FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, October 19, 2013

மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு ஐ.நா. திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல்

அனைத்து அம்சங்களிலும் மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் குமாரி செல்ஜா தலைமையிலான குழுவினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை தாராளமாகக் கிடைப்பதற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என சர்வதேச சமுதாயத்துக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது. இதில், மாற்றுத்திறனாளி களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. "இந்தக் கூட்டத்தின் மூலம் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த தீர்மானம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணம். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கு இந்தத் தீர்மானம் வழிகாட்டியாக இருக்கும்" என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment