FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, October 11, 2013

தணிக்கை விளக்கம்

குழுவில் குறிப்பிட்ட காலத்தில் நடைப்பெற்ற நிதி மற்றும் பிற நடவடிக்கைகளை தகுதி பெற்ற நபர்களால் முறைப்படி ஆய்வு செய்வது, அறிக்கை சமர்பிக்கும் வழிமுறையே தணிக்கையாகும்.

தணிக்கையின் சிறப்பம்சங்கள்:
  •  குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை நடத்தப்படுதல்.
  • வரவு செலவு புத்தகங்கள், ஆவணங்களை சரிபார்த்தல்.
  • முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தல்.
  • குழு சாராத வெளி நபரால் செய்யப்படுதல் ஆகியவை ஆகும்.
தணிக்கையின் முக்கியத்துவம்:
  • குழுவின் நிதி நிலையை அறிந்து கொள்வதற்காக.
  • குழுவின் நம்பகத்தன்மையை உறிதி செய்து கொள்ள.
  • குழுவில் பதிவேடுகள் பராமரித்தலில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்காக.
  • குழுவின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக.
  • குழு வெளிக்கடன் பெற தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ள.
  • குழுவில் நிதிமுறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அதனை கண்டறிந்து சரிசெய்து கொள்வதற்காக.
தணிக்கையின் வகைகள்:
  1. நிதித் தணிக்கை (அ. உள்தணிக்கை, ஆ. வெளித் தணிக்கை)
  2. சமூகத் தணிக்கை
நிதித் தணிக்கை:

அ. உள்தணிக்கை: பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வரவு செலவு கணக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், குறைகள் இருப்பின் அதனை சரி செய்யவும் உள்நபர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே உள் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:
  • மூன்று மாதத்திற்கொரு முறை செய்யப்பட வேண்டும்.
  • தொண்டு நிறுவனப் பிரநிதியால் செய்யப்பட வேண்டும்.
  • குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
  • கட்டணம் வசூலிக்கப்பட வேண்டியதில்லை.
  • அறிக்கை தயாரிக்க வேண்டியதில்லை.
ஆ. வெளித் தணிக்கை: குழுவால் நிர்ணயிக்கப்பட்ட, ஆங்கீகாரம் பெற்ற தணிக்கையாளரால் வருடத்திற்கொரு முறை, முறைப்படி ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதே வெளித் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:
  • ஆண்டிற்கொரு முறை சட்டரீதியாக செய்யப்பட வேண்டும். ( ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை)
  • அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளரால் செய்யப்பட வேண்டும்.
  • கீழ்க் காணும் தணிக்கைகள் அறிக்கை செய்யப்பட வேண்டும்.
  1. பெறுதல் செலுத்துதல் அறிக்கை.
  2. வருவாய் செலவின அறிக்கை.
  3. இறுதி நிலைக் குறிப்பு.
  4. அனைத்து பதிவேடுகளையும், தணிக்கையின் போது சமர்பிக்க வேண்டும்.
  5. தணிக்கை கட்டணத்தை குழுவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  6. தணிக்கை அறிக்கை குழுவில் வாசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு குறைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
சமூகத் தணிக்கை: சுய உதவிக் குழுக்களின் சமூக ரீதியான நோக்கங்களை அடைவதற்காக செயல்படுத்தப்பட்ட செயல்பாடுகளை ஆண்டிற்கொருமுறை தணிக்கை செய்வதே சமூகத் தணிக்கையாகும்.

முக்கிய அம்சங்கள்:

அ. தணிக்கைக்கு முன்பு பின்பற்றப்பட வேண்டியவை:
  • அனைத்து பதிவேடுகளும் முறைப்படி அவ்வப்போது எழுதப்பட வேண்டும்.
  • நிதியாண்டின் இறுதியிலிருந்து 3 மாதத்திற்குள் தொண்டு நிறுவனம் (அ) கூட்டமைப்பின் வழிகாட்டுதலுடன் செய்து முடிக்க வேண்டும்.
  • வங்கியிருப்புச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
  • உறுப்பினர்கள், சேமிப்பு உறிதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
  • உறுப்பினர்களின் கடன் நிலுவை உறுதிச்சான்று, உறுப்பினர்களின் கையெழுத்துடன் பெறப்பட வேண்டும்.
ஆ. தணிக்கைக்குப் பின்பு, பின்பற்றப்பட வேண்டியவை:
  • தணிக்கை அறிக்கை பற்றி உறுப்பினர்களுக்கு தெளிவடைய வைத்தல்.
  • தணிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும் முயற்சி எடுத்தல்.
  • தணிக்கை அறிக்கையை பாதுகாத்து பின்னர் தேவைகளுக்கு பயன்படுத்துதல்.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

No comments:

Post a Comment