FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, October 23, 2013

பாக்குமட்டை தட்டு தயாரிப்பில் மாற்றுத் திறனாளிகள்

23.10.2013,

சென்னை தியாகராய நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில்முனைவு மையத்தில் பாக்குமட்டை தயாரிப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளான சந்தோஷ், லட்சுமி, கார்த்திக், விக்னேஷ், சாய்சந்தோஷ் ஆகிய 5 பேர் அலுவலக கவர்கள், கோப்புகள், காகித பைகள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தங்களது பெயரில் தலா ரூ.50 ஆயிரம் கடன் பெற்று ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் மூலம் பல்வேறு அளவுகளில் தினமும் 500 பாக்குமட்டை தட்டுகள் வரை தயாரிக்க உள்ளனர். இந்த தட்டுகள் ரூ.1.50 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக என்லைட்டன் தொழில்முனைவகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய அறக்கட்டளையின் தலைவர் பூனம் நடராஜன் தொடங்கி வைத்தார். கோட்டூர் வித்யாசாகர் தொண்டுநிறுவனத்தின் முதல்வர் கல்பனா,தொழில்முனைவு மையத்தின் அமைப்பாளர்கள் பாரதி, சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment