பகிரப்படும் குறிப்பாக இதுபோன்ற மாற்று திறனாளிகளுடன் கொண்டாடி அவர்களையும் மகிழ்ச்சிடன் வைத்துக்கொள்ளுதல் வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment