FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 11, 2025

மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகள் அவதி



07.02.2025
சென்னை: தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகை, மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டிருப்பது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.-

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உடல் ஊனமுற்றோர், செவி குறைபாடு உடையோர் என, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. உடல் ஊனத்தின் தன்மையை பொறுத்து, 75 சதவிதம் வரை ஊனமுற்றோருக்கு மாதம், 1,500 ரூபாய்; 75 சதவிதத்திற்கு மேல் ஊனமுற்றோருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கடும் ஊனத்தினால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதை பெற விண்ணப்பித்தவர்களுக்கு, உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ளது.

இது குறித்து மாற்றுத் திறனாளிகள் சிலர் கூறியதாவது:

ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில அரசுகள் வழங்குவதைப் போல், தமிழகத்திலும், குறைந்தபட்சம் 6,000 ரூபாய், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக வழங்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இணைய வழியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பலர் வருவாய் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என, இரண்டிலும் உதவித்தொகை பெற்று வருவது தெரிய வந்தது. அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

ஆனால், இரண்டு இடங்களில் பராமரிப்பு உதவித் தொகை பெறுவதை, 2018 முதல் அரசு நிறுத்தி விட்டது. தற்போது மகளிர் உரிமைத்தொகை பெறும், மாற்றுத் திறனாளி மகளிர் பலருக்கும், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை, அரசு நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு காரணங்களை கூறி, 5,000க்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே, அரசு நிறுத்தப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்க வேண்டும். இனி மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழியே வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டு, மாதாந்தி-ர பராமரிப்பு உதவித் தொகையை, முறையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை கேட்டபோது, 'இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


No comments:

Post a Comment