FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, February 13, 2025

காது கேளாத, வாய்ப்பேச முடியாத 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

 


09.02.2025

காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மத்தியப்பிரதேசத்தில் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் அரசு ஓய்வு இல்லத்திற்கு பின் ஒரு குடிசையில் வசித்து வந்துள்ளார் 11 வயதான காது மற்றும் வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர்.

இவர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். காணாமல் போன அடுத்தநாளே பலத்த காயத்துடன் ஒரு அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுமியை கண்ட சிலர், சிறுமிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டிருந்ததை கண்டனர் . எனவே, உடனடியாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுமியின் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.. இதனால் , போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (7.2.2025) சிறுமி பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், குற்றவாளி யார் என்பது குறித்து தேடும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போலிசார் முழு வீச்சில் குற்றவாளியை தேடி பணியில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




No comments:

Post a Comment