FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, October 30, 2013

காலில் மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை சஸ்பெண்ட்

30.10.2013, அகோலா: வாய் பேசமுடியாத, காதுகேளாத மாணவர்களை, தனது காலை மசாஜ் செய்யும்படி கூறிய அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கான அரசு பள்ளியில் 7ம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றுபவர் சீத்தல் அவ்சர். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு பலவித தொந்தரவுகளை அளித்துள்ளார். ஆசிரியை பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தாலும் மாணவர்களுக்கு அடிதான் கிடைத்துள்ளது. வகுப்பு நேரத்தில் ஏதாவது ஒரு மாணவன், தனது காலை மசாஜ் செய்துவிட வேண்டும் என்பதை சீத்தல் வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆசிரியையின் வரம்பு மீறிய தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய மாணவன் ஒருவன், ஆசிரியையின் கால் மசாஜ் செய்யப்படும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து கல்வி அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் செய்தான். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆசிரியை தவறு செய்தது உண்மை என நிரூபிக்கப்பட்டதால், அவரை சஸ்பெண்ட் செய்ய விசாரணை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆசிரியை சீத்தல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Thanks to

No comments:

Post a Comment