FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, February 13, 2019

வாய் பேச இயலாத மாணவிக்கு லேப்டாப்: தி.மு.க., - மா.செ., வழங்கினார்

13.02.2019
மொடக்குறிச்சி: தி.மு.க., ஊராட்சி சபை கூட்டத்தில், மனு கொடுத்த, வாய் பேச இயலாத கல்லூரி மாணவிக்கு, லேப்டாப் வழங்கப்பட்டது. மொடக்குறிச்சி யூனியன், கண்டிக்காட்டு வலசு பஞ்., பொன்னாத்தா வலசு காலனியை சேர்ந்த, கந்தசாமி மகள் கமலவேணி, 24, வாய் பேச இயலாத, செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளி. இவர் அரச்சலூர் தனியார் கல்லூரியில், பி.ஏ., மூன்றாமாண்டு படிக்கிறார். குடும்ப சூழ்நிலை ஏழ்மையாக உள்ளதால், லேப்டாப்பில் பயிற்சி எடுத்து வேலைக்கு செல்ல ஆசைபட்டார். சமீபத்தில், அப்பகுதியில் தி.மு.க., சார்பில், கிராமசபை கூட்டம் நடந்தது. இதில், லேப்டாப் வழங்கி உதவுமாறு, கமலவேணி மனு கொடுத்தார். மாவட்ட செயலாளர் முத்துசாமி, தி.மு.க., நிர்வாகிகளுடன், கமலவேணியின் வீட்டுக்கு சென்று, லேப்டாப் வழங்கினார்.

No comments:

Post a Comment