FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, October 19, 2013

மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு ஐ.நா. திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல்

அனைத்து அம்சங்களிலும் மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் குமாரி செல்ஜா தலைமையிலான குழுவினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை தாராளமாகக் கிடைப்பதற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என சர்வதேச சமுதாயத்துக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது. இதில், மாற்றுத்திறனாளி களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. "இந்தக் கூட்டத்தின் மூலம் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த தீர்மானம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணம். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கு இந்தத் தீர்மானம் வழிகாட்டியாக இருக்கும்" என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment