FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, February 10, 2019

வெற்றிக்கு கிடைப்பது பரிசு... : தோல்விக்கோ அதுதான் பாடம்!

03.02.2019
இன்றைய இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்னை என்றால் கூட அதை எதிர்கொள்ள தெரிவதில்லை. அதிலும், சிலர் அப்பிரச்னையில் இருந்து மீள முடியாமல், தற்கொலையே தீர்வாக நினைக்கின்றனர்.'வாழ்க்கையில் நாம் சந்திக்கும், தடைகள்தான் வெற்றிக்கான முதல் படி... நீ சந்திக்கும் தோல்விதான் உன்னை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும்' என, நம்பிக்கையூட்டுகிறார் பிரசன்ன குமார்,43.சரி யார் இவர்... அப்படி என்ன சாதனை புரிந்திருக்கிறார் என, புருவம் உயர்த்துபவர்களுக்கு, இதோ அவருடைய சாதனை பட்டியலில் பதில் அளிக்கிறது.பொள்ளாச்சி ஆனைமலையில் வசித்து வரும் பிரசன்னகுமார், பிறவியில் இருந்தே, காது கேளாத வாய் பேச முடியாதவர். சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், இயற்கை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

மலேசியா பாராட்டு

மலேசிய அரசாங்கம் இவருக்கு, விருது கொடுத்த பாராட்டியதோடு, ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் இவரது ஓவியங்களை காட்சிக்கு வைக்க அனுமதியும் அளித்துள்ளது. இலை, தென்னை, பனை ஓலை, கூலாங்கற்கள் கொண்டு பல்வேறு படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவர் ஒரு நடனம் மற்றும் மோனோ ஆக்டிங் கலைஞர் என்பது கூடுதல் தகவல். இசையை கேட்கதான் முடியாது; ஆனால் அதை மனதில் உணர்ந்து, எதிரே நடன ஆசிரியரின் கை அசைவுக்கு ஏற்ப நடனமாடுவதில் இவர் சிறந்தவர்.
இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை.குறும்படம் எடுப்பதிலும் வல்லவரான இவர், எடுத்த குறும்படம் ஒன்று, கோவையில் நடந்த திரைப்பட விழாவில் இரண்டாம் பரிசு பெற்றது.எல்லாம் கிடைத்தும் வாழ்க்கையை வாழ தெரியாமல், முடங்கி கிடக்கும் இளைஞர்களே... இவரை பார்த்து இந்த நொடியில் முடிவெடுங்கள்...

உங்களுக்கான லட்சியம் என்னவென்று!இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை!

வெற்றி புகழ் தரும்... தோல்வி பாடம் தரும்!

சைகை மொழியில் பிரசன்னகுமார் நம்மிடம், ''இந்தியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு, அறிய செய்ய வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எந்த ஒரு நிலையிலும் தோல்வியடைந்து விட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளாதீர்கள். வெற்றி புகழை மட்டுமே தரும்; தோல்விதான் பாடம் கற்பிக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment