FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 4, 2025

சத்துணவுப் பணியாளர் நியமனம்: மாற்றுத் திறனாளிகளுக்கு தடை விதிக்கும் அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை


29.01.2025 
சத்துணவுப் பணியாளர் பணியிடத்துக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க தடை விதிக்கும் அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரவிமலநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனு: சத்துணவுத் திட்டத்தின் கீழ், சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டது இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது.

அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம் என்ற சூழலில், இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதமானது. எனவே, இந்த அறிவிப்புக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக சமூக நலன், சத்துணவுத் திட்டத் துறையின் முதன்மைச் செயலர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலர், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தின் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனர் நீதிபதிகள்.

No comments:

Post a Comment