FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, February 4, 2025

அதானி வீட்டு திருமணம்: மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு



04.02.2025 மும்பை: தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வழக்கமாக தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இல்ல திருமணம் என்றால் அதில் பல துறை பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்வில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்து முக்கிய நபர்கள் பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இந்தியாவின் டாப் செல்வந்தர்களில் ஒருவராக உள்ள அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷா திருமணத்திலும் பிரபலங்கள் அதிகம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. எலான் மஸ்க் முதல் மன்னர் சார்லஸ் வரை இதில் பங்கேற்க உள்ளதாக ஜீத் அதானி திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவின. மொத்தத்தில் பிரபலங்கள் சங்கமிக்கும் நிகழ்வாக அது இருக்கும் என சொல்லப்பட்டது.

“எங்கள் குடும்பத்தின் வளர்ச்சி சாமானிய தொழிலாள வர்க்கத்தை போன்றதாகும். ஜீத்தின் திருமணம் எளிமையான மற்றும் பாரம்பரிய முறைப்படி நடைபெறும்” என கடந்த மாதம் மகா கும்ப மேளாவில் பங்கேற்று கவுதம் அதானி தெரிவித்தார்.

இந்த சூழலில் தங்கள் திருமண விழாவில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஜீத் அதானி மற்றும் திவா ஷா அழைப்பு விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘மித்தி கஃபே’-வுக்கு (Mitti Cafe) நேரடியாக சென்று தங்களது திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


வாழ்வில் முதல் முறையாக வானில் பறந்த மாற்றுத்திறனாளிகள்... வாய்ப்பை அளித்த ஐடி நிறுவனம்




29.01.2025 
திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர்.

திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

சென்னையில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனமான basis cloud solutions நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தை சுற்றி பார்க்கின்றனர். அது மட்டும் இன்றி ஐடி நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மாணவர்கள் விமானத்தில் பயணிக்கும் பொழுது புதுவித அனுபவமாக இருந்தது முதலில் பயத்துடனும் அதன் பிறகு உற்சாகமாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.

அது மட்டும் இன்றி காது கேளாதோர் வாய் பேசாதோர் ஐடி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதில் பணிபுரியவும் முடியும் தனியார் ஐடி நிறுவனம் அந்த கல்லூரியில் இருந்து மாணவர்களை பணியில் அமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த குறித்த பேராசிரியர் தெரிவித்த பொழுது இதுபோன்று மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெருகும் எனவும் சாதாரணமாக ஆங்கில வழியில் கல்வி கற்று ஐடி துறையில் பணிபுரியும் மாணவர்களே சிரமப்படும் நிலையில் ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொண்டு ஐ டி துறையில் பணிபுரிந்து அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும் அளவிற்கு மாணவர்கள் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தனர்.

சத்துணவுப் பணியாளர் நியமனம்: மாற்றுத் திறனாளிகளுக்கு தடை விதிக்கும் அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை


29.01.2025 
சத்துணவுப் பணியாளர் பணியிடத்துக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க தடை விதிக்கும் அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரவிமலநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனு: சத்துணவுத் திட்டத்தின் கீழ், சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டது இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது.

அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம் என்ற சூழலில், இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதமானது. எனவே, இந்த அறிவிப்புக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக சமூக நலன், சத்துணவுத் திட்டத் துறையின் முதன்மைச் செயலர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலர், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தின் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனர் நீதிபதிகள்.

மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது: குடியரசு துணைத் தலைவர் பேச்சு



02.02.2025 சென்னை: ​மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரி​வித்​துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டுத் துறை அமைச்​சகத்​தின் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டு நிறு​வனம், செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களால் டெல்​லி​யில் நடத்​தப்​பட்டு வரும் எஸ்இடிபி தொண்டு நிறு​வனம், சென்னை சேடனா அறக்​கட்டளை மற்றும் வித்​யாசாகர் நிறு​வனம் சார்​பில், செவித்​திறன் - கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களுக்கான 3-வது தேசிய மாநாடு சென்னை முட்டுக்​காட்டில் நேற்று நடைபெற்​றது.

மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்​தார். எஸ்இடிபி நிறு​வனத்​தின் இயக்​குநர் சமீர் தாலே வரவேற்​புரை வழங்​கினார். நிகழ்ச்​சி​யில் மாற்றுத் திறனாளி​களுக்கான உதவி உபகரணங்கள் வழங்​கும் திட்​டத்​தின் கீழ் உதவி உபகரணங்களை குடியரசு துணைத் தலைவர் வழங்கி, அவர்​களுடன் சைகை மொழி​யில் கலந்​துரை​யாடி​னார்.

பின்னர் மாநாட்​டில் அவர் பேசி​ய​தாவது: இன்றைக்கு மாற்றுத் திறனாளி​களுடன் இருப்பதை ஆசீர்​வாத​மாகக் கருதுகிறேன். செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி​களுக்கான கல்வி மற்றும் வேலை​வாய்ப்பு என்பது மிகவும் முக்​கி​யம். ஏராளமான திறன்களைக் கொண்ட மாற்றுத்திறனாளி​களால் இன்றியமையாத பங்களிப்பை தேசத்​துக்கு வழங்க முடி​யும். அதற்கு அவர்களை கைப்​பிடித்து தூக்​கி​விட்​டால் மட்டுமே போதும்.

மாற்றுத் திறனாளி​களின் திறன்​களைக் கண்டறிந்து, அவர்​களின் கனவுகளை நனவாக்​கும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்​படுத்தி வருகிறது. இவற்றை நிறைவேற்ற பிரதமர் மோடி உறுதி​யுடன் இருக்கிறார். அனைவரை​யும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பும் அவசி​யம். அவர்​களது பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்​துக்கான இலக்கை அடைய முடி​யாது. எனவே மாற்றுத் திறனாளி​களின் தேவைகளை சமுதா​யத்​தில் யாரும் ஒதுக்​கி​விடக் கூடாது.

வாழ்​வில் பல்வேறு இக்கட்டான சூழல்களை திறம்பட கையாளும் அவர்​கள், பாரா ஒலிம்​பிக்​கிலும் பல்வேறு சாதனை​களைப் படைத்து வருகின்​றனர். அந்த வகையில் செயற்கை நுண்​ணறிவு போன்ற நவீன தொழில்​நுட்​பங்​களுடன் கூடிய வளர்ச்​சிப்பாதையை உருவாக்கி, மாற்றுத் திறனாளி​களின் முன்னேற்​றத்தை முன்னெடுத்​துச் செல்ல திட்​டங்களை வகுத்து வருகிறோம்.

இந்த வளர்ச்​சிக்கு தன்னார்வ தொண்டு நிறு​வனங்​களின் பங்கும் அவசி​ய​மாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சுற்றுச்​சூழல் தினத்​தையொட்டி தொடங்​கப்​பட்ட ‘அம்​மா​வின் பெயரில் ஒருமரம்’ என்ற திட்​டத்தை முன்னிலைப்​படுத்தி முட்டுக்​காடு தேசிய நிறுவன வளாகத்​தில் மரக்​கன்​றுகளை குடியரசு துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவி மருத்​துவர் சுதேஷ் தன்கர் ஆகியோர் நட்டனர்.

இந்நிகழ்​வில் மாநிலங்​களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங், எம்பிக்கள் திருச்சி சிவா, கே.லட்​சுமணன், தேசிய ​மாற்றுத் திறனாளி​கள் மேம்​பாட்டு நிறுவனத்​தின் இயக்​குநர் ந​சிகேத ர​வுத், துணைப் ப​திவாளர் பி.​காமராஜ், வித்​யாசாகர்​ நிறு​வனத்​தின்​ இயக்​குநர்​ பூனம்​ நட​ராஜன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Video Relay Service integrated into the National Helpline Number (14456) for persons with hearing impairments across India



02.02.2025
The Indian Sign Language Research and Training Centre (ISLRTC), under the Department of Empowerment of Persons with Disabilities (DEPwD), Ministry of Social Justice and Empowerment, has announced the integration of Video Relay Service (VRS) into the National Helpline Number (14456).

The launch event was held on Saturday, virtually by ISLRTC, New Delhi along with staff and students of ISLRTC. A total of around 100 participants attended the ceremony.

This initiative is a huge step forward in ensuring accessible communication for persons with hearing impairments across India.

With VRS, deaf individuals can now connect seamlessly with hearing persons, including government offices, emergency services, and service providers, through real-time interpretation in Indian Sign Language (ISL).

This service strengthens accessibility, inclusivity, and equal opportunities for the deaf community across the nation.

The VRS can be accessed easily by scanning the QR Code below for quick connectivity.