FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, February 11, 2019

குழந்தையின் காதுகேட்புக் கருவியை திருடிச்சென்ற திருடர்கள்! - பரிதாபத்தில் பெற்றோர்

08.02.2019
கேரள மாநிலம் கண்ணுரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரின் 2 வயது மகள் நித்யா. இந்தக் குழந்தைக்கு பிறவியில் இருந்தே காது கேட்காது. ராஜேஷ், தினக் கூலி. பெற்றோருக்கு, தங்கள் குழந்தையின் மழலைப் பேச்சை கேட்க ஆசையில்லாமல் இருக்குமா. குழந்தை நித்யாவுக்கு பேச்சு வரவழைக்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுவருகின்றனர். கடனை வாங்கி குழந்தைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள காது கேட்புக் கருவியை கஷ்டப்பட்டு வாங்கினர். அதுவும், கடந்த 4 மாதங்களுக்கு முன்தான் வாங்கியுள்ளனர். கருவியை மாட்டிய பிறகு குழந்தை நித்யாவுக்கு ஓரளவுக்கு பேச்சு கேட்கத் தொடங்கியது. குழந்தை தட்டித் தடுமாறி பேசவும் செய்தது. இதனால், பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கண்ணூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு சென்னை ரயிலில் தாயாருடன் நித்யா சென்றபோது, திருடர்கள் குழந்தையின் காது கேட்புக் கருவியை திருடிச் சென்றுவிட்டனர். மகளுக்காக கஷ்டப்பட்டு வாங்கிய கருவியும் திருடு போனதால், பெற்றோர் நொந்துபோனார்கள். தங்கள் மகளுக்கு மீண்டும் காது கேட்காமல் போனதைக் கண்டு கடும் வேதனை அடைந்துள்ளனர். 

ரயில்வே போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை மதிப்புமிக்க பொருள் எனக் கருதி திருடர்கள் திருடிச் சென்றிருக்கலாம். இந்தப் பொருளால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்த பிறகு அதை வீசி விடவோ அல்லது விற்று விடவோ முயல்வார்கள் என்று போலீஸார் கருதுகின்றனர். ஒரு வேளை இந்தக் கருவியை கண்டெடுத்தால், 9847746711 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment