FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, October 8, 2013

சகல துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு;சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

08.10.2013,
இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள், சகல துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இதை மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கும்படி, மாற்றுத் திறனாளிகள், நீண்ட காலமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் கூட சென்னையில் பல நாட்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசின் அனைத்து துறைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில், மாற்றத் திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் உரிமைகளை, மத்திய, மாநில அரசுகள், பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும், எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதை கணக்கிடும்படி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிற்குக்கு உத்தரவிட்டு, மூன்று சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

Thanks to

No comments:

Post a Comment