FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, October 8, 2014

மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: திண்டுக்கல்லில் அறிமுகம்

 07.10.2014,திண்டுக்கல் :
மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் புதிய திட்டம் முதல்முறையாக திண்டுக்கல்லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் இருந்து தொலைவில் உள்ள கிராம மக்களுக்காக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாம் நடக்கும் கிராமங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவர். அதேபோல் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமமான வடகரைபாறை பழங்குடியினர் குடியிருப்பில் சிறப்பு முகாம் இன்று நடக்க உள்ளது.மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மதிவாணன் கூறியதாவது: "கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மலைக்கிராம மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.
நன்றி தினமலர்

No comments:

Post a Comment