FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 11, 2025

சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம்



28.01.2025
மதுரை: சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 14 லட்சத்து 27 ஆயிரத்து 979 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் தொகுப்பூதியம் அடிப்படையில் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. சமையல் உதவியாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள், உணவுப்பொருட்களை கொள்முதல் செய்வது, உணவு தயாரிப்பின் போது உதவுவது, காய்கறிகளை வெட்டிக் கொடுப்பது, பாத்திரங்களை கழுவுவது, உணவு பரிமாறுவது போன்ற பணிகளைச் செய்வர். இதனால் இப்பணிக்கு மாற்றுத்திறனாளிகளை தகுதியற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சாதனைகளைச் செய்து வரும் சூழலில், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடாது எனக் கூறுவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய சூழலில், மாற்றுத் திறனாளிகளைப் பணிக்குத் தேர்வு செய்ய மறுப்பது சட்டவிரோதமானது.

எனவே சமையல் உதவியாளர் தேர்வு தொடர்பாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்வது, அந்த அரசாணை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் இன்று (ஜன.28) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமையல் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையில் சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனு தொடர்பாக தமிழக சத்துணவுத் துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.


No comments:

Post a Comment