FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, October 11, 2014

உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அழைப்பு

சென்னை , 09 October 2014

சென்னையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பில்லாமல் உள்ள இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி., எச்.எஸ்.சி., பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போர் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டும்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உதவித் தொகை விண்ணப்பங்களை பெற நந்தனம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வரும் 40 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வயது வரம்பு 45. விண்ணப்பிப்போர் தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்கவேண்டும். அரசு நிர்ணயித்துள்ள பிற தகுதிகளையும் பெற்றிருக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டு உயிர் பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தகுதி, குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.

ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment