FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, February 11, 2019

குழந்தையின் காதுகேட்புக் கருவியை திருடிச்சென்ற திருடர்கள்! - பரிதாபத்தில் பெற்றோர்

08.02.2019
கேரள மாநிலம் கண்ணுரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரின் 2 வயது மகள் நித்யா. இந்தக் குழந்தைக்கு பிறவியில் இருந்தே காது கேட்காது. ராஜேஷ், தினக் கூலி. பெற்றோருக்கு, தங்கள் குழந்தையின் மழலைப் பேச்சை கேட்க ஆசையில்லாமல் இருக்குமா. குழந்தை நித்யாவுக்கு பேச்சு வரவழைக்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுவருகின்றனர். கடனை வாங்கி குழந்தைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள காது கேட்புக் கருவியை கஷ்டப்பட்டு வாங்கினர். அதுவும், கடந்த 4 மாதங்களுக்கு முன்தான் வாங்கியுள்ளனர். கருவியை மாட்டிய பிறகு குழந்தை நித்யாவுக்கு ஓரளவுக்கு பேச்சு கேட்கத் தொடங்கியது. குழந்தை தட்டித் தடுமாறி பேசவும் செய்தது. இதனால், பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கண்ணூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு சென்னை ரயிலில் தாயாருடன் நித்யா சென்றபோது, திருடர்கள் குழந்தையின் காது கேட்புக் கருவியை திருடிச் சென்றுவிட்டனர். மகளுக்காக கஷ்டப்பட்டு வாங்கிய கருவியும் திருடு போனதால், பெற்றோர் நொந்துபோனார்கள். தங்கள் மகளுக்கு மீண்டும் காது கேட்காமல் போனதைக் கண்டு கடும் வேதனை அடைந்துள்ளனர். 

ரயில்வே போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை மதிப்புமிக்க பொருள் எனக் கருதி திருடர்கள் திருடிச் சென்றிருக்கலாம். இந்தப் பொருளால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்த பிறகு அதை வீசி விடவோ அல்லது விற்று விடவோ முயல்வார்கள் என்று போலீஸார் கருதுகின்றனர். ஒரு வேளை இந்தக் கருவியை கண்டெடுத்தால், 9847746711 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment