FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, October 30, 2013

காலில் மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை சஸ்பெண்ட்

30.10.2013, அகோலா: வாய் பேசமுடியாத, காதுகேளாத மாணவர்களை, தனது காலை மசாஜ் செய்யும்படி கூறிய அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கான அரசு பள்ளியில் 7ம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றுபவர் சீத்தல் அவ்சர். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு பலவித தொந்தரவுகளை அளித்துள்ளார். ஆசிரியை பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தாலும் மாணவர்களுக்கு அடிதான் கிடைத்துள்ளது. வகுப்பு நேரத்தில் ஏதாவது ஒரு மாணவன், தனது காலை மசாஜ் செய்துவிட வேண்டும் என்பதை சீத்தல் வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆசிரியையின் வரம்பு மீறிய தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய மாணவன் ஒருவன், ஆசிரியையின் கால் மசாஜ் செய்யப்படும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து கல்வி அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் செய்தான். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆசிரியை தவறு செய்தது உண்மை என நிரூபிக்கப்பட்டதால், அவரை சஸ்பெண்ட் செய்ய விசாரணை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆசிரியை சீத்தல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Thanks to

No comments:

Post a Comment