FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, February 10, 2019

வெற்றிக்கு கிடைப்பது பரிசு... : தோல்விக்கோ அதுதான் பாடம்!

03.02.2019
இன்றைய இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்னை என்றால் கூட அதை எதிர்கொள்ள தெரிவதில்லை. அதிலும், சிலர் அப்பிரச்னையில் இருந்து மீள முடியாமல், தற்கொலையே தீர்வாக நினைக்கின்றனர்.'வாழ்க்கையில் நாம் சந்திக்கும், தடைகள்தான் வெற்றிக்கான முதல் படி... நீ சந்திக்கும் தோல்விதான் உன்னை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும்' என, நம்பிக்கையூட்டுகிறார் பிரசன்ன குமார்,43.சரி யார் இவர்... அப்படி என்ன சாதனை புரிந்திருக்கிறார் என, புருவம் உயர்த்துபவர்களுக்கு, இதோ அவருடைய சாதனை பட்டியலில் பதில் அளிக்கிறது.பொள்ளாச்சி ஆனைமலையில் வசித்து வரும் பிரசன்னகுமார், பிறவியில் இருந்தே, காது கேளாத வாய் பேச முடியாதவர். சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், இயற்கை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

மலேசியா பாராட்டு

மலேசிய அரசாங்கம் இவருக்கு, விருது கொடுத்த பாராட்டியதோடு, ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் இவரது ஓவியங்களை காட்சிக்கு வைக்க அனுமதியும் அளித்துள்ளது. இலை, தென்னை, பனை ஓலை, கூலாங்கற்கள் கொண்டு பல்வேறு படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவர் ஒரு நடனம் மற்றும் மோனோ ஆக்டிங் கலைஞர் என்பது கூடுதல் தகவல். இசையை கேட்கதான் முடியாது; ஆனால் அதை மனதில் உணர்ந்து, எதிரே நடன ஆசிரியரின் கை அசைவுக்கு ஏற்ப நடனமாடுவதில் இவர் சிறந்தவர்.
இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை.குறும்படம் எடுப்பதிலும் வல்லவரான இவர், எடுத்த குறும்படம் ஒன்று, கோவையில் நடந்த திரைப்பட விழாவில் இரண்டாம் பரிசு பெற்றது.எல்லாம் கிடைத்தும் வாழ்க்கையை வாழ தெரியாமல், முடங்கி கிடக்கும் இளைஞர்களே... இவரை பார்த்து இந்த நொடியில் முடிவெடுங்கள்...

உங்களுக்கான லட்சியம் என்னவென்று!இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை!

வெற்றி புகழ் தரும்... தோல்வி பாடம் தரும்!

சைகை மொழியில் பிரசன்னகுமார் நம்மிடம், ''இந்தியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு, அறிய செய்ய வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எந்த ஒரு நிலையிலும் தோல்வியடைந்து விட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளாதீர்கள். வெற்றி புகழை மட்டுமே தரும்; தோல்விதான் பாடம் கற்பிக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment