FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, October 24, 2013

பொது விசாரணையை புறக்கணித்த கமிஷனர் : நம்பிக்கை இழக்கும் மாற்றுத்திறனாளிகள்

21.10.2013
சென்னையில், கடந்த சனிக்கிழமை நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை, துறையின் கமிஷனர், ஜெயக்கொடி புறக்கணித்தார். இதனால், அரசு தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்து வருவதாக, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு, அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கான கூட்டமைப்பு இணைந்து, சென்னையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை நடத்தின. இதில், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, மனித உரிமை செயல்பாட்டாளர் ஓஸி பெர்னாண்டஸ், எழுத்தாளர் கீதா, மகளிர் ஆணைய செயலர், வத்சலா குமாரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் துணை இயக்குநர், ரவீந்திரநாத்சிங், முன்னாள் நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் செயலர், சிம்மச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் குறையை தெரிவித்தனர்.

பரமேஸ்வரி, திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, விளுப்பங்குடி, என் சொந்த ஊர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் என்பவருடன், திருமணம் நடந்தது. சந்தேகப் புத்தி கொண்ட என் கணவர், எப்போதும் வீ"ட்டில் அடைத்தே கொடுமை படுத்துவார். அதனால், விவகாரத்து கோரினோம். வரதட்சணையாக கொடுத்த நகைகளை கேட்டோம். ஒரு நாள், காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, என்னையும், என் அம்மாவையும் அரிவாளால் வெட்டினார். அதில் என் அம்மா இறந்தார்; எனது வலது கை துண்டானது. இருந்தாலும், இரண்டு மாதத்தில், அவர் ஜாமினில் வெளியே வந்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை, என் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழந்து கொண்டிருக்கிறேன்.

மோகனப்ரியா, மதுரை: மதுரை, பசுமலையில் உள்ள பைக்கரா நூலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவது, வழக்கம். ஆனால், இன்று வரை எனக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை; விடுப்பும் அளிக்கப்படவில்லை. இது குறித்து, அனைத்து அதிகாரிகளிடமும் முறையிட்டும் எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அக்கறை இல்லாத கமிஷனர்! : மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணை நடந்த போது, அத்துறையின் கமிஷனர் ஜெயக்கொடி, கலந்து கொள்ளாததால், மாற்றுத்திறனாளி அமைப்புகள் கோபம் அடைந்துள்ளன. இது குறித்து, பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள, மாற்றுத்திறனாளிகள் தங்களை குறைகளை, அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, வந்துள்ளனர். ஆனால், துறையின் கமிஷனர், மாற்றுத்திறனாளிகளின் நலனில், துளியும் அக்கறை இல்லாமல், நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். இதன் மூலம், அரசை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள், வேதனை அடைந்துள்ளனர். மேலும், அரசு, தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thanks to

No comments:

Post a Comment