FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 30, 2013

காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளிக்குழந்தைகளை சித்ரவதை செய்த ஆசிரியை நீக்கம்

30.10.2013, அகோலா: மகாராஷ்டிராவில், காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளிக் குழந்தைகளை, கால் பிடிக்கச் செய்து, கொடுமைப்படுத்திய ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

அகோலா என்ற இடத்தில், மாநில அரசு சார்பில், காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பள்ளி உள்ளது. அங்கு, ஷீத்தல் என்பவர், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர், அந்தப் பரிதாபக் குழந்தைகளை, பலவிதமாக தொந்தரவு செய்து வந்துள்ளார். குழந்தைகளை அடிப்பது, கால் கடுக்க நிற்க வைப்பது, சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்துவது என, பல விதமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளார். அடிக்கடி, தன் காலைப் பிடித்து விடுமாறு, குழந்தைகளை அவர் நிர்பந்திப்பது வழக்கம். அந்த கொடுமைக்கார ஆசிரியையை வசமாக மாட்டி விட நினைத்த மாணவர் ஒருவர், அவரின் தொந்தரவுகளை, ரகசியமாக, மொபைல் போனில் படமாகப் பிடித்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதையடுத்து, நேற்று முன்தினம், ஆசிரியை ஷீத்தல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரின் கொடுமை காட்சிகள், அப்பகுதி, 'டிவி'யில் நேற்று வெளியானதை அடுத்து, வெகுண்டெழுந்த பொதுமக்கள், பள்ளி முன் கூடி, ஆசிரியையை, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என, போராட்டம் நடத்தினர்.

Thanks to

No comments:

Post a Comment