FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, February 10, 2019

வெற்றிக்கு கிடைப்பது பரிசு... : தோல்விக்கோ அதுதான் பாடம்!

03.02.2019
இன்றைய இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்னை என்றால் கூட அதை எதிர்கொள்ள தெரிவதில்லை. அதிலும், சிலர் அப்பிரச்னையில் இருந்து மீள முடியாமல், தற்கொலையே தீர்வாக நினைக்கின்றனர்.'வாழ்க்கையில் நாம் சந்திக்கும், தடைகள்தான் வெற்றிக்கான முதல் படி... நீ சந்திக்கும் தோல்விதான் உன்னை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும்' என, நம்பிக்கையூட்டுகிறார் பிரசன்ன குமார்,43.சரி யார் இவர்... அப்படி என்ன சாதனை புரிந்திருக்கிறார் என, புருவம் உயர்த்துபவர்களுக்கு, இதோ அவருடைய சாதனை பட்டியலில் பதில் அளிக்கிறது.பொள்ளாச்சி ஆனைமலையில் வசித்து வரும் பிரசன்னகுமார், பிறவியில் இருந்தே, காது கேளாத வாய் பேச முடியாதவர். சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், இயற்கை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

மலேசியா பாராட்டு

மலேசிய அரசாங்கம் இவருக்கு, விருது கொடுத்த பாராட்டியதோடு, ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் இவரது ஓவியங்களை காட்சிக்கு வைக்க அனுமதியும் அளித்துள்ளது. இலை, தென்னை, பனை ஓலை, கூலாங்கற்கள் கொண்டு பல்வேறு படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவர் ஒரு நடனம் மற்றும் மோனோ ஆக்டிங் கலைஞர் என்பது கூடுதல் தகவல். இசையை கேட்கதான் முடியாது; ஆனால் அதை மனதில் உணர்ந்து, எதிரே நடன ஆசிரியரின் கை அசைவுக்கு ஏற்ப நடனமாடுவதில் இவர் சிறந்தவர்.
இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை.குறும்படம் எடுப்பதிலும் வல்லவரான இவர், எடுத்த குறும்படம் ஒன்று, கோவையில் நடந்த திரைப்பட விழாவில் இரண்டாம் பரிசு பெற்றது.எல்லாம் கிடைத்தும் வாழ்க்கையை வாழ தெரியாமல், முடங்கி கிடக்கும் இளைஞர்களே... இவரை பார்த்து இந்த நொடியில் முடிவெடுங்கள்...

உங்களுக்கான லட்சியம் என்னவென்று!இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை!

வெற்றி புகழ் தரும்... தோல்வி பாடம் தரும்!

சைகை மொழியில் பிரசன்னகுமார் நம்மிடம், ''இந்தியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு, அறிய செய்ய வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எந்த ஒரு நிலையிலும் தோல்வியடைந்து விட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளாதீர்கள். வெற்றி புகழை மட்டுமே தரும்; தோல்விதான் பாடம் கற்பிக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment