FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, October 8, 2014

மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்: திண்டுக்கல்லில் அறிமுகம்

 07.10.2014,திண்டுக்கல் :
மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் புதிய திட்டம் முதல்முறையாக திண்டுக்கல்லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் இருந்து தொலைவில் உள்ள கிராம மக்களுக்காக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாம் நடக்கும் கிராமங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவர். அதேபோல் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமமான வடகரைபாறை பழங்குடியினர் குடியிருப்பில் சிறப்பு முகாம் இன்று நடக்க உள்ளது.மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மதிவாணன் கூறியதாவது: "கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மலைக்கிராம மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.
நன்றி தினமலர்

No comments:

Post a Comment