FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, February 4, 2025

மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது: குடியரசு துணைத் தலைவர் பேச்சு



02.02.2025 சென்னை: ​மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடி​யாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரி​வித்​துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டுத் துறை அமைச்​சகத்​தின் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்​பாட்டு நிறு​வனம், செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களால் டெல்​லி​யில் நடத்​தப்​பட்டு வரும் எஸ்இடிபி தொண்டு நிறு​வனம், சென்னை சேடனா அறக்​கட்டளை மற்றும் வித்​யாசாகர் நிறு​வனம் சார்​பில், செவித்​திறன் - கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி​களுக்கான 3-வது தேசிய மாநாடு சென்னை முட்டுக்​காட்டில் நேற்று நடைபெற்​றது.

மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்​தார். எஸ்இடிபி நிறு​வனத்​தின் இயக்​குநர் சமீர் தாலே வரவேற்​புரை வழங்​கினார். நிகழ்ச்​சி​யில் மாற்றுத் திறனாளி​களுக்கான உதவி உபகரணங்கள் வழங்​கும் திட்​டத்​தின் கீழ் உதவி உபகரணங்களை குடியரசு துணைத் தலைவர் வழங்கி, அவர்​களுடன் சைகை மொழி​யில் கலந்​துரை​யாடி​னார்.

பின்னர் மாநாட்​டில் அவர் பேசி​ய​தாவது: இன்றைக்கு மாற்றுத் திறனாளி​களுடன் இருப்பதை ஆசீர்​வாத​மாகக் கருதுகிறேன். செவித்​திறன் மற்றும் கண்பார்வை குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி​களுக்கான கல்வி மற்றும் வேலை​வாய்ப்பு என்பது மிகவும் முக்​கி​யம். ஏராளமான திறன்களைக் கொண்ட மாற்றுத்திறனாளி​களால் இன்றியமையாத பங்களிப்பை தேசத்​துக்கு வழங்க முடி​யும். அதற்கு அவர்களை கைப்​பிடித்து தூக்​கி​விட்​டால் மட்டுமே போதும்.

மாற்றுத் திறனாளி​களின் திறன்​களைக் கண்டறிந்து, அவர்​களின் கனவுகளை நனவாக்​கும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்​படுத்தி வருகிறது. இவற்றை நிறைவேற்ற பிரதமர் மோடி உறுதி​யுடன் இருக்கிறார். அனைவரை​யும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய மாற்றுத் திறனாளி​களின் பங்களிப்பும் அவசி​யம். அவர்​களது பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்​துக்கான இலக்கை அடைய முடி​யாது. எனவே மாற்றுத் திறனாளி​களின் தேவைகளை சமுதா​யத்​தில் யாரும் ஒதுக்​கி​விடக் கூடாது.

வாழ்​வில் பல்வேறு இக்கட்டான சூழல்களை திறம்பட கையாளும் அவர்​கள், பாரா ஒலிம்​பிக்​கிலும் பல்வேறு சாதனை​களைப் படைத்து வருகின்​றனர். அந்த வகையில் செயற்கை நுண்​ணறிவு போன்ற நவீன தொழில்​நுட்​பங்​களுடன் கூடிய வளர்ச்​சிப்பாதையை உருவாக்கி, மாற்றுத் திறனாளி​களின் முன்னேற்​றத்தை முன்னெடுத்​துச் செல்ல திட்​டங்களை வகுத்து வருகிறோம்.

இந்த வளர்ச்​சிக்கு தன்னார்வ தொண்டு நிறு​வனங்​களின் பங்கும் அவசி​ய​மாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சுற்றுச்​சூழல் தினத்​தையொட்டி தொடங்​கப்​பட்ட ‘அம்​மா​வின் பெயரில் ஒருமரம்’ என்ற திட்​டத்தை முன்னிலைப்​படுத்தி முட்டுக்​காடு தேசிய நிறுவன வளாகத்​தில் மரக்​கன்​றுகளை குடியரசு துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவி மருத்​துவர் சுதேஷ் தன்கர் ஆகியோர் நட்டனர்.

இந்நிகழ்​வில் மாநிலங்​களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங், எம்பிக்கள் திருச்சி சிவா, கே.லட்​சுமணன், தேசிய ​மாற்றுத் திறனாளி​கள் மேம்​பாட்டு நிறுவனத்​தின் இயக்​குநர் ந​சிகேத ர​வுத், துணைப் ப​திவாளர் பி.​காமராஜ், வித்​யாசாகர்​ நிறு​வனத்​தின்​ இயக்​குநர்​ பூனம்​ நட​ராஜன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

No comments:

Post a Comment