FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, October 24, 2013

பொது விசாரணையை புறக்கணித்த கமிஷனர் : நம்பிக்கை இழக்கும் மாற்றுத்திறனாளிகள்

21.10.2013
சென்னையில், கடந்த சனிக்கிழமை நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை, துறையின் கமிஷனர், ஜெயக்கொடி புறக்கணித்தார். இதனால், அரசு தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்து வருவதாக, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு, அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கான கூட்டமைப்பு இணைந்து, சென்னையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை நடத்தின. இதில், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, மனித உரிமை செயல்பாட்டாளர் ஓஸி பெர்னாண்டஸ், எழுத்தாளர் கீதா, மகளிர் ஆணைய செயலர், வத்சலா குமாரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் துணை இயக்குநர், ரவீந்திரநாத்சிங், முன்னாள் நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் செயலர், சிம்மச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் குறையை தெரிவித்தனர்.

பரமேஸ்வரி, திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, விளுப்பங்குடி, என் சொந்த ஊர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் என்பவருடன், திருமணம் நடந்தது. சந்தேகப் புத்தி கொண்ட என் கணவர், எப்போதும் வீ"ட்டில் அடைத்தே கொடுமை படுத்துவார். அதனால், விவகாரத்து கோரினோம். வரதட்சணையாக கொடுத்த நகைகளை கேட்டோம். ஒரு நாள், காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, என்னையும், என் அம்மாவையும் அரிவாளால் வெட்டினார். அதில் என் அம்மா இறந்தார்; எனது வலது கை துண்டானது. இருந்தாலும், இரண்டு மாதத்தில், அவர் ஜாமினில் வெளியே வந்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை, என் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழந்து கொண்டிருக்கிறேன்.

மோகனப்ரியா, மதுரை: மதுரை, பசுமலையில் உள்ள பைக்கரா நூலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவது, வழக்கம். ஆனால், இன்று வரை எனக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை; விடுப்பும் அளிக்கப்படவில்லை. இது குறித்து, அனைத்து அதிகாரிகளிடமும் முறையிட்டும் எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அக்கறை இல்லாத கமிஷனர்! : மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணை நடந்த போது, அத்துறையின் கமிஷனர் ஜெயக்கொடி, கலந்து கொள்ளாததால், மாற்றுத்திறனாளி அமைப்புகள் கோபம் அடைந்துள்ளன. இது குறித்து, பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள, மாற்றுத்திறனாளிகள் தங்களை குறைகளை, அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, வந்துள்ளனர். ஆனால், துறையின் கமிஷனர், மாற்றுத்திறனாளிகளின் நலனில், துளியும் அக்கறை இல்லாமல், நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். இதன் மூலம், அரசை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள், வேதனை அடைந்துள்ளனர். மேலும், அரசு, தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thanks to

No comments:

Post a Comment