FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, February 4, 2025

அதானி வீட்டு திருமணம்: மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு



04.02.2025 மும்பை: தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வழக்கமாக தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இல்ல திருமணம் என்றால் அதில் பல துறை பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்வில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்து முக்கிய நபர்கள் பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இந்தியாவின் டாப் செல்வந்தர்களில் ஒருவராக உள்ள அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷா திருமணத்திலும் பிரபலங்கள் அதிகம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. எலான் மஸ்க் முதல் மன்னர் சார்லஸ் வரை இதில் பங்கேற்க உள்ளதாக ஜீத் அதானி திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவின. மொத்தத்தில் பிரபலங்கள் சங்கமிக்கும் நிகழ்வாக அது இருக்கும் என சொல்லப்பட்டது.

“எங்கள் குடும்பத்தின் வளர்ச்சி சாமானிய தொழிலாள வர்க்கத்தை போன்றதாகும். ஜீத்தின் திருமணம் எளிமையான மற்றும் பாரம்பரிய முறைப்படி நடைபெறும்” என கடந்த மாதம் மகா கும்ப மேளாவில் பங்கேற்று கவுதம் அதானி தெரிவித்தார்.

இந்த சூழலில் தங்கள் திருமண விழாவில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஜீத் அதானி மற்றும் திவா ஷா அழைப்பு விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘மித்தி கஃபே’-வுக்கு (Mitti Cafe) நேரடியாக சென்று தங்களது திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment