FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, February 4, 2025

வாழ்வில் முதல் முறையாக வானில் பறந்த மாற்றுத்திறனாளிகள்... வாய்ப்பை அளித்த ஐடி நிறுவனம்




29.01.2025 
திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர்.

திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

சென்னையில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனமான basis cloud solutions நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தை சுற்றி பார்க்கின்றனர். அது மட்டும் இன்றி ஐடி நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மாணவர்கள் விமானத்தில் பயணிக்கும் பொழுது புதுவித அனுபவமாக இருந்தது முதலில் பயத்துடனும் அதன் பிறகு உற்சாகமாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.

அது மட்டும் இன்றி காது கேளாதோர் வாய் பேசாதோர் ஐடி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதில் பணிபுரியவும் முடியும் தனியார் ஐடி நிறுவனம் அந்த கல்லூரியில் இருந்து மாணவர்களை பணியில் அமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த குறித்த பேராசிரியர் தெரிவித்த பொழுது இதுபோன்று மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெருகும் எனவும் சாதாரணமாக ஆங்கில வழியில் கல்வி கற்று ஐடி துறையில் பணிபுரியும் மாணவர்களே சிரமப்படும் நிலையில் ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொண்டு ஐ டி துறையில் பணிபுரிந்து அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும் அளவிற்கு மாணவர்கள் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment