FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, February 13, 2025

காது கேளாத, வாய்ப்பேச முடியாத 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

 


09.02.2025

காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மத்தியப்பிரதேசத்தில் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் அரசு ஓய்வு இல்லத்திற்கு பின் ஒரு குடிசையில் வசித்து வந்துள்ளார் 11 வயதான காது மற்றும் வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர்.

இவர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். காணாமல் போன அடுத்தநாளே பலத்த காயத்துடன் ஒரு அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுமியை கண்ட சிலர், சிறுமிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டிருந்ததை கண்டனர் . எனவே, உடனடியாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுமியின் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.. இதனால் , போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (7.2.2025) சிறுமி பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், குற்றவாளி யார் என்பது குறித்து தேடும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போலிசார் முழு வீச்சில் குற்றவாளியை தேடி பணியில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




No comments:

Post a Comment