FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, October 11, 2013

கூட்டமைப்புகள்

கூட்டமைப்புகள்
பல சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து மகளிரின் சமூக, பொருளாதார மேம்பாட்டை அடையவும், சுய சார்புடன் நிலைத்த தன்மை பெறவும் தொடர்ந்து கூட்டாக செயல்படவும் ஜனநாயக அமைப்பே கூட்டமைப்பாகும்.

மகளிர் திட்டத்தின் கீழ் அமைக்க வேண்டிய கூட்டமைப்புகள்: 
  • பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் 
  • வட்டார அளவிலான கூட்டமைப்புகள் 
  • மாவட்ட அளவிலான கூட்டமைப்புகள்
எத்தெந்த குழுக்கள் கூட்டமைப்பில் சேரலாம்: 
  • ஓரே பஞ்சாயத்தில் செயல்படும் குழுக்கள் 
  • மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் குழுக்கள் 
  • கூட்டமைப்பில் தன்னார்வத்துடன் இணைந்து செயல்பட விரும்பும் குழுக்கள்
குழுவிலிருந்து கூட்டமைப்பிற்கு யார் வர வேண்டும்:
  • ஒவ்வொரு குழுவிலிருந்தும், ஊக்குனரும் ஓரு பிரதிநிதியும் கூட்டமைப்பு கூட்டத்திற்கு வரலாம். பிரதிநிதிக்கு பதிலாக விருப்பமுள்ள உறுப்பினரும் வரலாம்.  ஓவ்வொரு கூட்டத்திற்கும் வேறு வேறு நபர்கள் கலந்து கொள்ள கூடாது.  இரண்டாண்டிற்கொருமுறை சுழற்சி முறையில் கூட்டமைப்பில் பிரதிநிதித்துவம் மாற்றப்பட வேண்டும்.
எத்தனை நாட்களுக்கொருமுறை கூட்டம் நடத்த வேண்டும்: 
  • மாதம் ஓரு முறை நடத்த வேண்டும்.
  • தேவையென்றால் சிறப்பு கூட்டங்களும் நடத்தலாம்.
கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் : 

செயலாளர்  இணை செயலாளர்  பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பின் நோக்கங்கள்: 
  • சுய உதவிக் குழுக்கள், பிற நிறுவனங்களை நம்பியே இல்லாமல் சுயமாக இயங்கவும், நிலைத்த தன்மை பெற்று தொடர்ச்சியாக செயல்படச் செய்யவும். 
  • சமுதாயத்தில் பின்தங்கிய அனைத்து பெண்களையும் குழுக்களாக அமைக்க. 
  • பஞ்சாயத்து அளவிலான பிரச்சனைகளை இணைந்து தீர்த்துக் கொள்ள. 
  • கிராம அடிப்டை மேம்பாட்டிற்காக,ஊராட்சி மன்றத்துடன் இணைந்து செயல்பட. 
  • குழுக்களுக்கு கடன் வசதிகளையும், அரசு நலத் திட்டங்களையும் பெற வங்கி மற்றும் அரசு துறைகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற.
தகவல் மூலம் : மகளிர் திட்ட பயுற்றுநர் கையேளடு, தமிழ்நாடு மகளீர் நலமேம்பாட்டு நிறுவனம், சென்னை - 32

No comments:

Post a Comment