FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 23, 2013

பாக்குமட்டை தட்டு தயாரிப்பில் மாற்றுத் திறனாளிகள்

23.10.2013,

சென்னை தியாகராய நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில்முனைவு மையத்தில் பாக்குமட்டை தயாரிப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளான சந்தோஷ், லட்சுமி, கார்த்திக், விக்னேஷ், சாய்சந்தோஷ் ஆகிய 5 பேர் அலுவலக கவர்கள், கோப்புகள், காகித பைகள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தங்களது பெயரில் தலா ரூ.50 ஆயிரம் கடன் பெற்று ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் மூலம் பல்வேறு அளவுகளில் தினமும் 500 பாக்குமட்டை தட்டுகள் வரை தயாரிக்க உள்ளனர். இந்த தட்டுகள் ரூ.1.50 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக என்லைட்டன் தொழில்முனைவகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய அறக்கட்டளையின் தலைவர் பூனம் நடராஜன் தொடங்கி வைத்தார். கோட்டூர் வித்யாசாகர் தொண்டுநிறுவனத்தின் முதல்வர் கல்பனா,தொழில்முனைவு மையத்தின் அமைப்பாளர்கள் பாரதி, சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment