FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, October 30, 2013

காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளிக்குழந்தைகளை சித்ரவதை செய்த ஆசிரியை நீக்கம்

30.10.2013, அகோலா: மகாராஷ்டிராவில், காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளிக் குழந்தைகளை, கால் பிடிக்கச் செய்து, கொடுமைப்படுத்திய ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

அகோலா என்ற இடத்தில், மாநில அரசு சார்பில், காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பள்ளி உள்ளது. அங்கு, ஷீத்தல் என்பவர், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர், அந்தப் பரிதாபக் குழந்தைகளை, பலவிதமாக தொந்தரவு செய்து வந்துள்ளார். குழந்தைகளை அடிப்பது, கால் கடுக்க நிற்க வைப்பது, சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்துவது என, பல விதமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளார். அடிக்கடி, தன் காலைப் பிடித்து விடுமாறு, குழந்தைகளை அவர் நிர்பந்திப்பது வழக்கம். அந்த கொடுமைக்கார ஆசிரியையை வசமாக மாட்டி விட நினைத்த மாணவர் ஒருவர், அவரின் தொந்தரவுகளை, ரகசியமாக, மொபைல் போனில் படமாகப் பிடித்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதையடுத்து, நேற்று முன்தினம், ஆசிரியை ஷீத்தல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரின் கொடுமை காட்சிகள், அப்பகுதி, 'டிவி'யில் நேற்று வெளியானதை அடுத்து, வெகுண்டெழுந்த பொதுமக்கள், பள்ளி முன் கூடி, ஆசிரியையை, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என, போராட்டம் நடத்தினர்.

Thanks to

No comments:

Post a Comment