FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, October 11, 2013

நிலைத்த தன்மை

சுய உதவிக்குழு ஓற்றுமையுடனும், அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்புடனும் செயல்பட்டு, பிற நிறுவனங்களை முழுமையாக சார்ந்திருப்பதை தவிர்த்து, குழு உறுப்பினர்களின், சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைய தொடர்ந்து செயல்படுவதே நிலைத்த தன்மை ஆகும்.

நீண்ட நாட்களாக செயல்பட்டாலே நிலைத்த தன்மை அடைந்த குழுவா :
  • குழு நிலைத்த தன்மை அடைய காலம் மட்டுமே ஒரு அளவுகோல் அல்ல.
  • 3 ஆண்டுகள் ஆகிவிட்டாலே நிலைத்த தன்மை அடைந்து விட்டதாக கருத கூடாது.
  • குழுவின் செயல்பாடுகளே அதன் நிலைத்த தன்மையை நிர்ணயிக்கும.
நிலைத்த தன்மையை அடைய:
  • குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஓற்றுமையை வளர்த்துக் கொண்டால்.
  • குழு பொறுப்பாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்.
  • திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் அனைத்து பயிற்சிகளிலும் கலந்து கொண்டால்.
  • அரசு திட்டங்களை நேரடியாக பெற்று முழு பலனை அடைந்தால்.
  • அனைத்து நடவடிக்கைகளையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் செய்தால்.
  • முடிவுகளை சுயமாக எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டால்.
  • தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டால்.
குழு நிலைத்த தன்மையை அடைந்துவிட்டதா என்பதை அறிய:
  • குழு, அனைத்து முடிவுகளையும், தானாக எடுத்து செயல்படுத்துகிறதா?
  • தொண்டு நிறுவனத்தையும், மகளிர் திட்ட அலுவலகத்தையும் முழுமையாக சாராமல் இருக்கிறதா?
  • குழு நிதி, உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளதா?
  • கிராம வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா?
  • சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா?
  • குழு, கூட்டமைப்பு செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்கிறதா?
  • உறுப்பினர்கள் போதிய வருமானம் தரக்கூடிய அளவில் தொழில்களில் ஈடுபடுகிறதா?
  • மேற்கூறிய செயல்களை ஒரு குழு முழுமையாக செயல்படுத்தினால் அக்குழு நிலைத்த தன்மை அடைந்து விட்டது என அறியலாம்.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

No comments:

Post a Comment