FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 8, 2014

மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: திண்டுக்கல்லில் அறிமுகம்

 07.10.2014,திண்டுக்கல் :
மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் புதிய திட்டம் முதல்முறையாக திண்டுக்கல்லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் இருந்து தொலைவில் உள்ள கிராம மக்களுக்காக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாம் நடக்கும் கிராமங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவர். அதேபோல் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமமான வடகரைபாறை பழங்குடியினர் குடியிருப்பில் சிறப்பு முகாம் இன்று நடக்க உள்ளது.மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மதிவாணன் கூறியதாவது: "கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மலைக்கிராம மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.
நன்றி தினமலர்

No comments:

Post a Comment