FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, October 8, 2014

மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: திண்டுக்கல்லில் அறிமுகம்

 07.10.2014,திண்டுக்கல் :
மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் புதிய திட்டம் முதல்முறையாக திண்டுக்கல்லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் இருந்து தொலைவில் உள்ள கிராம மக்களுக்காக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாம் நடக்கும் கிராமங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவர். அதேபோல் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமமான வடகரைபாறை பழங்குடியினர் குடியிருப்பில் சிறப்பு முகாம் இன்று நடக்க உள்ளது.மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மதிவாணன் கூறியதாவது: "கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மலைக்கிராம மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.
நன்றி தினமலர்

No comments:

Post a Comment