FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, February 18, 2019

விஸ்வரூப விஷ்ணுராம்


திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுராம். பிறவியிலேயே செவித்திறன், பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டவர்.

ஆனால், கூடைப்பந்து விளையாட்டில் தேசிய அளவில் பதக்கம் வென்று சாதித்திருக்கிறார்.

விஷ்ணுராமின் வளர்ச்சியில், அவரது தந்தையும் கூடைப்பந்து பயிற்சியாளருமான ரமேஷ்பாபுவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

அவர் தனது மகனின் கூடைப்பந்து பயணம் பற்றிக் கூறியதாவது...

என் வழியில்...

‘‘நான் மாநில அளவிலான முன்னாள் கூடைப்பந்து வீரன். அந்நாட்களில் நான், சிறந்த வீரர் விருது எல்லாம் பெற்றிருக்கிறேன்.

என் மூத்த மகனான விஷ்ணுராம், தனது உடற்குறைபாடு காரணமாக முடங்கிப் போய்விடக் கூடாது என்பது என் எண்ணம். எனவே அவருக்கு கூடைப்பந்து விளையாட்டில் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். அவரும் கடுமையாக உழைத்து இந்த விளையாட்டில் தன்னை உயர்த்திக் கொண்டார்.

விஷ்ணுராம் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவரை தினமும் காலையில் எங்கள் ஊரான பட்டிவீரன்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு வரை 8 கி.மீ. தூரம் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுத்துவேன். கூடைப்பந்து பயிற்சியுடன், நான் விளையாடச் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவரையும் அழைத்துச் சென்று பார்க்க வைப்பேன்.

முதல் போட்டி

விஷ்ணுராம் எட்டாம் வகுப்பு படிக்கையில் பள்ளிகளுக்கு இடையிலான வட்டார அளவிலான கூடைப்பந்து போட்டியில் முதன்முதலாகப் பங்கேற்றார். அதில் தனது அணி பெற்ற 41 புள்ளிகளில் 37 புள்ளிகளை தானே பெற்றுக் கொடுத்தார்.

விரைவிலேயே வழக்கமான தமிழக 14 வயதுக்கு உட்பட்டோர் அணிக்குத் தேர்வாகி, சத்தீஸ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றார். அதன் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி தோல்வியுற்றாலும், விஷ்ணுராமுக்கு சிறந்த வீரர் விருது கிடைத்தது. தொடர்ந்து வழக்கமான தமிழக கூடைப்பந்து அணியில் நான்கு ஆண்டுகள் ஆடினார்.

கேப்டன் ஆனபோதும்...

கடந்த 2016-ம் ஆண்டு இந்திய காது கேளாதோர் கூடைப்பந்து அணிக்கான தேர்வு புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது, அணியின் கேப்டனாக விஷ்ணுராம் அறிவிக்கப்பட்டார். ஆனால், ஜப்பான் செல்லவிருந்த இந்திய அணியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் இதுபோன்ற பின்னடைவுகள் விஷ்ணுராமை சோர்வடையச் செய்ததில்லை. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற காது கேளாதோருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் புதுச்சேரி அணி சார்பில் ஆடிய விஷ்ணுராம், அந்த அணியை வெல்ல வைத்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்தியப் போட்டியில் புதுச்சேரி அணி வீரராக விஷ்ணுராமும், அந்த அணி மேலாளராக நானும் பங்கேற்றோம்.

அத்தொடரின் இறுதிப்போட்டியில் புதுச்சேரியும் கர்நாடகமும் மோதின. அதில் 63- 31 என்ற புள்ளிக் கணக்கில் புதுச்சேரி வென்றது. அதில் விஷ்ணுராமின் பங்கு மட்டும் 43 புள்ளிகள்.

சமீப வெற்றி

காது கேளாதோருக்கான தேசிய சீனியர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக காது கேளாதோர் கூடைப்பந்து அணிக்கு அடையாறில் உள்ள புனித லூயிஸ் காது கேளாதோர் சிறப்புக் கல்லூரியில் நான் பயிற்சி அளித்தேன்.

அதில், விஷ்ணுராம் உள்ளிட்ட தமிழக அணியினர் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று, தங்களை சிறப்பாகத் தயார்படுத்திக் கொண்டனர். அதை சென்னை போட்டியில் வெளிப்படுத்தினர்.

இந்த தேசியப் போட்டியில் தமிழகத்துடன், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா ஆகிய அணிகள் விளையாடின. ஆரம்பம் முதலே நன்றாக விளையாடிவந்த தமிழக அணி, இறுதி ஆட்டத்தில் கர்நாடகத்தை எதிர்கொண்டது.

அந்த அணியை 57- 22 என்ற புள்ளிக் கணக்கில் தமிழகம் வென்று வாகை சூடியது. தமிழக அணி பெற்ற புள்ளிகளில், 43 புள்ளிகளை விஷ்ணுராமே திரட்டிக் கொடுத்தார்.

இந்திய அணிக்குத் தேர்வு

வருகிற மே மாதம் இத்தாலியில் நடைபெறும் கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஆடும் இந்திய அணிக்கு விஷ்ணுராம் தேர்வாகி உள்ளார். அவருக்குத் தேவையான பொருளாதார உதவியை நமது அரசும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் வழங்க வேண்டும்” என்றார்.

கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த விஷ்ணுராம், ஒரு தனியார் நிறுவனத்தில் கணினிப் படிப்பு படித்தபடி கூடைப்பந்து விளையாட்டைத் தொடர்கிறார். இவரது பயணத்தில் தந்தையுடன், பயிற்சியாளர் கலைச்செல்வனும் உறுதுணையாக உள்ளார்.

அண்ணனைப் பின்பற்றும் தம்பி

விஷ்ணுராம் வழியில் அவரது தம்பி தனுஷ்ராமும் கூடைப்பந்து விளையாட்டில் வளர்ந்து வருகிறார். நெய்வேலி பழுப்புநிலக்கரி கழகப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் அவர், கடந்த மாதம் சத்தீஸ்காரில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றார்.

விஷ்ணுராமின் தாய் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். ஆனாலும் தமது மகன்களுக்கு தன்னாலான ஆதரவை அளித்து வருகிறார்.

சிரமங்களைத் தாண்டி சிகரங்களைத் தொட முயலும் விஷ்ணுராமும் தனுஷ்ராமும் ‘கூடை கூடையாய்’ வெற்றிகளை குவிக்கட்டும்.

No comments:

Post a Comment