FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, October 19, 2013

மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு ஐ.நா. திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல்

அனைத்து அம்சங்களிலும் மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் குமாரி செல்ஜா தலைமையிலான குழுவினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை தாராளமாகக் கிடைப்பதற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என சர்வதேச சமுதாயத்துக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது. இதில், மாற்றுத்திறனாளி களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. "இந்தக் கூட்டத்தின் மூலம் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த தீர்மானம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணம். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கு இந்தத் தீர்மானம் வழிகாட்டியாக இருக்கும்" என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment