FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, October 23, 2013

பாக்குமட்டை தட்டு தயாரிப்பில் மாற்றுத் திறனாளிகள்

23.10.2013,

சென்னை தியாகராய நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில்முனைவு மையத்தில் பாக்குமட்டை தயாரிப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளான சந்தோஷ், லட்சுமி, கார்த்திக், விக்னேஷ், சாய்சந்தோஷ் ஆகிய 5 பேர் அலுவலக கவர்கள், கோப்புகள், காகித பைகள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தங்களது பெயரில் தலா ரூ.50 ஆயிரம் கடன் பெற்று ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் மூலம் பல்வேறு அளவுகளில் தினமும் 500 பாக்குமட்டை தட்டுகள் வரை தயாரிக்க உள்ளனர். இந்த தட்டுகள் ரூ.1.50 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக என்லைட்டன் தொழில்முனைவகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய அறக்கட்டளையின் தலைவர் பூனம் நடராஜன் தொடங்கி வைத்தார். கோட்டூர் வித்யாசாகர் தொண்டுநிறுவனத்தின் முதல்வர் கல்பனா,தொழில்முனைவு மையத்தின் அமைப்பாளர்கள் பாரதி, சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment