FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, October 24, 2013

பொது விசாரணையை புறக்கணித்த கமிஷனர் : நம்பிக்கை இழக்கும் மாற்றுத்திறனாளிகள்

21.10.2013
சென்னையில், கடந்த சனிக்கிழமை நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை, துறையின் கமிஷனர், ஜெயக்கொடி புறக்கணித்தார். இதனால், அரசு தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்து வருவதாக, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு, அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கான கூட்டமைப்பு இணைந்து, சென்னையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணையை நடத்தின. இதில், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, மனித உரிமை செயல்பாட்டாளர் ஓஸி பெர்னாண்டஸ், எழுத்தாளர் கீதா, மகளிர் ஆணைய செயலர், வத்சலா குமாரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் துணை இயக்குநர், ரவீந்திரநாத்சிங், முன்னாள் நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் செயலர், சிம்மச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் குறையை தெரிவித்தனர்.

பரமேஸ்வரி, திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, விளுப்பங்குடி, என் சொந்த ஊர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் என்பவருடன், திருமணம் நடந்தது. சந்தேகப் புத்தி கொண்ட என் கணவர், எப்போதும் வீ"ட்டில் அடைத்தே கொடுமை படுத்துவார். அதனால், விவகாரத்து கோரினோம். வரதட்சணையாக கொடுத்த நகைகளை கேட்டோம். ஒரு நாள், காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, என்னையும், என் அம்மாவையும் அரிவாளால் வெட்டினார். அதில் என் அம்மா இறந்தார்; எனது வலது கை துண்டானது. இருந்தாலும், இரண்டு மாதத்தில், அவர் ஜாமினில் வெளியே வந்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை, என் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வாழந்து கொண்டிருக்கிறேன்.

மோகனப்ரியா, மதுரை: மதுரை, பசுமலையில் உள்ள பைக்கரா நூலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவது, வழக்கம். ஆனால், இன்று வரை எனக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை; விடுப்பும் அளிக்கப்படவில்லை. இது குறித்து, அனைத்து அதிகாரிகளிடமும் முறையிட்டும் எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அக்கறை இல்லாத கமிஷனர்! : மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விசாரணை நடந்த போது, அத்துறையின் கமிஷனர் ஜெயக்கொடி, கலந்து கொள்ளாததால், மாற்றுத்திறனாளி அமைப்புகள் கோபம் அடைந்துள்ளன. இது குறித்து, பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள, மாற்றுத்திறனாளிகள் தங்களை குறைகளை, அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, வந்துள்ளனர். ஆனால், துறையின் கமிஷனர், மாற்றுத்திறனாளிகளின் நலனில், துளியும் அக்கறை இல்லாமல், நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். இதன் மூலம், அரசை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள், வேதனை அடைந்துள்ளனர். மேலும், அரசு, தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thanks to

No comments:

Post a Comment