FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, October 28, 2013

32 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தாமதம் இல்லை: அசத்துகிறார் மாற்று திறனாளி பெண் எழுத்தர்

27.10.2013,மும்பை :
மகாராஷ்டிராவில், இடுப்புக்கு கீழே செயல்படாத, 58 வயது அரசு பெண் அதிகாரி, 32 ஆண்டுகளாக, ஒரு நிமிடம் கூட, அலுவலகத்திற்கு, தாமதமாக வந்ததில்லை; இம்மாதம் அவர் ஓய்வுபெறப் போகிறார்.

போலியோ பாதிப்பு:உமா மாகரே, 58, மும்பையில், மாநில சமூக நலத்துறையில் எழுத்தராக பணி புரிகிறார். சிறு குழந்தையாக இருக்கும் போதே, போலியோ நோய் பாதிப்புக்குள்ளான அந்தப் பெண்ணின், இடுப்புக்கு கீழே, உறுப்புகள் செயல்படாது.எனினும், பிறர் உதவி இல்லாமல், தானாவே தன் வேலைகள் அனைத்தையும் மேற்கொள்ளும் இவர், கடந்த, 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட, அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதில்லை.இதை பாராட்டி, உயரதிகாரிகள் இவருக்கு பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். இவரின் கணவர், கடந்த ஆண்டு இறந்து விட்டார்; அந்த துக்கத்திலும் இவர், அலுவலகம் வந்து சென்றுள்ளார்.இம்மாதம் ஓய்வுஇம்மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற உள்ள அவர், வேறு இனத்தை சேர்ந்த குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து வருகிறார். ஓய்வுக்குப் பிறகு, சமூக சேவை ஆற்றப் போவதாக கூறுகிறார்.'கை, கால் நன்றாக இருக்கும் பலரும், அலுவலகத்திற்கு தாமதமாக வரும் நிலையில், உடல் ஊனமுற்ற இவர், 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட தாமதமாக வந்ததில்லை என்பது உண்மையில் வியத்தகு சாதனை தான்' என்கின்றனர், சகஊழியர்கள்.

Thanks to

No comments:

Post a Comment