FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, February 11, 2025

மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகள் அவதி



07.02.2025
சென்னை: தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகை, மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டிருப்பது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.-

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உடல் ஊனமுற்றோர், செவி குறைபாடு உடையோர் என, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. உடல் ஊனத்தின் தன்மையை பொறுத்து, 75 சதவிதம் வரை ஊனமுற்றோருக்கு மாதம், 1,500 ரூபாய்; 75 சதவிதத்திற்கு மேல் ஊனமுற்றோருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கடும் ஊனத்தினால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதை பெற விண்ணப்பித்தவர்களுக்கு, உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ளது.

இது குறித்து மாற்றுத் திறனாளிகள் சிலர் கூறியதாவது:

ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில அரசுகள் வழங்குவதைப் போல், தமிழகத்திலும், குறைந்தபட்சம் 6,000 ரூபாய், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக வழங்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இணைய வழியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பலர் வருவாய் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என, இரண்டிலும் உதவித்தொகை பெற்று வருவது தெரிய வந்தது. அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

ஆனால், இரண்டு இடங்களில் பராமரிப்பு உதவித் தொகை பெறுவதை, 2018 முதல் அரசு நிறுத்தி விட்டது. தற்போது மகளிர் உரிமைத்தொகை பெறும், மாற்றுத் திறனாளி மகளிர் பலருக்கும், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை, அரசு நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு காரணங்களை கூறி, 5,000க்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே, அரசு நிறுத்தப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்க வேண்டும். இனி மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழியே வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டு, மாதாந்தி-ர பராமரிப்பு உதவித் தொகையை, முறையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை கேட்டபோது, 'இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


No comments:

Post a Comment