FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, October 28, 2013

32 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தாமதம் இல்லை: அசத்துகிறார் மாற்று திறனாளி பெண் எழுத்தர்

27.10.2013,மும்பை :
மகாராஷ்டிராவில், இடுப்புக்கு கீழே செயல்படாத, 58 வயது அரசு பெண் அதிகாரி, 32 ஆண்டுகளாக, ஒரு நிமிடம் கூட, அலுவலகத்திற்கு, தாமதமாக வந்ததில்லை; இம்மாதம் அவர் ஓய்வுபெறப் போகிறார்.

போலியோ பாதிப்பு:உமா மாகரே, 58, மும்பையில், மாநில சமூக நலத்துறையில் எழுத்தராக பணி புரிகிறார். சிறு குழந்தையாக இருக்கும் போதே, போலியோ நோய் பாதிப்புக்குள்ளான அந்தப் பெண்ணின், இடுப்புக்கு கீழே, உறுப்புகள் செயல்படாது.எனினும், பிறர் உதவி இல்லாமல், தானாவே தன் வேலைகள் அனைத்தையும் மேற்கொள்ளும் இவர், கடந்த, 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட, அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதில்லை.இதை பாராட்டி, உயரதிகாரிகள் இவருக்கு பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். இவரின் கணவர், கடந்த ஆண்டு இறந்து விட்டார்; அந்த துக்கத்திலும் இவர், அலுவலகம் வந்து சென்றுள்ளார்.இம்மாதம் ஓய்வுஇம்மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற உள்ள அவர், வேறு இனத்தை சேர்ந்த குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து வருகிறார். ஓய்வுக்குப் பிறகு, சமூக சேவை ஆற்றப் போவதாக கூறுகிறார்.'கை, கால் நன்றாக இருக்கும் பலரும், அலுவலகத்திற்கு தாமதமாக வரும் நிலையில், உடல் ஊனமுற்ற இவர், 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட தாமதமாக வந்ததில்லை என்பது உண்மையில் வியத்தகு சாதனை தான்' என்கின்றனர், சகஊழியர்கள்.

Thanks to

No comments:

Post a Comment