FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, October 8, 2013

சகல துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு;சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

08.10.2013,
இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள், சகல துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இதை மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கும்படி, மாற்றுத் திறனாளிகள், நீண்ட காலமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் கூட சென்னையில் பல நாட்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசின் அனைத்து துறைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில், மாற்றத் திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் உரிமைகளை, மத்திய, மாநில அரசுகள், பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும், எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதை கணக்கிடும்படி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிற்குக்கு உத்தரவிட்டு, மூன்று சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

Thanks to

No comments:

Post a Comment