FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, February 13, 2025

காது கேளாத, வாய்ப்பேச முடியாத 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

 


09.02.2025

காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மத்தியப்பிரதேசத்தில் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் அரசு ஓய்வு இல்லத்திற்கு பின் ஒரு குடிசையில் வசித்து வந்துள்ளார் 11 வயதான காது மற்றும் வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர்.

இவர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். காணாமல் போன அடுத்தநாளே பலத்த காயத்துடன் ஒரு அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுமியை கண்ட சிலர், சிறுமிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டிருந்ததை கண்டனர் . எனவே, உடனடியாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுமியின் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.. இதனால் , போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (7.2.2025) சிறுமி பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், குற்றவாளி யார் என்பது குறித்து தேடும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போலிசார் முழு வீச்சில் குற்றவாளியை தேடி பணியில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




No comments:

Post a Comment