FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, February 4, 2025

மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது: குடியரசு துணைத் தலைவர் பேச்சு



02.02.2025 சென்னை: ​மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரி​வித்​துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டுத் துறை அமைச்​சகத்​தின் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டு நிறு​வனம், செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களால் டெல்​லி​யில் நடத்​தப்​பட்டு வரும் எஸ்இடிபி தொண்டு நிறு​வனம், சென்னை சேடனா அறக்​கட்டளை மற்றும் வித்​யாசாகர் நிறு​வனம் சார்​பில், செவித்​திறன் - கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களுக்கான 3-வது தேசிய மாநாடு சென்னை முட்டுக்​காட்டில் நேற்று நடைபெற்​றது.

மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்​தார். எஸ்இடிபி நிறு​வனத்​தின் இயக்​குநர் சமீர் தாலே வரவேற்​புரை வழங்​கினார். நிகழ்ச்​சி​யில் மாற்றுத் திறனாளி​களுக்கான உதவி உபகரணங்கள் வழங்​கும் திட்​டத்​தின் கீழ் உதவி உபகரணங்களை குடியரசு துணைத் தலைவர் வழங்கி, அவர்​களுடன் சைகை மொழி​யில் கலந்​துரை​யாடி​னார்.

பின்னர் மாநாட்​டில் அவர் பேசி​ய​தாவது: இன்றைக்கு மாற்றுத் திறனாளி​களுடன் இருப்பதை ஆசீர்​வாத​மாகக் கருதுகிறேன். செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி​களுக்கான கல்வி மற்றும் வேலை​வாய்ப்பு என்பது மிகவும் முக்​கி​யம். ஏராளமான திறன்களைக் கொண்ட மாற்றுத்திறனாளி​களால் இன்றியமையாத பங்களிப்பை தேசத்​துக்கு வழங்க முடி​யும். அதற்கு அவர்களை கைப்​பிடித்து தூக்​கி​விட்​டால் மட்டுமே போதும்.

மாற்றுத் திறனாளி​களின் திறன்​களைக் கண்டறிந்து, அவர்​களின் கனவுகளை நனவாக்​கும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்​படுத்தி வருகிறது. இவற்றை நிறைவேற்ற பிரதமர் மோடி உறுதி​யுடன் இருக்கிறார். அனைவரை​யும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பும் அவசி​யம். அவர்​களது பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்​துக்கான இலக்கை அடைய முடி​யாது. எனவே மாற்றுத் திறனாளி​களின் தேவைகளை சமுதா​யத்​தில் யாரும் ஒதுக்​கி​விடக் கூடாது.

வாழ்​வில் பல்வேறு இக்கட்டான சூழல்களை திறம்பட கையாளும் அவர்​கள், பாரா ஒலிம்​பிக்​கிலும் பல்வேறு சாதனை​களைப் படைத்து வருகின்​றனர். அந்த வகையில் செயற்கை நுண்​ணறிவு போன்ற நவீன தொழில்​நுட்​பங்​களுடன் கூடிய வளர்ச்​சிப்பாதையை உருவாக்கி, மாற்றுத் திறனாளி​களின் முன்னேற்​றத்தை முன்னெடுத்​துச் செல்ல திட்​டங்களை வகுத்து வருகிறோம்.

இந்த வளர்ச்​சிக்கு தன்னார்வ தொண்டு நிறு​வனங்​களின் பங்கும் அவசி​ய​மாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சுற்றுச்​சூழல் தினத்​தையொட்டி தொடங்​கப்​பட்ட ‘அம்​மா​வின் பெயரில் ஒருமரம்’ என்ற திட்​டத்தை முன்னிலைப்​படுத்தி முட்டுக்​காடு தேசிய நிறுவன வளாகத்​தில் மரக்​கன்​றுகளை குடியரசு துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவி மருத்​துவர் சுதேஷ் தன்கர் ஆகியோர் நட்டனர்.

இந்நிகழ்​வில் மாநிலங்​களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங், எம்பிக்கள் திருச்சி சிவா, கே.லட்​சுமணன், தேசிய ​மாற்றுத் திறனாளி​கள் மேம்​பாட்டு நிறுவனத்​தின் இயக்​குநர் ந​சிகேத ர​வுத், துணைப் ப​திவாளர் பி.​காமராஜ், வித்​யாசாகர்​ நிறு​வனத்​தின்​ இயக்​குநர்​ பூனம்​ நட​ராஜன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

No comments:

Post a Comment