FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, October 28, 2013

32 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தாமதம் இல்லை: அசத்துகிறார் மாற்று திறனாளி பெண் எழுத்தர்

27.10.2013,மும்பை :
மகாராஷ்டிராவில், இடுப்புக்கு கீழே செயல்படாத, 58 வயது அரசு பெண் அதிகாரி, 32 ஆண்டுகளாக, ஒரு நிமிடம் கூட, அலுவலகத்திற்கு, தாமதமாக வந்ததில்லை; இம்மாதம் அவர் ஓய்வுபெறப் போகிறார்.

போலியோ பாதிப்பு:உமா மாகரே, 58, மும்பையில், மாநில சமூக நலத்துறையில் எழுத்தராக பணி புரிகிறார். சிறு குழந்தையாக இருக்கும் போதே, போலியோ நோய் பாதிப்புக்குள்ளான அந்தப் பெண்ணின், இடுப்புக்கு கீழே, உறுப்புகள் செயல்படாது.எனினும், பிறர் உதவி இல்லாமல், தானாவே தன் வேலைகள் அனைத்தையும் மேற்கொள்ளும் இவர், கடந்த, 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட, அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதில்லை.இதை பாராட்டி, உயரதிகாரிகள் இவருக்கு பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். இவரின் கணவர், கடந்த ஆண்டு இறந்து விட்டார்; அந்த துக்கத்திலும் இவர், அலுவலகம் வந்து சென்றுள்ளார்.இம்மாதம் ஓய்வுஇம்மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற உள்ள அவர், வேறு இனத்தை சேர்ந்த குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து வருகிறார். ஓய்வுக்குப் பிறகு, சமூக சேவை ஆற்றப் போவதாக கூறுகிறார்.'கை, கால் நன்றாக இருக்கும் பலரும், அலுவலகத்திற்கு தாமதமாக வரும் நிலையில், உடல் ஊனமுற்ற இவர், 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட தாமதமாக வந்ததில்லை என்பது உண்மையில் வியத்தகு சாதனை தான்' என்கின்றனர், சகஊழியர்கள்.

Thanks to

No comments:

Post a Comment