FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, October 11, 2013

தணிக்கை விளக்கம்

குழுவில் குறிப்பிட்ட காலத்தில் நடைப்பெற்ற நிதி மற்றும் பிற நடவடிக்கைகளை தகுதி பெற்ற நபர்களால் முறைப்படி ஆய்வு செய்வது, அறிக்கை சமர்பிக்கும் வழிமுறையே தணிக்கையாகும்.

தணிக்கையின் சிறப்பம்சங்கள்:
  •  குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை நடத்தப்படுதல்.
  • வரவு செலவு புத்தகங்கள், ஆவணங்களை சரிபார்த்தல்.
  • முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தல்.
  • குழு சாராத வெளி நபரால் செய்யப்படுதல் ஆகியவை ஆகும்.
தணிக்கையின் முக்கியத்துவம்:
  • குழுவின் நிதி நிலையை அறிந்து கொள்வதற்காக.
  • குழுவின் நம்பகத்தன்மையை உறிதி செய்து கொள்ள.
  • குழுவில் பதிவேடுகள் பராமரித்தலில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்காக.
  • குழுவின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக.
  • குழு வெளிக்கடன் பெற தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ள.
  • குழுவில் நிதிமுறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அதனை கண்டறிந்து சரிசெய்து கொள்வதற்காக.
தணிக்கையின் வகைகள்:
  1. நிதித் தணிக்கை (அ. உள்தணிக்கை, ஆ. வெளித் தணிக்கை)
  2. சமூகத் தணிக்கை
நிதித் தணிக்கை:

அ. உள்தணிக்கை: பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வரவு செலவு கணக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், குறைகள் இருப்பின் அதனை சரி செய்யவும் உள்நபர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே உள் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:
  • மூன்று மாதத்திற்கொரு முறை செய்யப்பட வேண்டும்.
  • தொண்டு நிறுவனப் பிரநிதியால் செய்யப்பட வேண்டும்.
  • குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
  • கட்டணம் வசூலிக்கப்பட வேண்டியதில்லை.
  • அறிக்கை தயாரிக்க வேண்டியதில்லை.
ஆ. வெளித் தணிக்கை: குழுவால் நிர்ணயிக்கப்பட்ட, ஆங்கீகாரம் பெற்ற தணிக்கையாளரால் வருடத்திற்கொரு முறை, முறைப்படி ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதே வெளித் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:
  • ஆண்டிற்கொரு முறை சட்டரீதியாக செய்யப்பட வேண்டும். ( ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை)
  • அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளரால் செய்யப்பட வேண்டும்.
  • கீழ்க் காணும் தணிக்கைகள் அறிக்கை செய்யப்பட வேண்டும்.
  1. பெறுதல் செலுத்துதல் அறிக்கை.
  2. வருவாய் செலவின அறிக்கை.
  3. இறுதி நிலைக் குறிப்பு.
  4. அனைத்து பதிவேடுகளையும், தணிக்கையின் போது சமர்பிக்க வேண்டும்.
  5. தணிக்கை கட்டணத்தை குழுவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  6. தணிக்கை அறிக்கை குழுவில் வாசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு குறைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
சமூகத் தணிக்கை: சுய உதவிக் குழுக்களின் சமூக ரீதியான நோக்கங்களை அடைவதற்காக செயல்படுத்தப்பட்ட செயல்பாடுகளை ஆண்டிற்கொருமுறை தணிக்கை செய்வதே சமூகத் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:

அ. தணிக்கைக்கு முன்பு பின்பற்றப்பட வேண்டியவை:
  • அனைத்து பதிவேடுகளும் முறைப்படி அவ்வப்போது எழுதப்பட வேண்டும்.
  • நிதியாண்டின் இறுதியிலிருந்து 3 மாதத்திற்குள் தொண்டு நிறுவனம் (அ) கூட்டமைப்பின் வழிகாட்டுதலுடன் செய்து முடிக்க வேண்டும்.
  • வங்கியிருப்புச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
  • உறுப்பினர்கள், சேமிப்பு உறிதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
  • உறுப்பினர்களின் கடன் நிலுவை உறுதிச்சான்று, உறுப்பினர்களின் கையெழுத்துடன் பெறப்பட வேண்டும்.
ஆ. தணிக்கைக்குப் பின்பு, பின்பற்றப்பட வேண்டியவை:
  • தணிக்கை அறிக்கை பற்றி உறுப்பினர்களுக்கு தெளிவடைய வைத்தல்.
  • தணிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும் முயற்சி எடுத்தல்.
  • தணிக்கை அறிக்கையை பாதுகாத்து பின்னர் தேவைகளுக்கு பயன்படுத்துதல்.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

No comments:

Post a Comment